search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணை அவதூறாக பேசிய 2 வாலிபர்கள் கைது
    X

    இளம்பெண்ணை அவதூறாக பேசிய 2 வாலிபர்கள் கைது

    • இளம்பெண்ணை அவதூறாக பேசிய 2 வாலிபர்கள் கைது செய்தனர்.
    • யாழினி பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அண்ணா குடி யிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மகள் யாழினி (வயது 21). இவர் சம்பவத் தன்று ராமநாதபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் ஏறி தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    இந்த பேருந்து வேதாளை ஊராட்சி குஞ்சார்வலசை பஸ் நிறுத்தம் வந்த போது தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த கிருஷ் ணன் மகன் டாரஸ் (19), சந்தியா மகன் கிர்லோஸ்கார் (20) ஆகியோர் பேருந்தில் ஏறினர். பின்னர் அவர்கள் யாழினி அருகில் நின்று கொண்டு அவரை ஆபாச மாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து யாழினி பலமுறை எச்சரித் தும் அவர்கள் கேட்கவில்லை. இதையடுத்து யாழினி தனது பெற்றோருக்கு செல் போனில் தகவல் கொடுத் தார். அவர்கள் இதுகுறித்து மண்டபம் காவல் நிலையத் தில் புகார் அளித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் வழக்குப்பதிவு செய்து டாரஸ், கிர்லோஸ் கார் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×