என் மலர்
சேலம்
- சிறையில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
- சேலம் மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆய்வு செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மாவட்ட சிறை உள்ளது.
இங்கு 200 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி உள்ளது. நேற்று வரை 34 விசாரணை கைதிகள், 4 தடுப்பு காவல் கைதிகள் என மொத்தம் 38 பேர் உள்ளனர் .
நேற்று சேலம் மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் தலைமையிலான போலீசார் மாவட்ட சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது சிறையில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
கைதிகளுக்கு உணவு வழங்குதல், உணவு தரம், உணவு பட்டியல் குறித்து கேட்டறிந்தனர். சிறையில் அடைத்து வைத்துள்ள கைதிகளின் பாதுகாப்பு, குறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
இதுகுறித்து சிறை போலீசார் கூறுகையில், சேலம் மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆய்வு செய்தனர். சமீபத்தில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமரா செயல்பாடுகள், பாதுகாப்பு, எந்த வகை உணவு வழங்கப்படுகிறது என்பது தொடர்பாகவும் இந்த ஆய்வு நடந்தது என கூறினர்.
- வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசக்தியை தீவிரமாக தேடி வந்தனர்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே குட்டிகரடு பகுதியை சேர்ந்தவர் நெசவு தொழிலாளி முருகன் (வயது 35). இவரது மனைவி சிவசக்தி (31). இந்த தம்பதிக்கு சரிமளா (10), அனிஷா (7), நிஷாந்த் (2) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி விடியற்காலையில் வீட்டில் இருந்து சிவசக்தி திடீரென மாயமானார். இதையடுத்து கணவர் முருகன் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து நங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசக்தியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு முருகன் வீட்டிற்கு அருகே உள்ள அவரது உறவினர் ராஜி என்பவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் சிவசக்தி நீரில் மூழ்கி பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தண்ணீர் தொட்டியில் கிடந்த சிவசக்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிவசக்தி எதற்காக அங்கு வந்தார்? எவ்வாறு தண்ணீரில் மூழ்கி இறந்தார்? என்பது குறித்து உறவினர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- அஜித்குமாரை வழக்கமாக வேலைக்கு அழைத்து செல்லும் நபர் இன்று காலை அவரது வீட்டிற்கு சென்றார்.
- சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் அஜித்குமார் (26), தச்சு தொழிலாளியான இவர் சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஜோதி (22)என்ற பெண்ணை காதலித்து வந்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்றிரவு மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த அஜித்குமார், மனைவி ஜோதியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் அப்போது மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ஜோதி அம்மாப்பேட்டை பழனியாண்டி மருத்துவமனை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் நள்ளிரவில் அஜித்குமார் வேறு ஒருவரிடம் செல்போனை வாங்கி மனைவியிடம் பேசினார். அப்போது மனைவியை வீட்டிற்கு வருமாறு கூறினார். ஆனால் ஜோதி மறுத்ததுடன் காலையில் வந்து விடுவதாக கூறினார்.
இந்தநிலையில் அஜித்குமாரை வழக்கமாக வேலைக்கு அழைத்து செல்லும் நபர் இன்று காலை அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அஜித்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் கிடந்தார். இதனை பார்த்த அவர் மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே அங்கு விரைந்து சென்ற உறவினர்கள் கதறினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் குழுவினர் பரிசோதனை செய்த போது அஜித்குமார் இறந்து விட்டது தெரிய வந்தது.
பின்னர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் அங்கு விரைந்து வந்து அஜித்குமார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுச்சத்திரம் அடுத்த பாய்ச்சல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடந்தபட்டி பகுதியில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட வருவாய்துறையின் சார்பில் கோவில் திறக்கப்பட்டது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பாய்ச்சல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடந்தபட்டி பகுதியில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 13 வருடங்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட வருவாய்துறையின் சார்பில் கோவில் திறக்கப்பட்டது.
ஏற்கனவே வழக்கமாக யார் பூைஜ செய்தார்களோ அந்த பூசாரிகளே பூஜை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் சார்பில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கோர்ட்டு உத்தரவுபடி பூசாரி நியமிக்க வேண்டும் என அமைதிபேச்சுவார்தையில் தீர்வு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
இதையடுத்து மற்றொரு தரப்பினர் கோர்ட்டு உத்தரவுபடி பூசாரி நியமித்து பூைஜ நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வெளிநடப்பு செய்தவர்கள் நாங்களும் பூசாரி நியமித்து பூைஜ செய்கிறோம் என கோரிக்கை வைத்தனர். அதற்கு மற்றொரு தரப்பினர் திருவிழா முடிந்து பிறகு அமைதி பேச்சுவார்தை நடத்தி யாரை நியமிக்கலாம் என முடிவு செய்யலாம் என தெரிவித்தனர்.
இதனால் மோதல் ஏற்பட்டு விடாமல் இருக்க முன்எச்சரிக்கையாக கோவில் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே பிரபல போட்டோ ஸ்டுடியோ இயங்கி வருகிறது.
- இந்த போட்டோ ஸ்டுடியோவில் இன்று காலை திடீரென புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே பிரபல போட்டோ ஸ்டுடியோ இயங்கி வருகிறது. இந்த போட்டோ ஸ்டுடியோவில் இன்று காலை திடீரென புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது. சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருந்த போதிலும் ஸ்டுடியோவில் இருந்த புகைப்படங்கள், புகைப்பட கருவிகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
இந்த சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
- குறிப்பாக தலைவாசல் பகுதியில் ½ மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை ெபய்தது.
கன மழை
குறிப்பாக தலைவாசல் பகுதியில் ½ மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது . தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாக இருந்தது. ேமலும் ஏற்காட்டில் வசிக்கும் மக்களும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
31 மி.மீ. மழை
மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 17 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கரியகோவில் 5, பெத்தநாயக்கன்பாளையம் 5, ஆனைமடுவு 4, கரியகோவில்1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 31 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
- கிராமப்புற விளைநிலங்களில் மழைக் காலங்களில் இயற்கையாகவே காளான்கள் ஏராளமாக விளைந்திருக்கும்.
- இயற்கையாக விளையும் காளான்கள் சுவை மிகுதியாக இருக்கும் என்பதோடு, உடலுக்கு உறுதியும் ஊட்டச்சத்தும் அளிக்கும்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமப்புற விளைநிலங்களில் மழைக் காலங்களில் இயற்கையாகவே காளான்கள் ஏராளமாக விளைந்திருக்கும். பல்வேறு வகை காளான்கள் முளைத்திருக்கும் என்பதால் காளான் வகை, தன்மைகளை அறிந்த விவசாயிகள், உண்பதற்கு உகந்த காளான்களை கண்டறிந்து பறித்து, உப்பு, காரம் சேர்த்து சமைத்து உண்பார்கள். இயற்கையாக விளையும் காளான்கள் சுவை மிகுதியாக இருக்கும் என்பதோடு, உடலுக்கு உறுதியும் ஊட்டச்சத்தும் அளிக்கும்.
அண்மைக்காலமாக விளை நிலங்களில் ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லிகள் தெளிப்பது அதிகரித்து வருவதால் விளைநிலங்களின் தன்மை மாறுபட்டு மழைக்காலங்களில் கூட இயற்கையாக காளான்கள் விளைவது அரிதாகிவிட்டது.
மழைக்காலங்களில்
வாழப்பாடி பகுதியில் கல்வராயன்மலை, அருநூற்று மலை, ஜம்பூத்து மலை, சந்து மலை கிராமங்களில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடு குறைவாக காணப்படுவதால் இன்றளவிலும் மழைக்கா லங்களில் இயற்கையாக காளான்கள் விளைந்து வருகிறது.
வாழப்பாடி பகுதியில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்து வருகிறது. காளான் விளைவதற்கு ஏற்ற ஈரப்பதமான, குளுமையான சூழ்நிலை நிலவுவதால் வாழப்பாடி அடுத்த கல்யா ணகிரி, இடையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விளை நிலங்களில் ஆங்காங்கே உண்பதற்கு உகந்த காளான்கள் விளைந்துள்ளன. இந்த காளான்களை இனங்கண்ட றிந்து அவற்றைப் பறித்து சமைத்து உண்பதில் கிராம மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இயற்கை முறையில்...
இயற்கை காளான்கள் அரி தாகி வருவதால் கிராமப்புற மக்களும் செயற்கையாக விளை விக்கப்படும் காளான்களை விலை கொடுத்து வாங்கி சமைத்து உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கையாக காளான்கள் விளைவதற்கு விவசாயிகள் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்து, அங்கக இயற்கை முறை சாகுபடியில் ஈடுபட வேண்டும்.
விளைநிலத்தில் தானாக விளையும் கிடக்கும் அனைத்து காளான்களும் உண்பதற்கு உகந்ததாக இருக்காது. எனவே காளான்களின் தன்மை அறிந்து உண்பதற்கு ஏற்ற காளான்களை மட்டுமே பறித்து உண்ண வேண்டும். விஷத்தன்மையுடைய காளான்களை பறித்து உண்டால் உடலுக்கு தீமை ஏற்படும் என வேளாண்மை துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- திருச்செங்கோடு, நாமக்கல் மார்க்கத்தில் செல்லும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சங்ககிரி ஆர்.எஸ். வழியாக சென்று வருகின்றன.
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திருச்செங்கோடு – சங்ககிரி - ஈரோடு செல்லும் சாலையில் பாலத்தில் இருந்து இருபுறமும் 2 கி.மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சங்ககிரி:
சங்ககிரி, எடப்பாடி, மகுடஞ்சாவடியில் இருந்து திருச்செங்கோடு, நாமக்கல் மார்க்கத்தில் செல்லும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சங்ககிரி ஆர்.எஸ். வழியாக சென்று வருகின்றன. குறிப்பாக விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிக வாகனங்கள் சென்று வருகின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இந்த நிலையில் ஆர்.எஸ். பஸ் நிறுத்தம் பகுதியில் ெரயில்வே மேம்பாலத்தில் ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவில் சாலை உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திருச்செங்கோடு – சங்ககிரி - ஈரோடு செல்லும் சாலையில் பாலத்தில் இருந்து இருபுறமும் 2 கி.மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போலீசார் இல்லாததால் பொதுமக்கள் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வெளியூர் செல்லும் பஸ் பயணிகள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் நியமித்து நெரிசல் இல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நவராத்திரி சிறப்பு பூஜை வழிபாடு நேற்று கோலாகலமாக தொடங்கியது.
- சிறப்பு பூஜை நடத்தியும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. ஆர்ய வைஸ்ய மகிளா சபா பெண் பக்தர்கள் அம்மனுக்கு துதி பாடி வழிபாடு செய்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வீடுகள், கோவில்களில் கொலு வைத்து, நவராத்திரி சிறப்பு பூஜை வழிபாடு நேற்று கோலாகலமாக தொடங்கியது. நடப்பாண்டு வாழப்பாடி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பெரியசாமி நகர் விநாயகர் கோவில்களில் கொலு வைத்தும், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரின் அலங்காரம் செய்தும், சிறப்பு பூஜை நடத்தியும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. ஆர்ய வைஸ்ய மகிளா சபா பெண் பக்தர்கள் அம்மனுக்கு துதி பாடி வழிபாடு செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது.
சேலம்:
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஒகேனக்கல், அஞ்செட்டி, நட்ராம்பாளையம், அடிபாலாறு உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை குறைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. நேற்று 15 ஆயிரத்து 433 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று பாதியாக சரிந்து 8 ஆயிரத்து 893 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 10-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.44 அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 6 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 11.45 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சேலம் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம். நெத்திமேட்டில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
- இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமை தாங்கி பேசினார்.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம். நெத்திமேட்டில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமை தாங்கி பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் உள்ள நபர்களை கண்காணித்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களிடம் உறுதி மொழி பத்திரம் எழுதி வாங்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து தண்டனையை விரைவாக பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
காணாமல் போன நபர்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், செல்வம், துணை சூப்பிரண்டு சங்கீதா, நாகராஜன், ராஜா, மரியமுத்து, ஹரிசங்கரி, அமல்அட்வின், தமிழ்வாணன், சின்னசாமி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோவை சர்க்கார் சாமகுளம் அடுத்த லட்சுமி ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வரும் மகனுடன் தற்போது ஒன்றாக குடியிருந்து வருகிறார்கள்.
- பஸ் சேலம் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது இவர்களது பையில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 61).
இவரும், இவரது மனைவியும் கோவை சர்க்கார் சாமகுளம் அடுத்த லட்சுமி ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வரும் மகனுடன் தற்போது ஒன்றாக குடியிருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனபால், தனது மனைவியுடன் சேலம் குகை கருங்கல்பட்டியில் வசிக்கும் தனது மகளை பார்க்க வந்தனர். மகளை பார்த்துவிட்டு தனபாலும் அவரது மனைவியும் கோவை செல்வதற்காக சேலம் பழைய பஸ் நிலையத்திலிருந்து அரசு டவுன் பஸ்சில் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
பஸ் சேலம் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது இவர்களது பையில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து செவ்வாய்ப் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ்சில் வரும் போது தனபாலின் அருகில் இருந்த தம்பதிகள் பையை நகர்த்தி வைப்பது போல் பாசாங்கு செய்து நகையை திருடியிருப்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பஸ்சில் நூதன முறையில் நகைகளை கொள்ளை அடித்து சென்ற தம்பதிகளை தேடி வருகிறார்கள்.






