search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம்
    X

    மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம்

    • அறந்தாங்கியில் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • ௨௧ ஜோடி மாடுகளும், 16 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி வள்ளி தேவயானை சமேத கல்யாண சுப்பிரமணிய சாமி ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது.விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகள் மற்றும் குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் 21ஜோடி மாடுகளும், 16 குதிரைகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரைகளுக்கு ஒன்றரை லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.மேலும் மாடு மற்றும் குதிரைகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×