என் மலர்
நாமக்கல்
- கூட்டுறவு சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடந்தது.
- நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 364 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள அக்கரைப்பட்டி கூட்டுறவு சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் வெண்ணந்தூர், நடுப்பட்டி, சவுதாபுரம், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, மின்னக்கல், அத்தனூர், தேங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளும் பருத்தியை ஏலம் எடுப்பதற்காக வந்திருந்தனர்.நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 364 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். சுரபி ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 301 முதல் அதிகப்பட்சமாக ரூ.8 ஆயிரத்து 147-க்கு ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.
- பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.
பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பரிசல் மூலம் தேடுதல்
உடனடியாக இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசா ருக்கு தகவல் அளித்தனர்.
இதனிடையே சம்பவம் நடந்த இடம் ஈரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பள்ளிபாளையம் போலீசார் ஈரோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் துணையுடன் காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
7-க்கும் மேற்பட்ட பரிசல்களுடன் நேற்று இரவு 7 மணி வரை பெண்ணை தேடும் பணி நடந்தது.
இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
காவிரி ஆற்றில் குதித்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இங்கு காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் பொழுதை கழித்துச் செல்கின்றனர்.
- சமூக விரோதிகளின் கூடாரமாக இப்பூங்கா திகழ்கிறது. குறிப்பாக மது குடித்து விட்டு, உட்காருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கையை ஆக்கிரமித்து படுத்து தூங்குகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி பஸ் நிலையம் எதிரே நேரு- எம்.ஜி.ஆர். பூங்கா உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இங்கு காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் பொழுதை கழித்துச் செல்கின்றனர்.
இந்த பூங்கா அருகே கமலாலய குளம் உள்ளது. குளத்தை யொட்டி வரலாற்று சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை உள்ளது. பொதுமக்கள் பூங்காவில் அமர்ந்து மலைக்கோட்டை, கமலாலய குளத்தை ரசித்து செல்கின்றனர். இப்பூங்காவில் சிறுவர்களை கவரும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி இல்லாத நிலை உள்ளது.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.19.50 லட்சம் செலவில் இப்பூங்காவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. மேலும் புராதன நகர மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.49 லட்சம் செலவில் நாமக்கல் மலைக்கோட்டையை சுற்றியுள்ள தார் சாலையும், ரூ.23.50 லட்சம் செலவில் வாகன நிறுத்துமிடமும், ரூ.9.50 லட்சம் செலவில் தெரு விளக்குகளும் ரூ.18 லட்சம் செலவில் கமலாலய குளம் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்றன.
இந்த மேம்ப டுத்தப்பட்ட நேரு பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பூங்கா நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்த பூங்கா ஒதுக்குப்புறமாக இருப்பதாலும், வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததாலும் ெபாதுமக்கள் கோட்டை சாலை உழவர் சந்தை அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான செலம்ப கவுண்டர் பூங்காவிற்கு படையெடுக்கின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு செல்கின்றனர்.
இதனால் நேரு பூங்காவிற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் கட்டணம் வசூலிக்கப்பட்டும் போதிய பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பூங்கா உட்பகுதியில் பேவர் பிளாக் கற்களால் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கற்களும் பெயர்ந்து கிடக்கிறது. முட் புதர்களும், ெசடிகளும் நிறைந்து காணப்படுகிறது. இதை காதல் ஜோடிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்காதல் ேஜாடிகளும் இங்கு உலா வருகின்றனர்.
சமூக விரோதிகளின் கூடாரமாக இப்பூங்கா திகழ்கிறது. குறிப்பாக மது குடித்து விட்டு, உட்காருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கையை ஆக்கிரமித்து படுத்து தூங்குகின்றனர். இதனால் பூங்காவிற்கு பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
நேரு பூங்காவில் காதல் ஜோடிகளின் வருகையும், அவர்களின் செயல்பாடும் முகம் சுழிக்க வைக்கிறது. அதேபோன்று சமூகவிரோதிகள் இங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மது குடிக்கின்றனர், பீடி, சிகரெட் குடித்தபடி அங்கும், இங்கு மாக சுற்றி திரிகின்றனர். இதனால் பூங்காவில் சிறிது நேரம் உட்கா ருவதற்கே பயமாக உள்ளது. பூங்காவை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது.
- மாணவர்களுக்கு பாடங்கள், பாடநூல் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆகியவற்றை முடித்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.
ராசிபுரம்:
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்
ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மகளிரணி அமைப்பாளர் பாரதி வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் அறிக்கை வாசித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் முருக செல்வராசன் கலந்து கொண்டு பேசினார். முடிவில் துணைச் செயலாளர் ஜெயவேலு நன்றி கூறினார்.
பாடச்சுமை
கூட்டத்தில் எண்ணும் எழுத்தும் கல்வித் திட்டத்தில் மாணவர்கள் நன்கு பயிலும் வகையில் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். 3 பருவத் தேர்வுகளை மட்டும் பள்ளியின் சூழ்நிலைக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே வினாத்தாள் வடிவமைத்து தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும். இணைய வழி வாராந்திர மற்றும் பருவத் தேர்வுகள் கைவிடப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு பாடங்கள், பாடநூல் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆகியவற்றை முடித்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இனைய வழி பணிகளை பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடு வித்துவிட்டு கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டின் சாதாரண நிலை இடையிலே ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவிக்கும் அதே நாளில் அதே சதவிகிதத்தில் அகவிலைப்படி உயர்வுகள் தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தொடக்க விழா மற்றும் 10 வட்டாரங்களில் புதிய சங்க கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது.
- 20 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களுக்கு, சம்பள விகிதம் நிர்ணயம் செய்த போது தவறுதலாக மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தொடக்க விழா மற்றும் 10 வட்டாரங்களில் புதிய சங்க கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது.
பதவி ஏற்பு
இதில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்ற னர். சங்க மாவட்டச் செய லாளர் சண்முகராஜ் நிகழ்ச் சிக்கு தலைமை வகித்தார்.
மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், மாநில பொதுச் செயலாளர் ராபர்ட், பொருளாளர் கண்ணன், துணைத்தலைவர் ஞானசேகரன், துணைச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை, நாமகிரிப் பேட்டை, கபிலர்மலை, புதுச்சத்திரம், திருச்செங் கோடு, எருமப் பட்டி, பள்ளி பாளையம் உள்ளிட்ட 10 வட்டாரங்களை சேர்ந்த கிளைகளின் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்ற னர்.
சம்பள வித்யாசம்
தொடர்ந்து சங்க மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட சுமார் 20 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களுக்கு, சம்பள விகிதம் நிர்ணயம் செய்த போது தவறுதலாக மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே பள்ளியில் பணி யாற்றும் ஒரே கல்வித்தகுதி கொண்ட ஆசிரியர்கள் இடையே மாத சம்பளத்தில் பெரும் வித்தி யாசம் உள்ள தால், நாங்கள் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளோம். இதை பல்வேறு போராட்டங்களின் வழியாக அரசுக்கு எடுத்துச் சென்றோம். ஆனால் அரசு அதை சரி செய்யவில்லை.
போராட்டம்
எனவே இடைநிலை ஆசிரியர்களின் சம்பள நிர்ணயத்தில் உள்ள குறை பாடுகளை களைய நட டிக்கை எடுக்கவே, நாங்கள் புதிய அமைப்பை தொடங்கி உள்ளோம். விரைவில் சங்க மாநாட்டை சென்னையில் நடத்தி, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். தமிழக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.
- பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பர மேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவி யங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பர மேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவி
யங்களால் அபிஷேகம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி
வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆல யத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனி யாண்டவர் கோவிலில் எழுந்த
ருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் பிர
தோஷ விழாவில் கலந்து கொண்டு
சாமி தரிசனம் செய்தனர். பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- சாமிநாதன் (50). கூலித்தொழிலாளி. இவர் 27 வயது இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
- அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வாழவந்தி அருகே மேலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (50). கூலித்தொழிலாளி. இவர் 27 வயது இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த இளம் பெண் பரமத்தி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவி, சாமிநாதன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினார். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சாமிநாதனை ஜெயிலில் அடைத்தார்.
- தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- படிப்பில் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுகளிலும் ரூபிகா சிறந்து விளங்கி பரிசுகள் பெற்று தங்களுக்கும், தங்கள் கிராமத்திற்கும் பெருமை சேர்த்தார்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அய்யனார். இவரது மனைவி கற்பகவள்ளி. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
கணவன், மனைவி 2 பேரும் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது 3 குழந்தைகளும் ஆசாரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இதில் மூத்த மகள் ரூபிகா (வயது14) ஆசாரிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் முத்துசங்கிலிபட்டி கிராமத்தில் உள்ள சில தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பணிகள் முடிவடைந்ததும் பணிகள் மதிப்பீடு, திட்டம் குறித்த விவரங்கள் எழுதப்பட்ட விளம்பர சுவர் கட்டப்பட்டது. இந்த சுவரின் அடித்தளம் உறுதியாக அமைக்காமல் வெறும் செங்கல், சிமெண்டு மூலம் தரமற்று இருந்துள்ளது.
இந்நிலையில் ரூபிகா சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். முத்து சங்கிலிபட்டி தெருவில் நுழைந்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்து ஒப்பந்த பணி விளம்பர சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அந்த சுவர் ரூபிகாவின் மீது விழுந்ததை தொடர்ந்து அவர் வலியால் அலறினார்.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியின் கால்களை பரிசோதித்த டாக்டர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறினர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் கால்களில் பிளேட் வைக்கப்பட்டு, மாவுக்கட்டு போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அரசு பணிக்காக வைக்கப்பட்ட சுவர் இடிந்து விழுந்து கால்கள் முறிந்து வீட்டில் கடந்த 15 நாட்களாக மாணவி படுத்தபடுக்கையாய் உள்ள நிலையில், இது குறித்து சம்பந்தபட்ட ஒப்பந்தகாரரோ, அரசு அதிகாரிகளோ இதுவரை வந்து விசாரணை கூட நடத்தவில்லை என்று மாணவியின் பெற்றோர் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில், தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளித்துள்ளோம்.
படிப்பில் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுகளிலும் ரூபிகா சிறந்து விளங்கி பரிசுகள் பெற்று தங்களுக்கும், தங்கள் கிராமத்திற்கும் பெருமை சேர்த்தார். ஆனால் தற்போது அவர் படுத்த படுக்கையாய் கிடப்பதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கூலி வேலை பார்க்கும் எங்களால் தற்போது வேலைக்கும் செல்ல முடியவில்லை. எங்களது மகள் பூரண நலம் பெற்று எழுந்து நடப்பாரா என்றும், பழையபடி படிப்பு மற்றும் விளையாட்டுகளில் பங்கேற்க முடியுமா? என்றும் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே ரூபிகாவின் மருத்துவ செலவை அரசு ஏற்று அவரை பழைய நிலைக்கு கொண்டுவர உதவவேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
- பொங்களாயி அம்மன் திருவிழா பூஜையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
- கோவில் வளாகத்தில் இருந்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் உள்பட பொதுமக்கள் அசைவ உணவை வாங்கி சாப்பிட்டனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மலையாம்பட்டி கிராமம் போதமலை அடிவாரத்தில் உள்ள ஆலமரத்தடியில் பிரசித்தி பெற்ற மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் உள்ளது. இதன் திருவிழா வருடந்தோறும் ஆடி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து வருவது வழக்கம். பொங்களாயி அம்மன் திருவிழா பூஜையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
வழக்கம்போல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று பொங்களாயி அம்மன் மலர்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது. மேலும் மலர்களால் மலர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. வாழை, தேங்காய் குலைகள், தோரணங்கள் கட்டப்பட்டு மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முன்னதாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகளை நாதன் பூசாரி செய்தார்.
பொங்களாயி அம்மனுக்கு நடந்த பூஜையில் பெண்கள் பங்கேற்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். அசைவ அன்னதானம் வழங்குவதற்காக 12 மூட்டை பச்சரிசியை கொண்டு பொங்கல் தயாரித்தனர்.
அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக 177-க்கும் மேற்பட்ட ஆடுகளை கொண்டு வந்து பலியிட்டனர். அவ்வாறு பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சிகளை விடிய விடிய பெரிய பெரிய பாத்திரங்களில் வைத்து சமைத்தனர். அவ்வாறு சமைக்கப்பட்ட ஆட்டு இறைச்சியை பொங்கல் சாதத்துடன் விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு இன்று (திங்கட் கிழமை) காலை 6 மணி முதல் வழங்கினர். கோவில் வளாகத்தில் இருந்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் உள்பட பொதுமக்கள் அசைவ உணவை வாங்கி சாப்பிட்டனர். இதில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதில் வடுகம், பட்டணம், புதுப்பட்டி, ராசிபுரம், புதுப்பாளையம், ஒடுவன்குறிச்சி, வடுகம் முனியப்பம்பாளையம், சீராப்பள்ளி, நாமகிரிபேட்டை, மெட்டாலா, ஆயில்பட்டி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேருக்கு மேல் அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தர்மக்கர்த்தாக்கள் சுப்பிரமணியம், ஆனந்த், சுப்பிரமணி மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
- விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மேட்டுக்காடு அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (24), கூலி தொழிலாளி. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (21). இவர்கள் 2 பேரும் நேற்று முத்துக்காளிப்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கறி விருந்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர் கறி விருந்தை முடித்துக் கொண்டு அவர்கள் 2 பேரும் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இரவு 9.30 மணியளவில் அவர்கள் ராசிபுரம்-ஆண்டகளூர் கேட் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார். பிரபாகரன் காயத்துடன் உயிருக்கு போராடினார். இதுபற்றி தெரியவந்ததும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பலியானார்.
இதையடுத்து விபத்தில் பலியான சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வட கரையாத்தூர் ஊராட்சி ஜேடர்பாளையம் அருகே பள்ளாபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பயிற்சி மையம்
பயிற்சி மையத் தொடக்க விழாவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து
கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
வட்டார கல்வி அலுவலர் சுரேஷ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா, மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் ஒருங்கி ணைப்பாளர் ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா குணசேகரன், கபிலர்மலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்கல்வி
பயிற்சி மையத்தில் வடகரையாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பு ஆலைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையத்தில் தொடர் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பயிற்சி மைய தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை வட்டார பள்ளி செல்லா குழந்தைகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி செய்திருந்தார்.
- காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாவட்டங்க ளில் இருந்தும் அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- நாமக்கல்லில் அதிகபட்ச மாக ரு. 140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நாமக்கல்:
நாமக்கல் நகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாவட்டங்க ளில் இருந்தும் அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விலை
இந்த நிலையில் தமி ழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. நாமக்கல்லில் அதிகபட்ச மாக ரு. 140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.
இதனால் ஏழை, மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தக்காளி வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான வீடுகளில் தக்காளி வாங்குவதை நிறுத்தி விட்டனர். விலை குறைவாக விற்கப்பட்ட போது கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி சென்ற பொதுமக்கள் தற்போது விலை உயர்வின் காரணமாக கிராம் கணக்கில் தக்காளியை வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
தங்கத்தை போல் தக்காளி விலையும் தினமும் அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. ஆனாலும் முதல் ரக தக்காளி 100 ருபாய்க்கு கீழ் குறையாமல் இருந்து வருகிறது.
ரூ.200-க்கு விற்பனை
நாமக்கல்லில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்ப தால் இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் பார்க் ரோடு பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி ரூ.200-க்கு விற்கப்பட்ட தால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் நாமக்கல் உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்டது. அதுவும் சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்து விட்டது.
சேலம்
இதேபோல் சேலத்தில் இன்று 1 கிலோ தக்காளி ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.






