search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் சேலம் மாவட்ட துணை தலைவர் ஜான் பெர்ணான்டஸ் தலைமை வகித்தார்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் சேலம் மாவட்ட துணை தலைவர் ஜான் பெர்ணான்டஸ் தலைமை வகித்தார். மேட்டூர் வட்ட தலைவர் அம்மாச்சி கண்டன உரை ஆற்றினார். இதில் 100 நாள் வேலை ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும், பண்டிகை காலம் நெருங்குவதால் தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாதந்தோறும் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் மகாத்மா தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதி திட்டம் சம்பந்தமாக மாற்றுத்திறனாளிகளுக்காக குறை கூட்டம் நடத்த வேண்டும், வீடு, கழிப்பிடம் போன்ற துறை சார்ந்த பயனுள்ள திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் சங்க பொறுப்பாளர்கள் கோபால், பவுல்ராஜ், நடராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×