என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட பணிகள்
    X

    வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட பணிகள்

    • வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது
    • தொல். திருமாவளவன் தொடங்கி வைத்தார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம்சீகூர் அடுத்து திருமாந்துறை, அத்தியூர் உட்பட பல்வேறு பகுதியில் நலத்திட்ட பணிகளை சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் துவக்கி வைத்தார்.திருமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட கீரனூர் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.தொடர்ந்து திருமாந்துறை ஊராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளையும், கழனிவாசல் கிராமத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்.தொடர்ந்து அத்தியூர் கிராமத்தில் நியாய விலை கடை புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வேப்பூர் ஒன்றிய குழு துணை தலைவர் செல்வராணி வரதராஜன், பெரம்பலூர் மாவட்ட கிழக்கு பகுதி செயலாளர் கலையரசன், மண்டல அமைப்பு துணை செயலாளர் ஸ்டாலின் லெனின், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், திருமாந்துறை ஊராட்சி மன்ற தலைவர் வேளாங்கண்ணி இளையராஜா, ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, ஆண்டாள் குடியரசு மற்றும் பெண்ணாடம் பேரூராட்சி மன்ற தலைவர் அமுத லட்சுமி ஆற்றலரசு, வீர செங்கோலன் தர்மதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×