என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • வங்கிக்கணக்கு, ஆதார் எண் விபரங்களை ரேசன் கடைகளில் வழங்க வேண்டும்.
    • ராமநாதபுரம் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை தாரர்களில் வங்கி கணக்கு வைத்து ஆதார் எண் இணைக்கப் பெறாமையாலும் கணக்கு எண் ஒரு வேளை இல்லாமலும் இன்னும் 21704 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளதாக விவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.

    இத்தகைய குடும்ப அட்டை தாரர்கள் விபரம் தற்போது சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடை வாரியாக பிரித்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து வங்கி கணக்கு எண்ணில் ஆதார் எண்ணை தொடர்புப்படுத்தி இயக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் அதற்கான நடவடிக்கையாக கணக்கு எண் உள்ள வங்கியில் படிவம் எண் 2-ஐ பெற்று விவரங்களைப்பூர்த்தி செய்து உடன் அளிக்கும் படியும் இது வரை வங்கிக்கணக்கு எண் இல்லாதவர்கள் கூடுமானவரை அருகில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் புதியதாக வங்கிக்கணக்கு எண், ஆதார் எண் விவரத்தினை இணைத்து உடன் தொடங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • பட்டணம்காத்தான் துணை மின் நிலையத்தில் அதிக திறன் டிரான்ஸ்பார்மர் அமைக்க சட்டமன்ற பொது நிறுவனக்குழு பரிந்துரைந்துள்ளது.
    • 2021-23ம் ஆண்டிற்கான பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுத் தலைவர் ராஜா தலைமையில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், குழு உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. (பூந்தமல்லி), தமிழரசி எம்.எல்.ஏ (மானாமதுரை) நாகைமாலி எம்.எல்.ஏ (கீழ்வேளுர்), பாலாஜி எம்.எல்.ஏ (திருப்போரூர்) ஆகியோர் முன்னிலையில் 2021-23ம் ஆண்டிற்கான பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பொது நிறுவன குழு தலைவர் ராஜா தலைமை வகித்தார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, மூன்று சக்கர நாற்காலி, மடக்கு சக்கர நாற்காலி, திறன்பேசி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் என 15 பயனாளிகளுக்கு ரூ.1,70,888 லட்சம் மதிப்பீட்டிலான நிவாரண தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.30,108 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்களையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.28,000 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்களையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 5 பயனாளிகளுக்கு இணை மானிய திட்டம் மானியம் ரூ.13,58,589 மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.2,25,000 மதிப்பீட்டிலும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம் மூலம் 3 பயனாளிகளுக்கு என மொத்தம் 35 பயனா ளிகளுக்கு ரூ.19.74 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவன குழு இணைச் செயலாளர் பாண்டியன், சார்பு செயலாளர் இந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக வாலாந்த ரவை ஊராட்சியில் கோரமண்டல் மின் ஆலை யினை பார்வையிட்டு உற்பத்தி திறன் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதை பொது நிறுவன குழுவினர் பார்வையிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து களிமண்குண்டு ஊராட்சியில் கடற்கரை ஓரமாக மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தனர். பின்னர் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதி யில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையத்தை பார்வையிட்டு கூடுதல் கொள்ளளவு திறன் மின்மாற்றிகள் அமைக்க அறிவுறுத்தினர்.

    • கடந்த 2 ஆண்டுகளில் சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் பொதுமக்கள் ரூ.3.11 கோடியை இழந்ததாக போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
    • பணம் இரட்டிப்பாக வழங்கப்படுவதாக கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த போலீஸ் குறைதீர்ப்பு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமை தாங்கி பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.

    இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் க ள் உன்னிகிருஷ்ணன், பாஸ்கரன், ராமநாதபுரம் டி.எஸ்.பி, ஜெயச்சந்தின் மற்றும் உட்கோட்ட வாரியாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 41 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த முகாமில் மண்டபம் மறவர் தெருவைச் சேர்ந்த தில்லை ரேவதி ஆன்லைன் தகவலை நம்பி ரூ. 19 ஆயிரத்து 999-யை இழந்திருந்தார். அந்த பணத்தை போலீசார் மீட்டதற்கான சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, தில்லை ரேவதியிடம் வழங்கினார்.

    கடந்த அக்டோபர் முதல் இதுநாள் வரை போலீஸ் சூப்பிரண்டு குறைதீர்ப்பு முகாம், முதல்வரின் தனிப்பிரிவு மனு, டிஜிபி அலுவலக மனுக்கள் என 1415 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    இதில் 1259 மனுக்களுக்கு புகார்தாரர் க ளுக்கு திருப்திகரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. 156 மனுக்கள், திருப்தி இல்லை என விசாரணையில் உள்ளது. தற்போது 41 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் போலியான தகவல்களை நம்பி பணத்தை இழந்த1274 பேர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

    இதன்மூலம் பொது மக்கள் மொத்தம் ரூ.3.11 கோடி பணம் இழந்தனர். இதில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக குறிப்பிட்ட வங்கிகளில் 73 லட்சத்து 10 ஆயிரத்து 347 ரூபாய் போலீசாரால் முடக்கப்பட்டது.

    இதில் 15 லட்சத்து 91 ஆயிரத்து 660 ரூபாய் சம்பந்தப்பட்டவர் க ளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறும் போது, பொதுமக்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பது, பரிசு பொருட்கள் விழுந்திருப்ப தாக கூறுவது, ஆன்லைனில் முதலீடு செய்வது, பணம் இரட்டிப்பாக வழங்கப்படுவதாக கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

    • தாதனேந்தல் ஊராட்சியில் மகளிர் சுயஉதவி குழுக்களை ராமநாதபுரம் கலெக்டர் நேரில் சென்று பாராட்டினார்.
    • மகளிர் குழுவை போல் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பகுதியில் சூழ்நிலைக்கு ஏற்ப உற்பத்தி பொருள்களை தயாரித்து விற்பனை செய்யலாம் என்றும் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் பண்ணை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கீரை வகைகளை பொது மக்களுக்கான விற்பனையினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்து மகளிர் குழுவினை பாராட்டி இக்குழுவில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறியதாவது:-

    மகளிர் குழுவினர் ஒவ்வொரு ஊராட்சிகளும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிகள் இருக்கும்போது பார்த்துவிட்டு பணிகள் இல்லாத இடைப்பட்ட காலங்களில் இது போல் சுய தொழில்கள் தொடங்கிட வேண்டும். நிலையான வருமானம் என்பதை நம்மால் உருவாக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் மக்களின் தேவைகள் அதிகரிக்கும் வண்ணம் இருந்து வருகின்றன. அதை இருந்த இடத்திலிருந்து வழங்கும் வகையில் திட்டமிட்டு செயல்படலாம். தாதனேந்தல் இணைந்த கைகள் மகளிர் குழுவை போல் ஒவ்வொரு குழுவும் அந்தந்த பகுதியில் சூழ்நிலைக்கு ஏற்ப உற்பத்தி பொருள்களை தயாரித்து விற்பனை செய்யலாம்.

    அதுமட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுலாத்தலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்க தாகும். கலை வண்ணப்பொருட்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் கணினி மையங்களில் வருவாய்த்துறை சான்றிதழ் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பல தனியார் கணினி மையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கிய Citizen Login முறையாக அரசு அனுமதி பெறாமல் 20 வகையான வருவாய்த்துறை சான்றுகள்,

    6 வகையான முதியோர் உதவி தொகை போன்ற சான்றுகளை விண்ணப்பம் செய்கிறார்கள். அவ்வாறு விண்ணப்பிக்கும் சான்று களில் எழுத்து பிழை, தவறான ஆதாரங்களை இணைத்தல் மற்றும் இடைதரகர்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுகிறது என்று புகார்கள் வருகின்றன.

    பொது இ-சேவை மைய ங்களில் வருவாய்த்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றி தழ்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.10-ம், சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.120-ம், இணைய வழி பட்டா மாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.60-ம் சேவை கட்டணமாக பெறப்படுகிறது.

    தனியார் கணினி மையங்களில் Citizen Login-ல் பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, சான்றுகள் சம்மந்தமான விளம்பர பலகைகள் வைத்தாலோ அபராதம் மற்றும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது மக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களை அணுக வேண்டும்.

    சான்றுகளை விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர அதிக கட்டண புகார்களுக்கு edm1rmd.tnegatn.gov.in என்ற மின்னஞ்சலுக்கும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின் மாவட்ட மேலாளரிடம் நேரடியாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எமனேசுவரம் மயான பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
    • தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் மயான பகுதியில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் எமனேசுவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த வாலிபரின் தலை மற்றும் முகத்தில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அவரை யாேரா அடித்து கொலை செய்துள்ளதை போலீசார் உறுதி செய்தனர்.

    அவர் யார்? அவரை கொன்றவர்கள் யார்? என விசாரணை நடத்தப்பட்டது. பின்பு அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் பிணமாக கிடந்தபகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது, அங்கு ஒரு மோட்டார்சைக்கிள் நின்றது.

    அது கொல்லப்பட்ட வாலிபருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கருதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.மேலும் அந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணின் மூலம் கொலையானவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

    அதில் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கல்லணியை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் கண்ணன் என்பது தெரியவந்தது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அவர் எதற்காக பரமக்குடி வந்தார்? என்பது தெரியவில்லை.

    அவரது மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்தில் நின்றதால் அவருக்கு தெரிந்தவர்கள் யாரேனும் அங்கு வரவழைத்து கொலை செய்தார்களா? அல்லது யாரேனும் மர்ம நபர்கள் கடத்தி வந்து அடித்து கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரை கொன்ற கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இறால் குஞ்சுகள் இருந்த பெரிய கேன்கள் படகுகள் மூலம் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டன.
    • 3.1 மில்லியன் பச்சை வரி இறால்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விடப்பட்டன.

    மண்டபம்:

    பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்படி கடலில் மீன் வளத்தை அதிகரிக்கும் விதமாக மீன் குஞ்சுகள் மற்றும் பச்சை வரி இறால்களை வளர்த்து கடலில் விடும் பணியை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையம் மேற்கொண்டுள்ளது.

    இதன்படி இன்று 3.1 மில்லியன் பச்சை வரி இறால்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விடப்பட்டன. பெரிய கேன்களில் அடைக்கப்பட்டிருந்த இறால் குஞ்சுகள், படகுகள் மூலம் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் அவற்றை மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மையத்தின் தலைவர் தமிழ்மணி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கடலில் விட்டனர். மண்டபம் பகுதி மீனவர் சங்க தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    கடந்த 2022 பிப்ரவரி திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 36.54 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் விடப்பட்டுள்ளதாக மீன் வள ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மீன்வளத்தை அதிகரிக்கும் என்பதால், ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அய்யப்பன் அவதார நட்சத்திர தின விழா நடந்தது.
    • அய்யப்பன் பாடல்களை இசை வாத்தியங்களுடன் பக்தர்கள் பாடி மகிழ்ந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தின் சார்பில் கலியுக வரதன் சபரிமலை அய்யப்பன் அவதார நட்சத்திர தினத்தை முன்னிட்டு விசேஷ பூஜை நடந்தது. சங்கத் தலைவர் முத்து இருளாண்டி தலைமை தாங்கினார்.

    செயலாளர் முத்துராஜ், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் படத்திற்கு சிறப்பு பூஜை-தீபாராதனை நடந்தது. அய்யப்பன் பாடல்களை இசை வாத்தியங்களுடன் பக்தர்கள் பாடி மகிழ்ந்தனர். அன்னதானம் நடந்தது.

    • கொரியரில் உடைந்த டி.வி.க்கு விற்பனை நிறுவனம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
    • நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    மண்டபம் மறவர் தெருவை சேர்ந்தவர் வசந்த். இவர் கடந்த 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந்தேதி கோவை இசூசா எலெக்ட்ரானிக் நிறுவனத்தில் இரண்டு எல்.இ.டி. டி.வி.கள் வாங்கியுள்ளார். அவை கொரியரில் வந்த போது ஒரு டி.வி. உடைந்திருந்தது. இது குறித்து விற்பனை நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து வசந்த் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனில் புகார் செய்தார். அவர்களது வழிகாட்டுதல்படி ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி பாலசுப்பிரமணியன் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் குட்வின் சாலமன் ராஜ், நமச்சிவாயம் ஆகியோர் விற்பனை நிறுவனம் உடைந்த டி.வி.க்கான தொகை ரூபாய் 14 ஆயிரத்து 700 மற்றும் 6 சதவீதம் வட்டியுடன் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்குச் செலவு ரூ, 5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.

    • கமுதி யூனியன் கூட்டத்தில் கோரிக்கைகளை வேற்றக்கோரி கவுன்சிலர் உடலில் மண்எண்ணை ஊற்றினார்.
    • கூட்டத்தில் மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் தமிழ்செல்விபோஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், உதவி சேர்மன்.சித்ரா தேவி அய்யனார் முன்னிலை வகித்தனர். மேலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.

    அ.தி.மு.க. (ஒ.பி.எஸ்.அணி) பேரையூர் கவுன்சிலர் அன்பரசு, கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை திறந்து தலையில் ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். அப்போது மண்எண்ணை மற்ற கவுன்சிலர்கள் மீதும் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

    சேர்மன் தமிழ்செல்வி போஸ் 11-வது வார்டு பேரையூர் கவுன்சிலில் நடந்த திட்டப்பணிகளை பட்டியலிட்டார். மேலும் பேரையூரில் ரூ.50 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப்பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.

    அப்ேபாது கவுன்சிலர் அன்பரசு, பிற துறை அதிகாரிகள் யாரும் யூனியன் கூட்டத்திற்கு வருவதில்லை. மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளதை மின்வாரிய அதிகாரி நடவடிக்கை எடுப்பதில்லை என்றார். உடனே மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுந்து, பழுதடைந்துள்ள மின்கம்பங்களை படிப்படியாக மாற்றி வருகிறோம் என்றார்.

    • கீழக்கரை நகராட்சிக்கு குடிநீர் திட்டபணிக்கு ரூ.211.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 21 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிதண்ணீர் பிரச்சனை என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைக்காமல் லாரியில் விற்பனை செய்யப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு பொதுமக்கள் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தீவிர முயற்சியால், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா நிருபர் களிடம் கூறியதாவது:-

    கீழக்கரை நகராட்சியில் நாள்தோறும் 53.20 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப் படுகிற சூழ்நிலையில் தற்போது 8 லட்சம் லிட்டர் அளவுக்கு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர். தமிழக மக்களின் குடி தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதில் தன்னிகரற்று விளங்கும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ரூபாய் 2883 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தி னை செயல்படுத்த ஆணை யிட்டுள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலா ளரும், சட்டமன்ற உறுப்பினரு மான காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் மேற்கொண்ட தீவிர முயற்சியால் கீழக்கரை நகராட்சிக்கு குடிநீர் திட்ட பணிக்காக 211. 32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் 12,10,5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்படு கிறது.

    கீழக்கரை நகரில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடுதலாக குடிநீர் பைப்லைன் வசதி செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்பட தொடங்கினால் மக்களுக்கு தேவையான அளவை விட கூடுதலாக குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது, இதற்கான திட்ட மதிப்பீடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கீழக்கரையில் குடிநீர் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெ க்டர் முத்துலட்சுமி தலைமையில் ஆய்வு நடந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நகராட்சி பொறியாளர் அருள், நகர்மன்ற கவுன்சிலர்கள் ஷேக் உசேன், நசுருதீன், எஸ்.கே.வி.சுகைபு தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திருவாடானை அருகே குவாரியில் அதிக மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்ட போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் சிறுகாம்பையூர் அருகே அரசு மணல் குவாரி அமைத்து அதிக அளவு மணல் எடுத்து வருவதை தடுத்து நிறுத்திடக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்கு ராமநாதபுரம் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் அக்கீம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சந்தானதாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜீவா, திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மர் முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் கணேசன், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து, பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் கர்ண மகாராஜா, திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன், கீழக்கரை நகரத் தலைவர் அப்துல் லத்தீப், ராமநாதபுரம் நகர செயலாளர் இப்ராஹிம், நகர தலைவர் ராஜா ரபிக், மண்டபம் ஒன்றிய மாணவர் சங்க செயலாளர் களஞ்சிய ராஜா, ராமேசுவரம் நகர செயலாளர் முருகன், மாவட்ட விவசாய அணி மாயழகு மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

    மாவட்ட மாணவர் சங்க தலைவர் பாலகுமார் நன்றி கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

    ×