என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • ஆக்கிரமிப்பை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • பொதுமக்கள் போராட்டத்தால் உடனே ஆக்கிரமிப்பு அகற்றம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் கே.கே.நகர், குறிஞ்சி நகரில் வசிக்கும் பொதுமக்கள் குறிஞ்சி நல குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஆசைதம்பி தலைமையில் நேற்று காலை துறைமங்கலம் கே.கே.நகர் ஆர்ச் முன்புள்ள திருச்சி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதோடு, அந்தப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.அப்போது அவர்கள் கூறுகையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி, துறைமங்கலம் கே.கே.நகர் மெயின் ரோட்டில் இருந்து நகராட்சி தண்ணீர் தொட்டி சுற்றுச்சுவர் வழியாக அமைக்கப்பட்ட பொதுப்பாதை வழியாக துறைமங்கலம் கே.கே.நகர், புதுக்காலனி, வடக்கு தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அரசு நகர்ப்புற மருத்துவமனை, மாவட்ட மைய நூலகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், கால்நடை மருத்துவமனை, புதிய பஸ் நிலையத்துக்கு சென்று வந்தனர்.அந்த பொதுப்பாதையை அருகே உள்ள ஒரு வீட்டுக்காரர் ஆக்கிரமித்துள்ளார். அந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஏற்கனவே கடந்த மாதம் 31-ந்தேதி நகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசாரும், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜும் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுப்பாதையை தற்காலிகமாக பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள திறந்து விட்டார். இதனால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

    • பெரம்பலூரில் லாரி மோதியதில் மற்றொரு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
    • நெடுஞ்சாலை ரோந்து போலீசார் லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு சாலையில் நேற்று மதியம் வந்த சிமெண்டு கலவை எந்திரம் லாரி நெடுஞ்சாலையை திருச்சி நோக்கி திரும்பியது. அப்போது அந்த லாரி மீது பின்னால் கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையத்தில் சிமெண்டு மூட்டைகளை இறக்கி விட்டு, அரியலூரை நோக்கி வந்த லாரி மோதியது. இதில் சிமெண்டு கலவை லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதன்மீது மோதிய லாரியின் முன்புறம் சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 70 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது
    • விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கான வளாகம், குடியிருப்பு மற்றும் மைதானம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர்பந்தலில் உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீசார் குடியிருக்கும் வீடுகளின் பின்புறம் மற்றும் அருகே உள்ள பகுதியில், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்த வாகனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு முடிவடையாமல் நிலுவையில் உள்ளதால், அவை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வந்தன. மேலும் வாகனங்களை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்தும், புதர் மண்டியும் காணப்பட்டன. இந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் யு, வி பிளாக்குகள் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் நேற்று மதியம் 12.45 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது. பின்னர் தீ மள, மளவென பரவி இருசக்கர வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால் கரும்புகை வெளியேறியதால் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு வளாகம் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனை கண்ட குடியிருப்பில் வசிப்பவர்கள் இது குறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனங்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி இருசக்கர வாகனங்கள் மீது எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் 70 இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகி எலும்புக்கூடாக காட்சியளித்தன.

    • சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று வேப்பூர் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • மெட்டல் சாலை அமைக்கவும் முடிவு

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் ஒன்றியத்தின் சாதாரண குழு கூட்டம், ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமலதா செல்வகுமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு கூட்டத்தில் வேப்பூர் யூனியனில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் அனைத்து கிராமங்களிலும் மெட்டல் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வேப்பூர் ஒன்றிய துணைத் தலைவர் செல்வராணி வரதராஜன் நன்றி கூறினார்

    • யார் நீங்கள் என்று கேட்ட போது அந்த நபர் தான் வைத்திருந்த கட்டையால் சரவணனை தாக்க முயன்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், தம்பிரான்பட்டி, அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் சரவணன் (வயது 50). இவர் சொந்தமாக ஷேர் ஆட்டோ வை வைத்து தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் இரவு தனது வீட்டின் முன் ஆட்டோவை சரவணன் நிறுத்தியிருந்தார். இரவு 10 மணயளவில் ஷேர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது.

    இதனால் வெளியே வந்து பார்த்த போது ஒருவர் ஆட்டோவுக்குள் அமர்ந்து ஒயர்களை பிரித்துக் கொண்டிருந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், யார் நீங்கள் என்று கேட்ட போது அந்த நபர் தான் வைத்திருந்த கட்டையால் சரவணனை தாக்க முயன்றார். இதில் சுதாரித்த சரவணன் திருடன் திருடன் என சத்தம் போட அப்பகுதியினர் அங்கு திரண்டர். அந்த நபரை சுற்றி வளைத்து கைகளால் தாக்கினர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட போலீசார், அவரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பாலா (32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோமண்டாபுதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து வயது 50போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

    பெரம்பலூர் பெரம்பலூர் அருகே சோமண்டாபுதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 50), விவசாயி. இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், அன்புமணி, பார்த்தி ஆகிய 2 மகன்களும் உள்ளனர். பச்சமுத்து நேற்று முன்தினம் மாலை வீட்டில் உள்ளவர்களிடம் மாடுகளுக்கு தீவனம் வயலில் இருந்து எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் இரவு 8 மணியளவில் அவரது வயலில் உள்ள கிணற்றின் அருகே பச்சமுத்துவின் காலணி கிடந்தது. இதனைக்கண்ட உறவினர்கள் பச்சமுத்து கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம்? என்ற சந்தேகத்தில் இதுகுறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பச்சமுத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கிணற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பச்சமுத்துவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பெரம்பலூர் போலீசார் பச்சமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர்
    • மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் மதுபாலன் (வயது 18). இவரும் அதே பகுதியை சோ்ந்த நண்பரான காமராஜின் மகன் சுவராஜூம் (19) திருச்சி மாவட்டம், கொணலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று காலை மதுபாலனும், சுவராஜூம் கல்லூரிக்கு செல்வதற்காக இரூர் பஸ் நிறுத்தத்துக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரூர் பஸ் நிறுத்தத்தில் சுவராஜ் மொபட்டில் இருந்து இறங்கி விட்டார். பின்னர் மதுபாலன் மொபட்டில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, எஸ்.புதுப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் மதுபாலன் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் ரமேசும், அவரது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த சேதுவும் காயம் அடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுபாலன் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது
    • 27 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது விசாரணை நடத்தப்பட்டது

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில், மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 27 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • இரூர் ரேஷன் கடையில் இன்று தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது
    • மற்ற ரேஷன் கடைகளிலும் இதேபோல் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி உழவர் சந்தையில் ரூ.160-க்கும், காய்கறி மார்க்கெட்டில் ரூ.180-க்கும், சில்லரை கடைகளில் ரூ.200-ஐ தாண்டியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே மற்ற மாவட்டங்களில் தமிழக அரசின் உத்தரவின்படி ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவுத்துறையினர் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்று இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் கூட்டுறவுத்துறை சார்பில் ஆலத்தூர் தாலுகா, இரூர் ரேஷன் கடையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற ரேஷன் கடைகளிலும் இதேபோல் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெரம்பலூர் மாவட்டம் ஸ்ரீதேவிமங்களம்-தெரணிபாளையம் மின் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் இணைப்புகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது
    • பெரம்பலூர் செயற்பொறியாளர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் கோட்டம், சிறுவாச்சூர் உபகோட்டம் பாடாலூர் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீதேவிமங்களம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் உப கோட்டம், சிறுகனூர் பிரிவிற்கும், இதேபோல் தெரணிபாளையம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை லால்குடி கோட்டம், கல்லக்குடி உபகோட்டம் புள்ளம்பாடி பிரிவிற்கும் மின்வட்ட சீரமைப்பு காரணமாக வருவாய் கிராமம் உள்ள மாவட்டத்தில் இணைக்க வேண்டியுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் உபகோட்டம், சிறுகனூர் பிரிவிற்கு ஸ்ரீதேவிமங்களம் மின்பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளையும், தெரணிபாளையம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை புள்ளம்பாடி பிரிவிற்கும் நேற்று முன்தினம் முதல் மாற்றம் செயப்பட்டுள்ளது. எனவே மின்சாரம் சம்பந்தமான அனைத்திற்கும் ஸ்ரீதேவிமங்களம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் பயனாளிகள் சிறுகனூர் பிரிவு அலுவலகத்தையும், தெரணிபாளையம் மின் பகிர்மான மின் பயனாளிகள் புள்ளம்பாடி பிரிவு அலுவலகத்தை அணுக வேண்டும், என்று பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் அருகே பிளஸ் 2 மாணவர் விபத்தில் பலியானார்
    • உடன் சென்ற 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்

    பாடாலூர், 

    பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவ செல்வம். இவரது மகன் பிரசாந்த் (வயது 17)ஆண்டி மடம் கண்டியம் கொல்லை கிராமத்தை சேர்ந்த திருமுருகன் (17) புது வெட்டக்குடி தினேஷ் (17) மேல மாத்தூர் கர்ணன்( 17 )ஆகிய 4 பேரும் மேல மாத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்- 2 பொதுத்தேர்வு எழுதி இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை அறிந்த பிரசாந்த் உள்ளிட்ட 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தாங்கள் படித்த பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றனர். சடைக்கன் பட்டி என்ற பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த மோட்டார் சைக்கிள் அங்கு சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பள்ளி பஸ்ஸின் பின்பக்கம் மோதியது.இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவர் பிரசாந்த் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். பின்னர் திருமுருகன், தினேஷ், கர்ணன் ஆகிய 3 பேரையும் அவர்களின் பெற்றோர்கள் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். விபத்து குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மதிப்பெண் சான்றிதழ் வாங்க சென்ற மாணவன் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பிரம்மரிஷி மலையில் ஸ்ரீராஜகுமார் குருஜி மணிமண்படம் திறப்பு விழா நடைபெற்றது
    • மாற்று திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஸ்ரீராஜகுமார் குருஜி மணிமண்டப திறப்பு விழா மற்றும் 3ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.மகாசித்தர்கள் டிரஸ்ட் சார்பில் எளம்பலூர் பிரம்மரிஷிம லையடிவாரத்தில் அன்னை சித்தர் ஸ்ரீராஜகுமார் குருஜியின் 3 ஆம் ஆண்டு குருபூஜை விழா ஸ்ரீகணபதி ஹோமத்துடன் பூர்வாக பூஜை பணிகள் 30-ந்தேதி தொடங்கியது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலிருந்து சிறப்பு ஊர்வலம் தொடங்கி எளம்பலூர் பிரம்மரிஷி மலையாடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வர் கோயிலில் முடி வடைந்தது. ஊர்வ லத்தின்போது கோலாட்டம், நடனம் ஆகியவை நடைபெற்றது. காகன்னை ஈஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து காலை 8 மணியளவில் 4ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று காலை 11 மணியளவில் மணிமண்டப திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாரணையும், பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் 200 சாதுக்களுக்கு வஸ்திரதானமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலியும், அன்னதானமும் வழங்கப்பட்டது.இதில் இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி, சூரியனார் கோயில் ஆதீனம் ஸ்ரீமத் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள், மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, சினிமா பாடகர் பிரபாகரன், வில்லிசை மாதவி ஆகியோரது இன்னிசை நிகழ்ச்சி, சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறை தலைவர் துரைகுமார், கடலூர் எஸ்பி ராஜாராம், பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவி, சினிமா டைரக்டர் யார்கண்ணன், வில்லிசை வேந்தர் கிஷோர்குமார், திட்டக்குடி ராஜன், சிங்கப்பூர் சிங்கைராஜாபாபா, ரத்தினவேல், டிஎஸ்பிகள் பழனிசாமி, வளவன், சிவசேனா மாநில செயல் தலைவர் சசிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி, தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள், ராதா மாதாஜி மற்றும் ஆன்மீக குழுவினர் செய்திருந்தனர்.

    ×