என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நூலகர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு
- புதுக்கோட்டையில் சிறப்பாக பணியாற்றிய நூலகர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது
- நூலகர் தின விழாவை முன்னிட்டு கலெக்டர் மெர்சி ரம்யா நினைவு பரிசுகளை வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில், மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய, நூலகர் தின விழாவில், சிறப்பாக பணிபுரிந்த நூலகர்களுக்கும் மற்றும் அதிகளவில் புரவலர்களை சேர்த்த நூலகர்களுக்கும், மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா, பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது பொதுமக்கள் அனைவரும் புத்தகம் படிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறைவான செலவில் நிறைவான தகவல்களை பெறுவதற்காக பொதுமக்கள் நூலகத்தினை அதிக அளவில் பயன்படுத்திட வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களிலும் அடிப்படை வசதிகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதன் மூலம் பொதுமக்களின் நூலக பயன்பாட்டினை அதிகரிக்க முடியும். இணையதள பயன்பாட்டில் மூழ்கி இருக்கும் இன்றையகால சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் விதமாக அவர்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்.
எனவே பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நூலகத்திற்கு சென்று நல்ல நூல்களை படிப்பதன் மூலம் நம்மை நாமே நல்வழிப்ப டுத்திக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் (கூ.பொ.) சிவக்குமார், வாசகர் வட்டத் தலைவர் தங்கம்மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்