search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம்
    X

    அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம்

    • அறந்தாங்கி அருகே கட்டுமாவடியில் அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் 9 பேர் மீது வழக்குபதிவு
    • ஆண்டின் முதல் 6 மாதம் வரை பந்தயங்கள் நடத்திக்கொள்ளவும், அதன் பிறகு அனுமதி வழங்கக்கூடாது

    அறந்தாங்கி

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. அதில் காவல் துறையினர் மருத்துவம், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் போன்ற துறைகளை சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுத்தப் படுகின்றனர். அரசுக்கு செவு ஏற்படுத்துவதோடு அரசு அலுவலர்கள், பொது மக்கள் பணிகள் பாதிக்கப்ப டுகிறது.

    எனவே இதனை கட்டுப்படுத்தும் விதமாக பொங்கல் பண்டிகையிலிருந்து ஆண்டின் முதல் 6 மாதம் வரை பந்தயங்கள் நடத்திக்கொள்ளவும், அதன் பிறகு அனுமதி வழங்கக்கூடாது எனவும் அரசின் சார்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் கட்டுமாவடி ஸ்ரீ வள்ளிதேவயான சமேத கல்யாண சுப்பிரமணிய சாமி ஆலய ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தையம் நடத்திக் கொள்வதாக அப்பகுதி கிராம இளைஞர்கள் சார்பில் மணமேல்குடி காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்த்துறையினரின் தடையை மீறி கமிட்டி சார்பில் ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணமேல்குடி காவல்த்துறையினர், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒன்று கூடி பந்தயம் நடத்திய கமிட்டியாளர்கள் முருகேசன்,ராஜாராம், கார்த்தி, ஹரிஹரசுதன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×