என் மலர்
புதுக்கோட்டை
- மக்கள் தொடர்பு முகாமில் வழங்கப்பட்டது
- புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை வட்டம், பெருங்களுர் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில், 1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பின்னர் அவர் கூறும்போது,தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம்களை நடத்துவதற்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பெருங்களுர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 1,029 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும்.இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளை தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதிகளில் வாழும் பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றிடும் வகையில்
- 804 பெண் விவசாய உறுப்பினர்கள் உள்ளனர்
- கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்கொண்டான்விடுதி ஊராட்சி, கூழையான் விடுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ், பெண் விவசாயிகளை கொண்ட தொண்டைமான் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பெண் விவசாயிகளை கொண்டு உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தொண்டைமான் உழவர் உற்பத்தியாளர் நிறுவனமானது, முழுவதும் பெண் விவசாயிகளை கொண்டு பெருங்கொண்டான் விடுதி ஊராட்சி, கூழையான்விடுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை, திருவரங்குளம் மற்றும் அறந்தாங்கி வட்டாரங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட உற்பத்தியாளர் குழுக்களை சார்ந்த 804 பெண் விவசாயிகள் உறுப்பினராக உள்ளனர். இதன் இயக்குனர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் அனைவரும் பெண்களே.இந்நிறுவனத்திற்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ரூ.5 லட்சம் தொடக்க நிதி மானியமாகவும், ரூ.10 லட்சம் வணிக விரிவாக்க நிதி மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது. வணிக விரிவாக்க நிதியினை பயன்படுத்தி கடலை தோல் பிரிக்கும் எந்திரம் மற்றும் எண்ணெய் செக்கு எந்திரம், வேளாண் பொறியியல் துறை உதவியுடன் வாங்கப்பட்டு எண்ணெய் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலையின் மூலம் நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை உற்பத்தி செய்ய முடியும்.இந்த நிகழ்ச்சியில் திட்ட மாவட்ட செயல் அலுவலார் ஜெய்கணேஷ், செயற்பொறியாளர் (வேளாண் பொறியி யல்துறை) செல்வம், செயல் அலுவலார் கிருபாகரன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது
- கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு தீர்மானம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம், தலைவர் ரேணுகாதேவி தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர் பழனிவேல், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள்கள், பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில், வருகின்ற கல்வி ஆண்டில் கூடுதலாக மாணவர்களை சேர்க்கவும், பள்ளியில் குடிநீர் வசதிக்காக புதிதாக போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றை சரியாக பயன்படுத்தவும், ஆர்.ஓ. சிஸ்டம் ஸ்பான்சர் மூலம் அமைக்கவும், சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
- விராலிமலையில் பரிதாபம்
- விராலிமலை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
விராலிமலை,
விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் கலிங்கக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் நித்தியானந்தம் (வயது 24). இவர் விராலிமலை அருகே உள்ள தனியா கார் உதிரி பாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கொடும்பாளூர் ஐ.டி.ஐ. அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் நித்தியானந்தம் உயிரிழந்தார். தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்தபோது கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான்
- மறைந்த ராணி ரமாதேவி 1.10.1939-ம் ஆண்டு காரைக்குடியில் பிறந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்தபோது கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான். இவரது சகோதரர் ராதாகிருஷ்ண தொண்டைமானின் மனைவி ராணி ரமாதேவி (வயது 84). இவர், புதுக்கோட்டை அருகே இச்சடியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார்.
இவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று மதியம் இறந்தார். அவரது உடல் புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்டது. அவரது குடும்பத்தினர், கலெக்டர் கவிதாராமு மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து இவரது இறுதிச்சடங்கு இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற உள்ளது. ராணி ரமாதேவி உடல் அவரது இல்லத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மறைந்த ராணி ரமாதேவிக்கு ராஜகோபால தொண்டைமான் மற்றும் விஜயகுமார் தொண்டைமான் ஆகிய இரண்டு மகன்களும், ஜானகி மனோகரி ராஜாயி என்ற மகளும் உள்ளனர்.
மறைந்த ராணி ரமாதேவி 1.10.1939-ம் ஆண்டு காரைக்குடியில் பிறந்தார். அவர் தனது பள்ளி படிப்பை கோவை, திருச்சி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் படித்துள்ளார். பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில பட்டம் பெற்றார். இவருக்கு 4.9.1954-ம் ஆண்டு ராதாகிருஷ்ண தொண்டைமானுடன் திருமணம் நடைபெற்றது. ராணி ரமாதேவி தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு வாலிபால் சங்க துணை தலைவராகவும், எல்.ஐ.சி.யில் இயக்குனர் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
புதுக்கோட்டை பாய்ஸ் கிளப் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் வாலிபால் மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் சிறந்து விளங்கினார். இவர் தமிழ் மொழியோடு ஆங்கிலம், மலையாளம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்றிருந்தார். புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் பள்ளியின் செயலாளராக இருந்தார்.
மேலும் புதுக்கோட்டையில் உள்ள பல கோவில்களுக்கு கும்பாபிஷேக குழு தலைவராகவும் இருந்துள்ளார்.
- ஆவுடையார்கோவிலில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் 3 பேரை கைது செய்ய கோரி மறியல் போராட்டம
- 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் பழனி (வயது 39), ஸ்ரீராம்தீபக் (30), சந்தனபிச்சை (46). இவர்கள் 3 பேரும் சமீப காலமாக அடிதடி, பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கே வந்த பழனி உள்ளிட்ட 3 பேர் காரணமின்றி மாணிக்கத்தை அடித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த மாணிக்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட உறவினர்கள், பொதுமக்கள், இது போன்ற சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டது என்று கூறி ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் அளித்து 18 நாட்களை கடந்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்த்துறையை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கே வந்த அறந்தாங்கி டிஎஸ்பி தினேஷ்குமார், வட்டாட்சியர் மார்டின் லூதர்கிங் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது பொதுமக்கள் கூறுகையில் குற்றவாளிகள் 3 பேரும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தெருவில் நடந்து செல்பவர்களை கூட வீண் வம்பு இழுத்து கொலைவெறி தாக்குதல் நடத்துகின்றனர். இவர்கள் மீது பல்வேறு மாவட்டங்களில், பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.எனவே இவர்கள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 5 நாட்களுக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.
- கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டார்
- 181 மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சியினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் தெரிவித்ததாவது:-தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 207 முதல் தவணை தடுப்பூசிகளும், 13 லட்சத்து 78 ஆயிரத்து 358 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் மற்றும் 1 லட்சம் 86 ஆயிரத்து 461 முன்னெச்சரிக்கை நடவடிக்கை தடுப்பூசிகள் என மொத்தம் 29 லட்சத்து 77 ஆயிரத்து 26 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.மேலும் கோவிட் தொற்று சிகிச்சை அளிக்க ஏதுவாக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 125 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 290 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 85 படுக்கைகளும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 326 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 94 படுக்கைகளும் மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 121 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 149 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 50 படுக்கைகளும் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 364 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 26 படுக்கைகளும் என மொத்தம் 1,630 படுக்கை வசதிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 1,800 பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் 4,664 ஆர்.டி.பி.சி.ஆர் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
2023 நடப்பாண்டில் 23 நபர்களுக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதில் 15 நபர்கள் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 8 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்காக 181 மருத்துவர்களும், 285 செவிலியர்களும், 12 மருத்துவ உதவியாளர்களும், வெண்டிலேட்டர் பயிற்சி பெற்ற 40 நபர்களும் மற்றும் 110 வெண்டிலேட்டர்களும், 23 ஆக்ஸிமீட்டர் கருவிகளும், 148 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள், 549 ஆக்ஸிஜன் உருளைகளும், திரவ ஆக்ஸிஜன் 4 கொள்கலன்களும் தயா ர்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 21,023 எண்ணிக்கையிலான கவச உடைகளும், 6,326 எண்ணிக்கையிலான 95 முகக்கவசங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது அரசு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி, இணை இயக்குநர் ராதிகா, இருக்கை மருத்துவர் இந்திராணி, துணை இயக்குநர் ராம்கணேஷ், வட்டாட்சியர் விஜயலெட்சுமி பலர் உடனிருந்தனர்.
- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மஞ்சள் பை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்
- மாநில அளவில் சிறந்த பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு பணபரிசு வழங்கப்படும்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணியை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு மாநில அளவில் இந்த விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. முதல் பரிசாக ரூ.10 லட்சமும் வழங்கப்பட உள்ளது.இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன் மாதிரியாகத் திகழும் பள்ளிகள்,கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது.இதற்கான விண்ணப்ப படிவங்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தில் தனிநபர் , நிறுவனத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் சிடி பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2023 ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பாசன வாய்க்கால்களை தூர் வாரிட கோரிக்கை
- தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, பாலையூர் கன்மாயில் சின்னமடை, பெரியமடை, கோயில் மடை, ராவுத்தர் மடை, ஐயா மடை உள்ளிட்ட பாசன வாய்க்கால்களை சர்வே செய்து தூர்வாரி சொப்பனிடக் கோரி இந்திய ஐக்கிய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வேலன் தலைமை தாங்கினார்.நல்லதம்பி, சேகர், சக்திவேல், சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் சொர்ணகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் தங்கராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர்.மாதர் சங்க மாவட்ட தலைவர் சரஸ்வதி, புதுக்கோட்டை நகர செயலாளர் ரமேஷ், கலை இலக்கிய மன்ற பொறுப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் மணி, செல்லப்பா, சாகுல் ஹமீது, சாம்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு ஆலங்குடி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
- கந்தர்வகோட்டை அருகே நடந்த விபத்தில் வாலிபர் பலியானார்
- காயம்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த மங்கனூர் கிராமத்தில் புனித சூசையப்பர் ஆலய திருவிழாவை காண்பதற்காக தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியை அடுத்த மணல்மேடு பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் அசோக் (வயது 23), மணி மகன் வெங்கடேஷ், மதியழகன் மகன் சூர்யா (12) ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்திருந்தனர்.பின்னர் அவர்கள் மங்கனூர் ஆலய திருவிழாவில் கலந்துகொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பும் போது கோமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அசோக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த வெங்கடேஷ், சூர்யா ஆகியோர் புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இது தொடர்பாக கந்தர்வ கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
- திருச்சி அரசு மருத்துவமனை குழந்தை நல டாக்டர் பங்கேற்பு
விராலிமலை,
விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவில், குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவரும், உதவி பேராசிரியருமான பத்மபிரியா பங்கேற்று மழலையர் பிரிவு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டி பேசினார். தொடர்ந்து மாணவர்களுடன் கல்வி தொடர்பான கேள்வி பதில் கேட்டு கலந்துரையாடினார். விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வெல்கம் மோகன் தலைமை வகித்தார்.இயக்குனர் அருண் பிரசாத் மோகன் முன்னிலை வகித்தார் ஏற்பாடுகளை முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் ஜோசப், ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
- சௌடாம்பிகை அம்மன் கோயிலில் நடைபெற்றது
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை
பொன்னமராவதி,
பொன்னமராவதி உள்ள சௌடாம்பிகை அம்மன் கோயிலில் கரகம் எடுப்பு பொங்கல் அபிஷேக ஆராதனை சக்திவேல் அழைத்து வணங்கும் விழா தேவாங்கர் மகா ஜன சபையின் சார்பாக நடைபெற்றது. பொன்னமராவதியில் உள்ள இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோயிலில் கரகமஹோத்சவ விழாவை முன்னிட்டு பொன்னமராவதி சிவன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று சௌடாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் மகா அபிஷேக, ஆராதனை, அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் மலையாண்டி கோவிலில் இருந்து கரகம் எடுத்தல், ரதி சேர்த்தல் என்னும் கத்தி போடும் நிகழ்வும் நடைபெறுகிறது. இதில் ஏராளமானோர் விரதம் இருந்து பங்குனி திருவிழாவில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்வர். அதனைத் தொடர்ந்து நாளை மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலமும் எடுத்துச் சென்று சாமியை வழிபாடு செய்யப்படும்.






