search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி பகுதியில்  கோவில்களில் நவராத்திரி பூஜை
    X

    வாழப்பாடி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு.

    வாழப்பாடி பகுதியில் கோவில்களில் நவராத்திரி பூஜை

    • நவராத்திரி சிறப்பு பூஜை வழிபாடு நேற்று கோலாகலமாக தொடங்கியது.
    • சிறப்பு பூஜை நடத்தியும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. ஆர்ய வைஸ்ய மகிளா சபா பெண் பக்தர்கள் அம்மனுக்கு துதி பாடி வழிபாடு செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வீடுகள், கோவில்களில் கொலு வைத்து, நவராத்திரி சிறப்பு பூஜை வழிபாடு நேற்று கோலாகலமாக தொடங்கியது. நடப்பாண்டு வாழப்பாடி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் பெரியசாமி நகர் விநாயகர் கோவில்களில் கொலு வைத்தும், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரின் அலங்காரம் செய்தும், சிறப்பு பூஜை நடத்தியும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. ஆர்ய வைஸ்ய மகிளா சபா பெண் பக்தர்கள் அம்மனுக்கு துதி பாடி வழிபாடு செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×