என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை  உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான  குறைதீர்க்கும் முகாம்
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான குறைதீர்க்கும் முகாம்

    • தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்
    • கைபேசி எண் பதிவு மாற்றம் ஆகிய சேவைகளை பெற முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும், நாளை 12-ந்தேதி காலை 10மணி முதல் மதியம் 1மணி வரை குடும்ப அட்டைகள், நியாயவிலைக்கடை

    தொடர் பான குறைகள் தீர்க்கும் முகாம் அந்தந்த வட்டாட்சியாரர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

    மேற்படி முகாமில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு மாற்றம் ஆகிய சேவைகளை பெற முகாமில் கோரிக்கையினை அளிக்கலாம்.

    பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 -இன் படி மேற்கொண்டும் பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் .மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×