என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ஆட்டுக்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிப்பட்டது.
    • 10 அடி நீளமுள்ளது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அன்னவாசல் ஆலங்குளம் பகுதியில் சிலர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது குளத்தின் கரையில் பதுங்கியிருந்த மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டு குட்டியை பாதி விழுங்கி விட்டு அசையமுடியாமல் கிடந்தது. இதைப்பார்த்த சிலர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மலைப்பாம்பிடம் இருந்து செத்த நிலையில், ஆட்டுக்குட்டியை இழுத்து வெளிேய கொண்டு வந்தனர். தொடர்ந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் மலைப்பாம்பை நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.

    • ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • கீரனூர் எழில்நகர் பகுதியை சேர்ந்த மேத்யூ மகன் யோஸ்வா பிரின்ஸ் (வயது 26), ஈச்சங்காடு பாண்டியன் மகன் கோவிந்தராஜ் (20) ஆகியோர்

    புதுக்கோட்டை

    கீரனூர் அருகே இளையவயல் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கன் மனைவி சுமதி. இவர் குளத்தூரில், காமாட்சி என்பவர் வீட்டில் தான் வளர்த்து வந்த 6 ஆடுகளை கட்டி வைத்து விட்டு ஊருக்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆடுகளை திருடியது கீரனூர் எழில்நகர் பகுதியை சேர்ந்த மேத்யூ மகன் யோஸ்வா பிரின்ஸ் (வயது 26), ஈச்சங்காடு பாண்டியன் மகன் கோவிந்தராஜ் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.

    • ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளனர்
    • பெற்றோர்கள் வர மறுத்ததால் சங்கர்-பிரியதர்ஷினிக்கு திருமண வயது தாண்டி விட்டதால் இருவரும் சேர்ந்து வாழ்வதாக எழுதிக்கொடுத்தனர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியை சேர்ந்தவர் அழகர் மகன் சங்கர் (வயது 28). இவரும், கொத்தமங்கலத்தை சேர்ந்த ராமநாதன் மகள் பிரியதர்ஷினி (26) என்பவரும் காதலித்து அப்பகுதியில் உள்ள கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் இவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பெற்றோர்கள் வர மறுத்ததால் சங்கர்-பிரியதர்ஷினிக்கு திருமண வயது தாண்டி விட்டதால் இருவரும் சேர்ந்து வாழ்வதாக எழுதிக்கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

    • திருவப்பூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • தற்கொலை காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருவப்பூரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 29). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சதீஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சதீஷ்க்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார்.

    • ஆதனக்கோட்டை புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து நாளை மின் விநியோகம் நிறுத்தம்
    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு

    கந்தர்வகோட்டை

    கந்தர்வகோட்டை பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை 25-ந்தேதி மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.

    ஆதனக்கோட்டை புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர் ,கணபதிபுரம் ,பெருங்களூர் ,தொண்டைமான் ஊரணி ,வாராப்பூர் ,அண்டக்குளம் ,மண விடுதி, சோத்துப் பாலை ,சொக்கநாத பட்டி ,மாந்தான்குடி ,காட்டு நாவல் ,மங்களத்துப்பட்டி ,கந்தர்வகோட்டை, அக்க ட்சிப்பட்டி ,வளவம்பட்டி ,கல்லாக்கோட்டை ,சங்கம் விடுதி, மட்டங்கால் ,வேம்பன் பட்டி ,வீரடிப்பட்டி ,புதுப்பட்டி ,நம்புரான் பட்டி ,மோகனூர் ,பகட்டுவான் பட்டி, பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர் ,வடுகப்பட்டி ,பிசானத்தூர் ,துருசுப்பட்டி, மெய்குடி பட்டி ,வெள்ளாள விடுதி , சுந்தம் பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை 25 -ந்ேததி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொ றியாளர் அறிவித்துள்ளார்.

    • அறந்தாங்கி அருகே வீட்டில் தூங்கிகொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு உள்ளார்
    • கொலையான பெண்ணின், கணவரிடம் போலீஸ் துருவி துருவி விசாரணை

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நவரத்தினாநகரை சேர்ந்தவர் பிரம்மன்(வயது 50 ). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுப்பம்மாள் 47) .

    இவர்களுக்கு பாண்டி (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனது சொந்த வேலையாக மகள் வெளியூர் சென்றிருந்தார். பாண்டி வேலைக்கு சென்றுவிட்டார். சுப்பம்மாள் வீட்டிற்குள்ளும், பிரம்மன் வீட்டின் ெவளியே யும் தூங்கிக் கொண்டிரு ந்தனர்.

    இந்நிலையில் பணி முடித்து வீட்டிற்கு பாண்டி வந்தார். அப்போது கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுப்பம்மாள் பிணமாக கிடந்ததை பா ர்த்து அதிர்ச்சியடைந்து கதறினார்.

    இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவ ர்கள் ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த அற ந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் சுப்பம்மாவை கொலை செய்தது யார்? என்பது குறித்து கணவர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுக்கோட்டையில் நடந்து சென்ற வி.ஏ.ஓ திடீர் என மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • புதுக்கோட்டையில் நடந்து சென்ற வி.ஏ.ஓ திடீர் என மயங்கி விழுந்து உயிரிழந்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அருகே வெள்ளனூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவர் கந்தர்வகோட்டை அருகே தெம்மாவூரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை ெபற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை கிழக்க 2-ம் வீதியில் நடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே கண்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுப்பம்மாள் பிணமாக கிடந்ததை பா ர்த்து அதிர்ச்சியடைந்து கதறினார்.
    • வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நவரத்தினாநகரை சேர்ந்தவர் பிரம்மன்(வயது 50 ). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுப்பம்மாள் (47).

    இவர்களுக்கு பாண்டி (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனது சொந்த வேலையாக மகள் வெளியூர் சென்றிருந்தார். பாண்டி வேலைக்கு சென்று விட்டார். சுப்பம்மாள் வீட்டிற்குள்ளும், பிரம்மன் வீட்டின் வெளியேயும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் பணி முடித்து வீட்டிற்கு பாண்டி வந்தார். அப்போது கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுப்பம்மாள் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார்.

    இவரது சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் சுப்பம்மாவை கொலை செய்தது யார்? என்பது குறித்து கணவர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தடை செய்யப்பட்ட ஒலிப்பான்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
    • பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரத்தில் சமீப காலமாக சாலை விதிகளை அதிகளவில் மீறி வருகின்றனர். குறிப்பாக கனரக வாகனங்களில் தடைச்செய்யப்பட்ட ஒலிப்பான்கள் தனியார் வாகனங்கள் மட்டுமின்றி அரசு வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஏதேனும் புகார் வந்தால் மட்டும் அதிகாரிகள் படைசூழ சென்று நடவடிக்கை எடுக்கின்றனர். பின்னர் விட்டு விடுகின்றனர். தொடர் நடவடிக்கை இல்லாத காரணத்தால் மீண்டும் பழைய நிலை தொடர்கிறது. தடை செய்யப்பட்ட ஒலிப்பான்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.

    அதேபோன்று தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரின் நெரிசல் மிகுந்த பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் வாகன ஓட்டிகளுக்கு அச்சறுத்தலாக உள்ளது. இதனால் சில சமயங்களில் எதிரில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது. அது மட்டு மல்லாமல் சாகச பயணம் செய்யும் இளைஞர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.

    இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது படிக்கும் பருவத்தில் எதற்காக மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தோம் என பெற்றோர் யோசிக்கின்றனர்.

    நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதன் வாயிலாக ஹெல்மெட் போன்றவற்றுக்கு ஆன்லைன் வாயிலாக அபராதம் விதிக்கிறார்கள். இது ஒரு புறம் இருந்தாலும் அவ்வப்போது காவல் துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதிவேகமாக செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்து ஓட்டுகின்றனரா? என கண்காணிக்க வேண்டும். அதிலும் அதிகமாக வீடுகள் உள்ள பகுதிகளில் சிலர் கண் மூடிதனமாக வாகனங்களை ஓட்டுகின்றனர். அவ்வாறு ஓட்டி செல்பவர்களை பிடித்து உரிய தண்டனை கொடுத்தால் தான் அடுத்தவர்கள் அந்த தவறை செய்ய தயங்குவார்கள். எனவே போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிறுவர்களை காப்பாற்ற வேண்டும். பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுக்கோட்டை வருவாய்த்துறை ஊழியர்கள்ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்
    • அடிப்படை பணியிடங்களில் பதவி உயர்வினை வழங்க மறுக்கும்மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின்(பொது) ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின்சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின்மாவட்டத் தலைவர் கே.கருப்பையா தலைமை வகித்தார்.கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் வைரவன் உள்ளிட்டோர்பேசினர். அடிப்படை பணியிடங்களில் பதவி உயர்வினை வழங்க மறுக்கும்மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை(பொது) கண்டித்தும்,கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு அரசால் பணியிடங்கள்ஒதுக்கீடு செய்யப்பட்டும் மாவட்ட நிர்வாகத்தில் பணி நியமன ஆணைவழங்க நீண்ட காலதாமதம் செய்வதை கண்டித்தும், முக்கிய பணிகளுக்குபுதிய பணியிடத்திற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பி பணியிடங்கள் பெற்றும் பணியிடங்களை நியமிக்காமல் மாற்றுப் பணிஎன்ற பெயரில் பல மாதங்களாக பணிபுரிய வைப்பதை கண்டித்தும்ஆர்ப்பாட்டங்களில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    • புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் முதல் புகைப்பட கேமிரா, திரைப்பட கருவி கண்காட்சி நடைபெற்றது
    • பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முதல் சினிமா கருவியை பார்த்து வியந்து அவற்றோடு செல்பி எடுத்துக் கொண்டனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, முதல்புகைப்படக்கருவி மற்றும் திரைப்படக்கருவி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்திலிருந்து சினிமா என்கிற நிலைக்கு தொழில்நுட்பமாற்றம்நிகழ்த்திய கருவிகளை சேகரித்து பாதுகாத்து வரும் நா. முகமதுஅப்சர்என்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன் காட்சிப்படுத்தியிருந்தார். முதல்சினிமா கருவியோடு உலகத் திரைப்பட தினத்தை முன்னிட்டு சினிமாதொழில் நுட்பம் வளர்ந்த வரலாறுகளை மாணவன் விளக்கிக் கூறினார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முதல் சினிமா கருவியை பார்த்து வியந்து அவற்றோடு செல்பி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளிமுதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாணவனைப் பாராட்டி பரிசு வழங்கினார். துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் பலர்கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை நகரில் வாகனங்களில் தடை செய்யப்பட்ட காதை பிளக்கும் ஒலிப்பான்கள் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது
    • போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு

    புதுக்கோட்டை.,

    புதுக்கோட்டை நகரத்தில் சமீப காலமாக சாலை விதிகளை அதிகளவில் மீறி வருகின்றனர். குறிப்பாககனரக வாகனங்களில் தடைச்செய்யப்பட்ட ஒலிப்பான்கள் தனியார் வாகனங்கள் மட்டுமின்றி அரசு வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஏதேனும் புகார் வந்தால் மட்டும் அதிகாரிகள் படைசூழ சென்று நடவடிக்கை எடுக்கின்றனர். பின்னர் விட்டு விடுகின்றனர்.தொடர் நடவடிக்கை இல்லாத காரணத்தால் மீண்டும் பழைய நிலை தொடர்கிறது.தடை செய்யப்பட்ட ஒலிப்பான்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.அதேபோன்று தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரின் நெரிசல் மிகுந்த பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் செய்யும் சாகசங்கள் வாகன ஓட்டிகளுக்கு அச்சறுத்தலாக உள்ளது. இதனால் சில சமயங்களில் எதிரில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் சாகச பயணம் செய்யும் இளைஞர்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் போது படிக்கும் பருவத்தில் எதற்காக மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தோம் என பெற்றோர் யோசிக்கின்றனர்.நகரின் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதன் வாயிலாக ஹெல்மெட் போன்றவற்றுக்கு ஆன்லைன் வாயிலாக அபராதம் விதிக்கிறார்கள். இது ஒரு புறம் இருந்தாலும் அவ்வப்போது காவல் துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதிவேகமாக செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்து ஓட்டுகின்றனரா? என கண்காணிக்க வேண்டும். அதிலும் அதிகமாக வீடுகள் உள்ள பகுதிகளில் சிலர் கண் மூடிதனமாக வாகனங்களை ஓட்டுகின்றனர். அவ்வாறு ஓட்டி செல்பவர்களை பிடித்து உரிய தண்டனை கொடுத்தால் தான் அடுத்தவர்கள் அந்த தவறை செய்ய தயங்குவார்கள். எனவே போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிறுவர்களை காப்பாற்ற வேண்டும். பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×