என் மலர்tooltip icon

    சேலம்

    • கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது
    • ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி யில் 740 மாண வர்கள் பயின்று வருகின்ற னர். 20 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்தப் பள்ளியில் கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று மாலை மாணவர்கள் 2 பிரிவினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பள்ளி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களின் வெளி நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து பள்ளிக்கு வரவழைத்து பெரும் மோதலில் ஈடுபட ஆயத்தமாகினர்.

    இந்த தகவல் அறிந்த ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து நேற்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் உமாராணி ஆகியோர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்தனர்.

    தொடர்ந்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் உள்ளிட்டோர் முன்னி லையில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தவறான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும் இதுபோன்ற மோதல்கள் உருவாகாமல் இருக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி மாணவர்களின் போக்கை கண்காணித்து ஒழுங்கு படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    • மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவும் மழை பெய்தது

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவும் மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 3.6, கரியகோவில் 2, பெத்தநாயக்கன் பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 13.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக மங்களபுரத்தில் 15, பரமத்திவேலூர் 15, கலெக்டர் அலுவலக பகுதி 15 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்தது. மேலும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் வழங்காததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது.

    ஆனாலும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த 10-ந் தேதி 30 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44.60 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 846 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 14.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    இதே போல் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 101.02 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 566 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து 1992 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் நீர்மட்டம் 75.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1432 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2 ஆயிரத்து 292 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அமுதவல்லியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது மேலும் 6 பேரிடம் தலா 5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வரை அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள பொத்தாம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சதீஷ் (30), பட்டதாரி. இவரது உறவினர் முருங்கப்பட்டி பாறைக்காட்டை சேர்ந்தவர் கணேசன் (45), இவரது மனைவி அமுதவள்ளி (36), இவர் பொத்தாம்பட்டியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    கோவிந்தராஜிடம், வருவாய் துறையில் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது, அப்பதவியை பெற தலா 5 லட்சம் வீதம் 7 பேருக்கு 35 லட்சம் ரூபாய் செலுத்தினால் உடனே பணியை வாங்கி தருகிறேன் என கணேசன் மற்றும் அவரது மனைவி அமுதவல்லி ஆகியோர் கூறினர்.

    இதை உண்மை என நம்பிய கோவிந்தராஜ் 5 லட்ச ரூபாய் கொடுத்தார். அதனை பெற்ற தம்பதியினர் 2020-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கியது போல் போலி நியமன உத்தரவு, வருவாய் துறை அடையாள அட்டையை வழங்கினர்.

    இதை பெற்ற கோவிந்தராஜ் ஜூலை 20-ந்தேதி நாமக்கல் தாலுகா அலுலகத்திற்கு சென்ற போது அது போலி பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கணேசன், அவரது மனைவி அமுதவள்ளி ஆகியோரிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். மேலும் கோவிந்தராஜ் பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காமல் மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து கோவிந்த ராஜ் சேலம் மாநகர போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அமுதவல்லியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறவைாக உள்ள கணேசனை தேடி வருகிறார்கள்.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது மேலும் 6 பேரிடம் தலா 5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வரை அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரங்கநாயகி (60). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி சிவனார் தெரு பகுதியில் நடந்து சென்றார்.
    • அந்த வழியாக வந்த 2 பேர் அவர் வைத்திருந்த ரூ.85 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாயகி (60). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி சிவனார் தெரு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவர் வைத்திருந்த ரூ.85 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய குட்டி புலி என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அந்த சிறுவன் போலீசாரிடம் சிக்கினான். அவனை அழைத்து வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சிறுவன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இரவு வரை கன மழை பெய்தது.
    • இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இரவு வரை கன மழை பெய்தது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனிடையே சேலம் மாநகராட்சி 28-வது வார்டுக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக அங்குள்ள அக்ரஹாரம் தெருவில் நாள்தோறும் ஏராளமான வியாபாரிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலைகள் அரிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

    நேற்று பெய்த மழையால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதினர் கூறும் போது சம்பந்தப்பட்ட அக்ரஹார தெருக்களில் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது.

    இது குறித்து பலமுறை கோரிக்கை மனு அளித்தும் மாநகராட்சி சார்பில் சாலை அமைக்கப்படவில்லை. எனவே சாலையை சரிசெய்து தரவேண்டும் என்றனர்.

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் நிலையம் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.எஸ். நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் நிலையம் மற்றும் ரெயில்வே பாதுகாப்புபடை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    ஈரோடு இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் நிஷாந்த், சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தண்டவாள பகுதியில் மாணவர்கள் விளையாட வேண்டாம். உரிய பாதையை பயன்படுத்த வேண்டும். தண்டவாள பகுதியை தாண்டி செல்ல வேண்டாம். சிக்னலை மதித்து நடக்க வேண்டும். செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க கூடாது. தண்டவாளப் பகுதியில் கற்கள் வைத்து விளையாடுவதும், ஓடும் ரயில் மீது கற்களை எரிந்து விளையாடுவதும் கூடாது. அது தண்டனைக்குரிய குற்றம் என எடுத்துக் கூறி மாணவர்களுடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் ஆனந்தன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் பல்வேறு இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
    • சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளிலும் சில நாட்களாக கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது.

    ஆத்தூர்:

    தமிழகம் முழுவதும் வளிமண்டல கீழெடுத்து சுழற்சி காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் பல்வேறு இடங்களில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

    ஆத்தூர்

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளிலும் சில நாட்களாக கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் இன்று அதிகாலை முதலே ஆத்தூர் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, கொத்தாம்பாடி, செல்லியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் லேசான பனி பொழிவு ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் மஞ்சள் நிற முகப்பு விளக்கு எரிய விட்டபடி சென்றனர். இன்னிலையில் அதிகாலை முதலே பனி பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • சேலம் மாமாங்கம் டால்மியா இறக்கத்தில் லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டு இருந்தது.
    • அந்த வழியாக பின்னால் வந்த மினிவேன் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    சேலம்:

    சேலம் மாமாங்கம் டால்மியா இறக்கத்தில் லாரி ஒன்று நேற்று இரவு நின்று கொண்டு இருந்தது.

    அப்போது அந்த வழியாக நள்ளிரவு வந்த மற்றொரு லாரி நின்ற லாரியின் வலது புறம் உரசி சாலையின் நடுவில் தடுப்பு சுவரில் மோதி நின்றது.

    இதையடுத்து அந்த வழியாக பின்னால் வந்த மினிவேன் அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் போலீசார் மீட்டு பணியில் ஈடுபட்டனர்.

    டிரைவர் பலி

    இந்த விபத்தில் மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் மேச்சேரி காக்காச்சி வளவை சேர்த்த பச்சமுத்து மகன் மணி (வயது 28) சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். அந்த வேனில் வந்த டவர் அமைக்கும் வேலைக்கு சென்ற மேச்சேரி பகுதியை சேர்ந்த செந்தில், தங்கராசு, ரவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு குரங்குசாவடியில் உள்ள தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சிகிச்சை

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேன் டிரைவர் மணி உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் நள்ளிரவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.
    • நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் இல்லாமல் சில்லென்று காற்று வீசி வந்தது. தொடர்ந்து மாலை 4 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் லேசான மழையாக பெய்ய தொடங்கி மாலை 6 மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழையாக கொட்டியது. இந்த மழையால் ஏற்காட்டில் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணி நேரம் கொட்டிய மழையால் ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான குளிர் நிலவியது.

    தொடர்ந்து பனிமூட்டமும் அதிகளவில் இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு ஊர்ந்தபடி சென்றன. கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • வேம்படிதாளம் துணை மின் நிலையம் மற்றும் மல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடைபெற உள்ளது.
    • 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வேம்படிதாளம் துணை மின் நிலையம் மற்றும் மல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடைபெற உள்ளது. இதில் மல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, கம்மா ளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3 கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்த கவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அதுபோல் வேம்படி தாளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இளம்பிள்ளை நகர். காந்திநகர், தப்ப குட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்கா பாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் தெற்கு செயற்பொறி யாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    • சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது.
    • இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது.

    2 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பியதுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் அவர் நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. உதான்-5 திட்டத்தின் கீழ் அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர்-சேலம்-கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட்டது.

    மதியம் 1.30 மணியளவில் பெங்களூரில் இருந்து சேலம் வந்த விமானத்தில் 34 பயணிகள் வந்தனர். தொடர்ந்து இங்கிருந்து கேரள மாநிலம் கொச்சினுக்கு செல்லும் விமான சேவையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த விமானத்தில் சேலத்தில் இருந்து 16 பயணிகள் கொச்சின் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், ஓசூர் பிரகாஷ், சேலம் கலெக்டர் கார்மேகம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசு, செல்வகணபதி, சிவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் ரமேஷ் கூறும்போது விமானம் கொச்சின்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படும். வாரத்தில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் விமான சேவை நடைபெறும். இதேபோன்று அக்டோபர் மாத இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் அக்டோபர் 29-ம் தேதி பெங்களூர்-சேலம்-ஹைதராபாத் வழித்த டத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது. மீண்டும் ஐதராபாத்-சேலம்-பெங்களூர் வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும் என கூறினார்

    பெங்களூரில் இருந்து விமானத்தில் வந்த பயணி வக்கீல் மணிகண்டன் கூறும்போது, முதல் நாள் விமானத்தில் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உதான் திட்டத்தின் மூலம் விமான சேவையை சேலம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சேலம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றார். மேலும் விமான சேவை மீண்டும் செயல்படுத்திய விமான நிறுவனம், எம்.பி. உள்ளிட்டவருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

    ×