search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீர்பாட்டிலால் கழுத்தில் குத்தி  இளம்பெண் தற்கொலை
    X

    தற்கொலை செய்து கொண்ட ஜெயலட்சுமி.

    பீர்பாட்டிலால் கழுத்தில் குத்தி இளம்பெண் தற்கொலை

    • சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் தமிழழகன் (32), இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர்.
    • மகள் காலாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தது தொடர்பாக தமிழழகன் கேட்டதால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருேக உள்ள காக்காவேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயலெட்சுமி (32), இவருக்கும் தருமபுரியை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 மற்றும் 11 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். இருவரும் அம்மாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளிகளில் 9 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன்-மனைவி பிரிந்தனர்.

    2-வது திருமணம்

    சேலம் எருமாபாளையத்தை சேர்ந்தவர் தமிழழகன் (32), இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். தமிழழகனும் மனைவியை பிரிந்து வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்த போது ஜெயலெட்சுமிக்கும், தமிழழ கனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேலம் அம்மாப்பேட்டை பூவாத்தாள் தெருவில் மகள்களுடன் வசித்து வந்தனர்.

    நேற்று மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த தமிழழகன், ஜெயலெட்சுமியுடன் தகரா றில் ஈடுபட்டார். அப்போது மகள் காலாண்டு தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தது தொடர்பாக தமிழழகன் கேட்டதால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயலெட்சுமி குக்கர் மூடியால் தமிழழகனை தாக்கினார். இதையடுத்து ஜெயலெட்சுமியை தமிழழகனும் தாக்கினார்.

    தற்கொலை

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயலெட்சுமி சமையல் அறையில் ஏற்கனவே உடைத்து தயாராக வைத்திருந்த பீ ர் பாட்டிலை எடுத்து நான் இருந்தால் தான் பிரச்சினை, நான் செத்து விடுகிறேன் என்ற கூறிய படி கழுத்தில் பீர் பாட்டிலால் தனக்கு தானே குத்தி கொண்டார்.

    இதனை பார்த்த தமிழழகனும், அவரது 2 மகள்களும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். பின்னர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி அவர் சிறிது நேரத்தில் துடி துடித்து சம்பவ இடத்திேலயே இறந்து விட்டார்.

    தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தமிழழகன் மற்றும் 2 மகள்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது-

    தமிழழகன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து ஜெயலெட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஜெயலெட்சுமியின் மூத்த மகள் மதிப்பெண் குறைந்தது குறித்து தமிழழகன் நேற்று கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் தமிழழகனும், ஜெயலெட்மியும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் உடைந்த ஜெயலெட்சுமி பீர் பாட்டிலை எடுத்து தனக்கு தானே கழுத்தில் குத்தி தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து ேபாலீசார் தமிழழகனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×