என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.35 லட்சம் மோசடி செய்த அங்கன்வாடி பெண் ஊழியர் கைது
- மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அமுதவல்லியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது மேலும் 6 பேரிடம் தலா 5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வரை அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள பொத்தாம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சதீஷ் (30), பட்டதாரி. இவரது உறவினர் முருங்கப்பட்டி பாறைக்காட்டை சேர்ந்தவர் கணேசன் (45), இவரது மனைவி அமுதவள்ளி (36), இவர் பொத்தாம்பட்டியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கோவிந்தராஜிடம், வருவாய் துறையில் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது, அப்பதவியை பெற தலா 5 லட்சம் வீதம் 7 பேருக்கு 35 லட்சம் ரூபாய் செலுத்தினால் உடனே பணியை வாங்கி தருகிறேன் என கணேசன் மற்றும் அவரது மனைவி அமுதவல்லி ஆகியோர் கூறினர்.
இதை உண்மை என நம்பிய கோவிந்தராஜ் 5 லட்ச ரூபாய் கொடுத்தார். அதனை பெற்ற தம்பதியினர் 2020-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கியது போல் போலி நியமன உத்தரவு, வருவாய் துறை அடையாள அட்டையை வழங்கினர்.
இதை பெற்ற கோவிந்தராஜ் ஜூலை 20-ந்தேதி நாமக்கல் தாலுகா அலுலகத்திற்கு சென்ற போது அது போலி பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கணேசன், அவரது மனைவி அமுதவள்ளி ஆகியோரிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். மேலும் கோவிந்தராஜ் பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காமல் மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து கோவிந்த ராஜ் சேலம் மாநகர போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அமுதவல்லியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறவைாக உள்ள கணேசனை தேடி வருகிறார்கள்.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது மேலும் 6 பேரிடம் தலா 5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வரை அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்