என் மலர்
ராமநாதபுரம்
- கடற்கரையையொட்டி தாழ்வான பகுதிகளில் மக்கள் வசித்துவரும் கிராமங்களில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
- அவர்களுக்கான அரசு நிவாரணத் தொகை ரூ.5000 மற்றும் 10 கிலோ அரிசி, சேலை ஆகிய வற்றை அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தில் கடற் கரையையொட்டி உள்ள தாழ்வான பகுதிகளில் மக்கள் வசித்து வரும் கிராமங்களுக்கு சென்று மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன் முன்னிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை செயலரும், மாவட்ட கண்கா ணிப்பு அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி பேரி டர் காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி பாதுகாத்திடும் வகையில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், இந்திரா நகர், குருவிக்காரன் தெரு வில் சுமார் 50-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வரும் பகுதியை பார்வை யிட்டு அந்த குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் வாய்க் கால் சீரமைப்பதுடன் அவர் களுக்கு தேவையான குடிநீர் மற்றும் மருத்துவவசதி வழங் குவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டு மென தெரிவித்தார்.
பின்னர் கீழக்கரை வட் டம், சடையன்முனியன் வலசை ஊராட்சிக்கு சென்று இப்பகுதி கடற்கரை யையொட்டி மிக அருகாமை யில் உள்ளதாலும், மேலும் தாழ்வான பகுதியாக உள்ள தால் பேரிடர் காலங்களில் தண்ணீர் தேங்கும் பொழுது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கிடும் வகையில் மேற் கொள்ளப்பட்டுள்ள பணி களை கேட்டறிந்தார்.
பின்னர் அருகாமையில் உள்ள கல்பார் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத் திற்கு சென்று பார்வையிட்டு அங்கு 1000 பேர் தங்கும் அளவிற்கு உட்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதை ஆய்வு செய்தார். இதேபோல் மாவட்டத்தில் கடற்கரையையொட்டி தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் தயார் நிலையில் வைத் திருக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பனைக்குளம் ஊராட்சியில் தொடர் மழை யால் வள்ளி என்பவரது வீடு முழுமையாக பாதிக்கப் பட்டதையொட்டி அவர்க ளுக்கான அரசு நிவாரணத் தொகை ரூ.5000 மற்றும் 10 கிலோ அரிசி, சேலை ஆகிய வற்றை அர்ச்சனா பட்நாயக் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, ராமநாத புரம் வருவாய் கோட்டாட் சியர் கோபு, கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ் வரி மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இளம்பெண்ணை அவதூறாக பேசிய 2 வாலிபர்கள் கைது செய்தனர்.
- யாழினி பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை
மண்டபம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அண்ணா குடி யிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகள் யாழினி (வயது 21). இவர் சம்பவத் தன்று ராமநாதபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறி தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்த பேருந்து வேதாளை ஊராட்சி குஞ்சார்வலசை பஸ் நிறுத்தம் வந்த போது தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த கிருஷ் ணன் மகன் டாரஸ் (19), சந்தியா மகன் கிர்லோஸ்கார் (20) ஆகியோர் பேருந்தில் ஏறினர். பின்னர் அவர்கள் யாழினி அருகில் நின்று கொண்டு அவரை ஆபாச மாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து யாழினி பலமுறை எச்சரித் தும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து யாழினி தனது பெற்றோருக்கு செல் போனில் தகவல் கொடுத் தார். அவர்கள் இதுகுறித்து மண்டபம் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் வழக்குப்பதிவு செய்து டாரஸ், கிர்லோஸ் கார் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வருகிற 18-ந்தேதி குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.
- மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் உள்வட்டம் தெற்குத்தரவை (நியாய விலைக்கடை), ராமேசுவரம் வட்டம்-புதுரோடு- (நியாய விலைக்கடை), திருவா டானை வட்டம் - மல்லனூர் (நியாய விலைக்கடை), பரமக்குடி வட்டம் - கள்ளிக்குடி (நியாய விலைக்கடை), முது குளத்தூர் வட்டம் - புல்வாய்க்குளம் (நியாய விலைக்கடை), கடலாடி வட்டம் - பிள்ளையார்குளம் (பஞ்சாயத்து இ-சேவை மையம்), கமுதி வட்டம் - பாக்குவெட்டி (நியாய விலைக்கடை) கீழக்கரை வட்டம் - நேருபுரம், (நியாயவிலைக்கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் - மோர்ப்பண்ணையில் (நியாயவிலைக் கடை) குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெறும்.
இதில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப் பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத் திருத்தம், புகைப்படம் பதி வேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற் கொள்ளப்படும்.
மேலும் நியாய விலைக்கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறை பாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத் திலுள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டை தாரர்கள் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
- 3-வது கட்டமாக இன்று சிறையில் இருந்த 22 பேரில் 21 மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
- விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.
அந்த வகையில் கடந்த மாதம் 14 மற்றும் 28-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 64 மீனவர்களை கைது செய்த சிங்கள கடற்படை 10 படகுகளையும் பறிமுதல் செய்தது.
அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த 8-ந்தேதி 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அடுத்ததாக கடந்த 9-ந்தேதி 38 பேருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்த இலங்கை மன்னார் நீதிமன்றம், இந்த தண்டனையை 5 வருடம் சென்ற பிறகு அனுபவிக்க வேண்டும் என்ற விநோத நிபந்தனையுடன் விடுதலை செய்தது.
இந்தநிலையில் 3-வது கட்டமாக இன்று சிறையில் இருந்த 22 பேரில் 21 மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. மீதமுள்ள ஒருவரான முருகன் என்பவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்துள்ளது. அதன் பின்னரும் எல்லை தாண்டினால் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 22 பேரும் விடுதலையாவார்கள் என்று அவர்களது உறவினர்கள் காத்திருந்த நிலையில் ஒருவருக்கு மட்டும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- சாயல்குடி அருகே வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர், கடலாடி தாசில்தார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
சாயல்குடி
சாயல்குடி அருகே ஒப்பிலான் கிராமத்தில் வனத்துறை பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கட்டிடங்களை கட்டி பல வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். வனத்துறை பகுதியில் உள்ள பொது மக்களை காலி செய்ய வலியுறுத்தி ஆக்கிரமிப்பு களை அகற்றுவதற்காக இன்று அதிகாலை வந்த வனத்துறை அதிகாரிகளை கண்டித்து சாயல்குடியில் இருந்து செல்லும் ஒப்பி லான்-வாலிநோக்கம் சாலையில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலையில் அமர்ந்தும் வனத்துறையினரை முற்று கையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, கடலாடி தாசில்தார் ரெங்கராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த நபர்கள் இருவர் பெட்ரோல் கேனை தலையில் ஊற்றி தீயை பற்ற வைக்க முற்பட்டனர். அவர்களை காவல் துறை யினர் தடுத்து நிறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆக்கிர மிப்புகளை அகற்றக் கூடாது எனவும், வீடு கட்டி இருக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பி இருந்தனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
முடிவில் தாசில்தார் தற்போது வனத்துறையினர் ஆக்கிரப்புகளை அகற்ற மாட்டார்கள் எனவும், பின்பு ஒரு நாளில் பொது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு அதன் மூலம் நட வடிக்கை எடுத்துக்கொள்வோம் என உத்திர வாதம் அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- வட மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் வரலாறு காணாத பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் எங்களின் படகுகளை பாதுகாப்பது பெரும் சவாலாக இருக்கிறது. அவை பலத்த சேதமடைந்து விடுகிறது.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் வரலாறு காணாத பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதன் எதிரொலியாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துக்கு பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவி பட்டணம், சோழியகுடி, தொண்டி உள்ளிட்ட பகுதி மீனவர்கள் பாக்ஜலசந்தி கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.
இதேபோன்று தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் மன்னார்வளைகுடா கடலுக்கு செல்கின்றனர். தற்போது புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை அவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக 1,650 விசைப்படகுகள் மற்றும் 6,500 நாட்டுப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 2 லட்சத்திற்கும் அதிகமான மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் வேலையிழந்து தவித்து வருகிறார்கள். இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இதுபற்றி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கூறுகையில், கடந்த 1 மாத காலமாக இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.
தீபாவளி முடிந்து ஒருநாள் தான் கடலுக்கு சென்றோம். அதற்குள் தற்போது புயல் எச்சரிக்கையால் மீண்டும் கடலுக்கு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் எங்களின் படகுகளை பாதுகாப்பது பெரும் சவாலாக இருக்கிறது. அவை பலத்த சேதமடைந்து விடுகிறது. எனவே போதிய துறைமுக வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
மேலும் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் சமயங்களில் வாழ்வாதாரம் காக்க நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
புயல் எச்சரிக்கையால் இன்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். மீன்பிடி தொழில் சார்ந்த பல கோடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
- ராமநாதபுரத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வடிகால் இல்லாமல் மழை நீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் சளி மற்றும் காய்ச்சல் பரவி வருகிறது. இதேபோல் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவுகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு வார்டில் மட்டும் 20-க்கும் அதிக மானோர் சிகிச்சை பெறு கின்றனர்.
டெங்கு பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு தனி வார்டு அமைக்கப்பட் டுள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு டெங்கு வார்டில் 8 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது
20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். அதேபோல் தனியார் மருத்துவமனை களிலும் ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர். கிராமப்புறங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிக ரித்துள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
ஊராட்சிகளில் சுகாதா ரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்திற்கான விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.
- தேவேந்திரர் இளைஞர் பேரவை தலைவர் பேட்டியளித்துள்ளார்.
பனைக்குளம்
ராமநாதபுரத்தில் தேவேந்திரர் இளைஞர் பேரவை நிறுவன தலைவர் அழகர்சாமி பாண்டியன் நிருபர்களிடம் கூறிய தாவது:-
டெல்டா மண்டலங்களை குறிவைத்து எடுக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன், இப்போது முகவை மாவட் டத்தை பாலைவனமாக்க முயல்கின்றனர்.
முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கமுதி உள்ளிட்ட தாலு காக்களில் 20 இடங்களில் 2ஆயிரம் முதல் 3ஆயிரம் மீட்டர் வரை சோதனை முறையில் ஆழ்துளை கிணறுகளை தோண்டுவதற்காக, தமிழக அரசின் சுற்றுச்சூழலிடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்திருக்கிறது.
சமவெளி பகுதியில் மட்டுமில்லாமல் 143 சதுர கிலோமீட்டர் ஆழமற்ற கடல் பகுதியிலும் ஆழ் துளை கிணறுகளை தோண்டுவதற்கான உரிமத்தை ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கை (ஹெல்ப்) மூலமாக 3-வது சுற்று திறந்தவெளி ஏலத்தின் மூலம் பெற்று இருக்கிறது.
ஏற்கனவே முகவை மண்டலத்தில் நீடிக்கும் பெரும் வறட்சியால் குடிநீருக்கே பெரும் போராட் டத்தை நாம் நடத்தி வரும் நிலையில், 3 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு ஓ.என்.ஜி.சி ஆழ்துளை கிணறுகளை சோதனை முறையில் அமைக்குமானால், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
மேலும் இம்மாவட்டத்தில் வாழும் மீனவ மக்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே அரியலூரில் 10 கிணறுகளை அமைக்கவும், கடலூரில் 5 கிணறுகளை அமைக்கவும், இதே ஓ.என்.ஜி.சி கொடுத்த விண்ணப்பத்தை நிரா கரித்தது போல், ராமநாதபு ரம் மாவட்டம் தொடர்பான விண்ணப்பத்தையும் தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை பாலைவனம் ஆக்க முயலும் ஓ.என்.சி.சி நிறு வனத்தின் இத்திட்டத்தை எதிர்த்து அனைத்து விவசாயிகள் மீனவர்கள், பொதுமக்களை ஒன்று திரட்டி எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்றால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- விசைப்படகுகள் மண்டபம் தெற்குவாடி, துறைமுகம் ஆகிய பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி என இரண்டு கடல் பகுதிகள் உள்ளன. இதில், ராமேசு வரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டணம், சோழிய குடி, தொண்டி உள்ளிட்ட பகுதி மீனவர்கள் பாக்ஜல சந்தி கடல் பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபடுகின் றனர். இதேபோன்று தனுஷ் கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கை யூர் உள்ளிட்ட பகுதி மீன வர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறைக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு அமையம் அறிவித்துள்ளது.
இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் ஆகிய பகுதிகளில் இருந்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் வளை குடா பகுதியில் மீன்பிடிக்க செல்லும் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் பாது காப்புடன் நிறுத்தப்பட்டுள் ளது.
இதற்கிடையே மண்டபம் கடலோர பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீன வர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சுழற்சி முறையில் பாக்ஜலசந்தி கடலோர பகுதியிலும், மன்னார்வ ளைகுடா கடலோர பகுதியி லும் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
அதில் குறிப்பாக சாயல் குடி, தாமரைக்குளம், உச்சிப் புளி, புதுமடம், பிரப்பன்வ லசை, நொச்சியூரணி, சுந்தர முடையான், பிள்ளைமடம் பகுதிகளை சேர்ந்த மீனவர் கள் கடந்த 8-ந்தேதி கட லுக்கு சென்றுவிட்டு 9- ந்தேதி கரை திரும்பினர். தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் கடலுக்கு செல்ல வில்லை.
இந்தநிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் வாரத் தின் முதல்நாளான நேற்று குறைந்த அளவிலேயே மீன வர்கள் கடலுக்கு சென்றனர். மற்ற விசைப்படகுகள் மண்டபம் தெற்குவாடி, துறைமுகம் ஆகிய பகுதிக ளில் நங்கூரமிட்டு நிறுத்தப் பட்டுள்ளன.
- ராமநாதபுரத்தில் பயிர் காப்பீடு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தற்போது நிலங்களில் களை எடுத்தல், உரமிடுதல் பணி நடக்கிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட் டத்தில் மானாவாரியாக 1 லட்சத்து 28 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. நெல் சாகுபடி பணிகள் தொடங்கி உள் ளது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீடு தொகை வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப் பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.
இதில் காப்பீடு செய்ய நாளை 15-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட தால் விவசாயிகள் ஆதார் அட்டை, கணிப்பொறி சிட்டா, அடங்கல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகியவைகளை தயார் செய்து காப்பீடு பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாயி கள் கூறுகையில், மூவிதழ் அடங்கல் வி.ஏ.ஓ. க்களிடம் வாங்க வேண்டும்.பெரும் பாலான வி.ஏ.ஓ.க்கள் வாடகை அறையில் தங்கி உள்ளனர். இதனால் வி.ஏ.ஓ.க்களை தேடி கண்டு பிடிப்பதில் விவசாயி களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மொபைலில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தற்போது நிலங்களில் களை எடுத்தல், உரமிடுதல் பணி நடக்கிறது. அதற்கான பணியிலும் ஈடுபட முடியாமல் வி.ஏ.ஓ., வை தேடுவதில் நேரம் வீணாகிறது. சர்வர் பாதிப்பு, தீபாவளி பண்டிகைக்கு தொடர் அரசு விடுமுறை என பல்வேறு காரணங்க ளால் ஏராளமான விவசாயி கள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்யும் தேதியை நீட்டிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- முதுகுளத்தூரில் கண்மாய் கரையில் விளையாடிய 9-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் நிகாஷ்கண்ணன் (வயது14). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கண்மாய் கரையில் தனது நண்பர் களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டி ருந்தான். அப்போது அவரது நண்பர்கள் அடித்த பந்து கண்மாய்க்குள் விழுந்தது. இதை எடுப்பதற்காக நிகாஷ்கண்ணன் நீரில் இறங்கி பந்தை எடுக்க முயன்றான்.
அப்போது எதிர்பாராத விதமாக அவன் நீரில் மூழ்கினான். இதைப்பார்த்த அவனது நண்பர்கள் நிகாஷ் கண்ணனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால் நிகாஷ் கண்ணன் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோ ரிடம் கூறி சென்றனர்.
ஆனால் அவனது பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றி ருந்ததை அறிந்த அவனது நண்பர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். பின்னர் வீடு திரும்பிய பெற்றோர், தனது மகன் வெகுநேர மாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாண்டி நிகாஷ்கண்ணனின் நண்பர்களிடம் விசாரித்தார்.
அப்போது நிகாஷ் கண்ணன் அங்குள்ள கண்மாயில் மூழ்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி யடைந்த பாண்டி முதுகு ளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் தீயணைப்பு போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிகாஷ்கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாட சென்ற மாணவன் நீரில் மூழ்கி இறந்ததால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்க செல்லும் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.
- தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் கடலுக்கு செல்லவில்லை.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி என இரண்டு கடல் பகுதிகள் உள்ளன. இதில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டணம், சோழிய குடி, தொண்டி உள்ளிட்ட பகுதி மீனவர்கள் பாக்ஜல சந்தி கடல் பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இதேபோன்று தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு அமையம் அறிவித்துள்ளது.
இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, மூக்கையூர் ஆகிய பகுதிகளில் இருந்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்க செல்லும் படகுகள் அந்தந்த துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே மண்டபம் கடலோர பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சுழற்சி முறையில் பாக்ஜலசந்தி கடலோர பகுதியிலும், மன்னார்வளைகுடா கடலோர பகுதியிலும் மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
அதில் குறிப்பாக சாயல்குடி, தாமரைக்குளம், உச்சிப்புளி, புதுமடம், பிரப்பன்வலசை, நொச்சியூரணி, சுந்தரமுடையான், பிள்ளைமடம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடந்த 8-ந்தேதி கடலுக்கு சென்றுவிட்டு 9-ந்தேதி கரை திரும்பினர். தீபாவளியை முன்னிட்டு 2 நாட்கள் கடலுக்கு செல்லவில்லை.
இந்தநிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதால் வாரத்தின் முதல்நாளான நேற்று குறைந்த அளவிலேயே மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மற்ற விசைப்படகுகள் மண்டபம் தெற்குவாடி, துறைமுகம் ஆகிய பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.






