search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student sacrifice"

    • முதுகுளத்தூரில் கண்மாய் கரையில் விளையாடிய 9-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலியானார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் நிகாஷ்கண்ணன் (வயது14). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கண்மாய் கரையில் தனது நண்பர் களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டி ருந்தான். அப்போது அவரது நண்பர்கள் அடித்த பந்து கண்மாய்க்குள் விழுந்தது. இதை எடுப்பதற்காக நிகாஷ்கண்ணன் நீரில் இறங்கி பந்தை எடுக்க முயன்றான்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவன் நீரில் மூழ்கினான். இதைப்பார்த்த அவனது நண்பர்கள் நிகாஷ் கண்ணனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால் நிகாஷ் கண்ணன் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோ ரிடம் கூறி சென்றனர்.

    ஆனால் அவனது பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றி ருந்ததை அறிந்த அவனது நண்பர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். பின்னர் வீடு திரும்பிய பெற்றோர், தனது மகன் வெகுநேர மாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பாண்டி நிகாஷ்கண்ணனின் நண்பர்களிடம் விசாரித்தார்.

    அப்போது நிகாஷ் கண்ணன் அங்குள்ள கண்மாயில் மூழ்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி யடைந்த பாண்டி முதுகு ளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் தீயணைப்பு போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிகாஷ்கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாட சென்ற மாணவன் நீரில் மூழ்கி இறந்ததால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த முருகன்- உஷா தம்பதியரின் மகன் ஹரீஷ் (8).
    • இரவு வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனை அப்பகுதியில் இருந்த நச்சு பாம்பு ஒன்று கடித்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த முருகன்- உஷா தம்பதியரின் மகன் ஹரீஷ் (8). இந்த சிறுவன் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான் . நேற்று இரவு வீட்டிற்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுவனை அப்பகுதியில் இருந்த நச்சு பாம்பு ஒன்று கடித்தது. இதில் விஷம் ஏறி மயங்கி கிடந்த சிறுவன் ஹரீஷை மீட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

    இச்சம்பவம் இவரது குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி கிராம மக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ேமலும் சிறுவனை கடித்த பாம்பை கண்டுபிடித்து பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.

    • மாங்காடு மாடல் பள்ளி அருகில் வசித்து வரும் சேகர் என்பவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • தவறி கீழே விழுந்து டிராக்டரின் சக்கரம் அவரது தலை மீது ஏறியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சேலம்:

    கொளத்தூர் மாங்காடு மாடல் பள்ளி அருகில் வசித்து வரும் சேகர் என்பவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று டிராக்டரில் எட்டாம் வகுப்பு படித்து வரும் அவரது மகன் வெங்கடேஷ் என்பவரை டிராக்டரில் அழைத்து கொண்டு வரும்போது கருங்கல்லூர் அருகே உள்ள வால் கிணத்தூர் பகுதியில் வளைவில் வேகமாக வந்து டிராக்டரை திரும்பும் போது எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்து டிராக்டரின் சக்கரம் அவரது தலை மீது ஏறியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் அவர்கள் விசாரித்து வருகிறார்கள்

    • பாஸ்கர் (வயது 17). இம்மாணவன், இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான்.
    • நாவல் மரத்தில் ஏறி பழம் பறிக்கும்போது பாஸ்கர் தவறி கீழே விழுந்தான் இதில் பலத்த அடிபட்ட மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சேர்த்தனர்.

    காகாபாளையம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நெய்யமலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் பாஸ்கர் (வயது 17). இம்மாணவன், இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். பள்ளி அருகே உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தான். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பள்ளி வளாகம் அருகே உள்ள நாவல் மரத்தில் ஏறி பழம் பறிக்கும்போது பாஸ்கர் தவறி கீழே விழுந்தான் இதில் பலத்த அடிபட்ட மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் உயிரிழந்தான். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். எனக்கு மனைவியும், காவியா, கவின் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
    • எதிர்பாராத விதமாக கவின் அந்த கல்குவாரியில் மூழ்கி இறந்துவிட்டான். தீயணைப்பு துறையினர் எனது மகனின் உடலை மீட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த கல்லுக்கட்டியூரை சேர்ந்த கந்தசாமி (வயது 38) என்பவர், நாமக்கல்மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதா வது:-

    நான், குமாரபாளையம் தாலுக்கா, கல்லுக்கட்டியூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். எனக்கு மனைவியும், காவியா, கவின் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    அதில், கவின் படவீடு டவுன் பஞ்சாயத்தில் உள்ள சங்கர் மேல்நிலைப் பள்ளி யில், 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 3-ந் தேதி, எனது மகன் கவின் தன்னுடன் படிக்கும் சக மாண வர்களு டன், பச்சாம்பாளை யம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் குளிப்பதற்காக சென்றுள்ளான்.

    எதிர்பாராத விதமாக கவின் அந்த கல்குவாரியில் மூழ்கி இறந்துவிட்டான். தீயணைப்பு துறையினர் எனது மகனின் உடலை மீட்டனர். வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். தினமும் கூலி வேலைக்கு சென்று கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறோம். என் மகன் படித்து, எங்கள் குடும்பத்தின் நிலையை உயர்த்துவான் என நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு, அவனது இறப்பு மிகப்பெரிய இழப்பு.

    அதனால், எங்கள் குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு வழங்கும் முதல்வரின் நிவா ரண நிதி உதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • ஜி.டி.ஆர். அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்து மோட்டர்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
    • செம்மேடு தனியார் லாட்ஜ் அருகே மோட்டார்சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதியது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திண்ண–னுார்நாடு சின்ன சோளக்கண்ணிப்பட்டியை சேர்ந்தவர் ரஜினி. இவருடைய மகன் அகிலன் (வயது 17).

    கொல்லிமலை அருகே உள்ள வாழவந்திநாடு, பெருமாபட்டியை சேர்ந்த ஜெயசங்கர் என்பவருடைய மகன் வசந்த் (17).

    இவர்கள் 2 பேரும் செம்மேடு ஜி.டி.ஆர். அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்து மோட்டர்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது வாழவந்திநாடு தண்ணிமாத்தி பகுதியை சேர்ந்த பாசகுமார், (48) என்பவர் செம்மேட்டில் இருந்து சோளக்காட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

    செம்மேடு தனியார் லாட்ஜ் அருகே மோட்டார்சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் பள்ளி மாணவன் அகிலன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மற்றொரு மாணவன் வசந்த் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சில் நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவன் அகிலன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி–றார்கள்.

    கார் மோதி பிளஸ் -2 மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சின்னசேலம் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி மாணவர் பலியானார்.
    • கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எடுத்துவாய் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.அவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மகன் திவாகர் (வயது 19). இவர் சின்னசேலம் அருகே இந்திலி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று கல்லூரி முடித்துவிட்டு மாலையில் கல்லூரியில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது அதே கல்லூரியை சேர்ந்த பஸ் ஒன்று கல்லூரி வளாகத்திற்கு உள்ளே நுழைந்த போது மாணவர் திவாகர் எதிர்பாராத விதமாக பஸ் மோதியதில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார் இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த போலீசார் திவாகரன் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    • கருமந்துறையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது.
    • மணியா குண்டம் காட்டு வளவு ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, தண்ணீரில் பிர வீன் மூழ்கி உயிரிழந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, கரு மந்துறை யில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு தர்மபுரி மாவட்டம் அரூர் சித்தேரி பகுதியைச் சேர்ந்த வேடன் மகன் பிரவீன்(வயது 18) விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் 5 மாணவர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள மணியா குண்டம் காட்டு வளவு ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது, தண்ணீரில் பிர வீன் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×