என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை குத்தி கொன்ற  சிறுவன்
    X

    பெண்ணை குத்தி கொன்ற சிறுவன்

    • பெண்ணை குத்தி கொன்ற சிறுவன் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • தாய் மது அருந்த காரணமாக இருந்ததால் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிரம்மன். இவரது மனைவி சுப்பம்மாள் (வயது 45). இவர்களுக்கு அருண் பாண்டியன் (20), ஹரிணி (18) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர்.சுப்பம்மாள் அறந்தாங்கி எல்.என்.புரம் நவரத்தின நகரில் மகன் அருண்பாண்டியனுடன் வசித்து வந்தார். பிரம்மன், மகள் ஹரிணியுடன் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு சுப்பம்மாள் வீட்டில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்போது வீட்டிற்கு வந்த அருண்பாண்டியன் தனது தாய் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து கதறி அழுதார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.பின்னர் இதுகுறித்து அவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் ேபரில், அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.பின்னர் இதுகுறித்து அவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் ேபரில், அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.தொடர்ந்து புதுக்கோட்டையில் இருந்து மோப்ப நாய் தீரன் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்கள் எடுத்து சென்றனர்.போலீசாரின் தீவிர விசாரணையில் அதே பகுதியியை 16 வயது சிறுவன் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அச்சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர்.சுப்பம்மாளுடன் சேர்ந்து எனது தாய் மல்லிகா மது அருந்தினார். இதனை பார்த்த நான் எனது தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு சுப்பம்மாள் தான் காரணம் என நினைத்து ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன் என தெரிவித்ததாக தெரியவருகிறது.

    Next Story
    ×