என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் இரவில் கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ளம்
    X

    ஏற்காட்டில் இரவில் கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ளம்

    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.
    • நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் இல்லாமல் சில்லென்று காற்று வீசி வந்தது. தொடர்ந்து மாலை 4 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் லேசான மழையாக பெய்ய தொடங்கி மாலை 6 மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழையாக கொட்டியது. இந்த மழையால் ஏற்காட்டில் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 1 மணி நேரம் கொட்டிய மழையால் ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான குளிர் நிலவியது.

    தொடர்ந்து பனிமூட்டமும் அதிகளவில் இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு ஊர்ந்தபடி சென்றன. கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×