என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டையில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையுடன் இணைந்து பேரணி சென்றனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையுடன் இணைந்து நடத்திய போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மணமல்லி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் போதை பழக்கத்திற்கு எதிராக கோஷமிட்ட வாறு மாணவர்கள் சென்றனர்.நிறைவாக மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணரர் உறுதிமொழிஎடுத்துக்கொண்டனர்.இந்த நிகழ்வில் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, காவலர்கள் சங்கர நாராணண், கந்தவேல், செபஸ்டின், பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், பள்ளியின்ஒருங்கிணைப்பாளர்கள் கெளாரி அபிராமசுந்தரி ஆசிரியர் கமல்ராஜ், காசாவயல் கண்ணன், உதயகுமார், கணியன் செல்வராஜ், ராமன் மற்றும் ஏராளமான மாணவ,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டையில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
    • தொடர் விபத்துகளும் நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் சாலையின் நடுவே உயரம் கூடியும், சாலையின் இருமருங்கிலும் பள்ளம் ஏற்படும், உயரம், தாழ்வு கொண்ட சாலையாக மாறி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள், பேருந்துகளில் இருந்து இறங்கும் முதியவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. மேலும் தொடர் விபத்துகளும் நடக்கிறது.எனவே பயணிகள் ,பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்று கந்தர்வகோட்டை வர்த்தக சங்கம் சார்பில் மாவட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொன்னமராவதி உடையாபிராட்டி அம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
    • விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பொன்-புதுப்பட்டி உடையாபிராட்டி அம்மன் கோயிலில் ஆடி மாத திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். அதேபோன்று இவ்வாண்டு பாலாஜி குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சந்தன காப்பு சேர்த்தப்பட்டது. பின்னர் 1008 பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி மலர்களினாலும், குங்குமதினாலும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இவ்வாறு 1008 திருவிழாக்கு ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமாக மனித வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதனை ஐதிகமாக கொண்டு இக்கோயிலில் பல வருடங்களாக இந்த திருவிளக்கு பூஜை வழிபாடு என்பது இன்று வரை நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னமராவதி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் தீயணைப்பு படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    • கறம்பக்குடி பேரூராட்சி வார்டுகளில் ரூ.1.7 கோடியில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது
    • பச்ச நாயகம் குளக்கரை அருகே நடந்த பூமி பூஜையில் பேரூராட்சி தலைவர் முருகேசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பல்வேறு வார்டுகளில் பிளாக் சாலை அமைப்பது உள்ளிட்ட ரூ.1.7 கோடி திட்டபணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.கறம்பக்குடி பேரூராட்சி 9வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பச்சநாயகம் குளக்கரை அருகே நடைபெற்ற பூமி பூஜையில் கறம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சி திமுக தலைவர் உ.முருகேசன் கலந்து கொண்டார். விழாவில் செயல் அலுவலர் கார்த்திகேயன் 9வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் ராஜா மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களான வளர்மதி கருப்பையா, செண்பகவள்ளி, முருகேஸ்வரி ராஜசேகர், பேரூராட்சி அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பேரூராட்சி பொறியாளர் அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • புதுக்கோட்டை கிளை யில் எல்.ஐ.சி. அலுவலகத்திற்கு முன்பாக விளக்கக் கூட்டம் நடை பெற்றது.
    • தமிழ் மாநில செயல் தலைவர் அன்பு நடராஜன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான விளக்க உரை ஆற்றினார்

    புதுக்கோட்டை

    அகில இந்திய எல்.ஐ.சி.முகவர்கள் சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பில்  அடுத்த மாதம் 13-ந் தேதி  சென்னை தென்மண்டல அலுவலகம் முன்பாக தமிழ்நாடு,கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்ட லிகாய் சங்கம் சார்பில் சென்னையில்  7 அம்ச கோரிக்கைகள் தொட ர்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இதுதொடர்பாக வலி யுறுத்தி புதுக்கோட்டை கிளை யில் எல்.ஐ.சி. அலுவலகத்திற்கு முன்பாக விளக்கக் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு கிளையின் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.செயலாளர், மதியழகன் வரவேற்றார் , பொருளாளர் பானுமதி, கௌரவ  தலைவர் தங்கவேல் ஆகி யோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினர்.

     தமிழ் மாநில செயல் தலைவர் அன்பு நடராஜன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான விளக்க உரை ஆற்றினார். நிறைவாக செயற்குழு உறுப்பினர் தெய்வா நன்றி கூறினார். கூட்டத்திற்கு செயற்குழு மற்றும் பொது உறுப்பி னர்கள் என சுமார் 47 முகவ ர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏழைகள் அதிகம் வசிக்கும்புதுக்கோட்டை மாவட்டதிற்கு சிறப்பு திட்டங்கள்
    • இந்திய மாதர் சம்மேளத்தின் கூட்டத்தில் வலியுறுத்தல்

    புதுக்கோட்டை

    இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின்  புதுக்கோட்டை மாவட்ட நிர்வா கக்குழு கூட்டம்  மாவட்ட துணைத் தலைவர்  ஜெயா தலைமையில்  வடக்கு ராஜ வீதி  சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  மாநில செயலாளர்  ஜி.மஞ்சுளா இன்றைய அரசியல் நிலை குறித் தும்  சங்கத்தின் செயல்பாடு கள் குறித்தும் பேசினார் .

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர்  த.செங்கோடன் வாழ்த்துரை வழங்கினார். சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கள்  தனலட்சுமி, கோமதி, விமலா, பரமேஸ்வரி, பஞ்சவர்ணம் ஆகியோர் பங்கேற்றனர்.

    மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய ங்களில் பெண் மருத்து வர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண் டும், கேரளாவை போல்  ரேஷன் கடைகளில் தக்காளி வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும்,  புதுக்கோட்டை மாவட்டம் ஏழைகள் அதிகம் வசிக்கும் மாவட்டம் என  நிதி ஆயோக் அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது, வறுமையிலும் கல்வியிலும் இந்ம மாவட்டம் பின் தங்கியுள்ளதால்  மத்திய அரசும் மாநில அரசும் அதற்கு ஏற்ப  சிறப்பு திட்டங்களை  அறிவித்து செயல்படுத்திட வேண்டும் என்ற தீர்மானங்கள்  ஏக மனதாக நிறைவேற்ற ப்பட்டன.

    • அறந்தாங்கி அருகே கட்டுமாவடியில் அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் 9 பேர் மீது வழக்குபதிவு
    • ஆண்டின் முதல் 6 மாதம் வரை பந்தயங்கள் நடத்திக்கொள்ளவும், அதன் பிறகு அனுமதி வழங்கக்கூடாது

    அறந்தாங்கி

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. அதில் காவல் துறையினர் மருத்துவம், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் போன்ற துறைகளை சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுத்தப் படுகின்றனர். அரசுக்கு செவு ஏற்படுத்துவதோடு அரசு அலுவலர்கள், பொது மக்கள் பணிகள் பாதிக்கப்ப டுகிறது.

    எனவே இதனை கட்டுப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகையிலிருந்து ஆண்டின் முதல் 6 மாதம் வரை பந்தயங்கள் நடத்திக்கொள்ளவும், அதன் பிறகு அனுமதி வழங்கக்கூடாது எனவும் அரசின் சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் கட்டுமாவடி ஸ்ரீ வள்ளிதேவயான சமேத கல்யாண சுப்பிரமணிய சாமி ஆலய ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடத்திக் கொள்வதாக அப்பகுதி கிராம இளைஞர்கள் சார்பில் மணமேல்குடி காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்த்துறையினரின் தடையை மீறி கமிட்டி சார்பில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணமேல்குடி காவல்த்துறையினர், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒன்று கூடி பந்தயம் நடத்திய கமிட்டியாளர்கள் முருகேசன்,ராஜாராம், கார்த்தி, ஹரிஹரசுதன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனர். 

    • தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்
    • கைபேசி எண் பதிவு மாற்றம் ஆகிய சேவைகளை பெற முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும், நாளை 12-ந்தேதி காலை 10மணி முதல் மதியம் 1மணி வரை குடும்ப அட்டைகள், நியாயவிலைக்கடை

    தொடர் பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த வட்டாட்சியாரர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    மேற்படி முகாமில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு மாற்றம் ஆகிய சேவைகளை பெற முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம்.

    பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 -இன் படி மேற்கொண்டும் பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் .மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

    • மருத்துவ விடுப்பில் இருந்த சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சவரியார் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனைவிக்கு ஆதரவாக வக்கீல் கலீல் ரகுமான் செயல்பட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது,

    இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே ஆரோக்கிய ராஜை கைது செய்ய வலியுறுத்தி இரு தினங்களுக்க முன்தினம் வக்கீல்கள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்வதாக கூறியதன் பேரில் போரட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் ஆரோக்கிய ராஜை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என மீண்டும் வக்கீல்கள் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு முன்பாக வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

    மேலும் அலட்சிய போக்கில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே திருக்கோகர்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து மருத்துவ விடுப்பில் இருந்த சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து ள்ளனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    வக்கீல்கள் போராட்டத்தால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விராலிமலை ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • வெயிலின் தாக்கம் உணராமல் படிகளில் கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டது

    விராலிமலை,

    விராலிமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோவில் வருடம் தோறும் ஆடி கார்த்திகை நாள் அன்று மலை மேல் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் நேற்று காலை மலைமேல் உள்ள முருகனுக்கு வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர். பக்தர்கள் வெயிலின் தாக்கத்தை உணராமல் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய ஏதுவாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் படிகளில் கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டது.மேலும் உள்ளுர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்கள் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சத்குரு சம்ஹாரமூர்த்தி கோவிலில் இருந்து பால்குடம், காவடி எடுத்து முருகன் கோவில் மலைமீது ஏறி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    • அறந்தாங்கியில் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • ௨௧ ஜோடி மாடுகளும், 16 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி வள்ளி தேவயானை சமேத கல்யாண சுப்பிரமணிய சாமி ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் 21ஜோடி மாடுகளும், 16 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளுக்கு ஒன்றரை லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.மேலும் மாடு மற்றும் குதிரைகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வக்கீல்கள் போராட்டத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட திருக்கோகர்ணம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயன்றுள்ளார்
    • தூக்க மாத்திரை சாப்பிட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை சவரியார் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருக்கும் அவரது மனைவிக்கு ம் குடும்ப தகராறு ஏற்பட்டது.இதில் மனைவிக்கு ஆதரவாக வக்கீல் கலீல் ரகுமான் செயல்பட்டார்.இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது,இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே ஆரோக்கியராஜை கைது செய்ய வலியுறுத்தி இரு தினங்களுக்க முன்தினம் வக்கீல்கள் திடிரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்வதாக கூறியதன்பேரில்போரட்டம் கைவிடப்பட்டது.இந்நிலையில் ஆரோக்கியராஜை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என மீண்டும் வக்கீல்கள் போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்திற்கு முன்பாக வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .மேலும் அலட்சிய போக்கில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் .இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே திருக்கோகர்ணம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதாவை ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து மருத்துவ விடுப்பில் இருந்த சங்கீதா இன்று அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.உறவினர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ விடுப்பில் இருந்த பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் மர்ம நபர்கள் போனில் ஆபாசமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.வக்கீல்கள் போராட்டத்தால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பெண் சப் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் காவல் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×