என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
    X

    மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

    • புதுக்கோட்டையில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையுடன் இணைந்து பேரணி சென்றனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையுடன் இணைந்து நடத்திய போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் மணமல்லி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் போதை பழக்கத்திற்கு எதிராக கோஷமிட்ட வாறு மாணவர்கள் சென்றனர்.நிறைவாக மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணரர் உறுதிமொழிஎடுத்துக்கொண்டனர்.இந்த நிகழ்வில் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, காவலர்கள் சங்கர நாராணண், கந்தவேல், செபஸ்டின், பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல், பள்ளியின்ஒருங்கிணைப்பாளர்கள் கெளாரி அபிராமசுந்தரி ஆசிரியர் கமல்ராஜ், காசாவயல் கண்ணன், உதயகுமார், கணியன் செல்வராஜ், ராமன் மற்றும் ஏராளமான மாணவ,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×