என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • திட்டம் சாரா பணிகளை சேலம் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • நாட்டமங்கலம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஏழூர் முதல் குருசாமிபாளையம் செல்லும் சாலையின் தரம் மற்றும் கணத்தினை ஆய்வு செய்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் ராசிபுரம் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகளை சேலம் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் ஒரு பகுதியாக நாட்டமங்கலம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஏழூர் முதல் குருசாமிபாளையம் செல்லும் சாலையின் தரம் மற்றும் கணத்தினை ஆய்வு செய்தார். மேலும் ராசிபுரம் நெடுஞ் சாலை உட்கோட்டத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், புறவழிச் சாலை பாலப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். சாலை பரா மரிப்பு பணி களான பாலம் சுத்தம் செய் யும்பணியினை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கி னார். நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் திரு குணா, ராசிபுரம் நெடுஞ் சாலை கட்டுமானம் மற்றும் பரா மரிப்பு உதவி கோட்ட பொறி யாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர் மணிகண் டன்ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • நாதன் (65) கூலித் தொழிலாளி இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.
    • இந்த நிலையில் நேற்று காலை நாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    திருச்செங்கோடு பால்மடை காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாதன் (65) கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இவரது மனைவி மற்றும் மூத்த மகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிகிறது. இவரது 2-வது மகன் பிரபு அதே பகுதியில் உள்ளதாகவும் அவர் தந்தையை பராமரித்து வந்தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை நாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராசிபுரம் தபால் நிலையம் வழக்கமாக காலை 9.30 மணி முதல் பகல் 2.30 மணி வரை சேவைகளை வழங்கி வருகிறது.
    • காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (12 மணி நேர சேவை) தபால் துறையின் வங்கி தொடர்பான சேவைகளும், இதர அனைத்து தபால் சேவைகளையும் வழங்கும் பணி தொடங்கியது.

    ராசிபுரம்:

    சேலம் மேற்கு தபால் கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் தபால் நிலையம் வழக்கமாக காலை 9.30 மணி முதல் பகல் 2.30 மணி வரை சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (12 மணி நேர சேவை) தபால் துறையின் வங்கி தொடர்பான சேவைகளும், இதர அனைத்து தபால் சேவைகளையும் வழங்கும் பணி தொடங்கியது. இதற்காக கூடுதலாக ஒரு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. 3 ஷிப்ட் ஆக பிரித்து ஊழியர்களை பணி அமர்த்தி இரவு 8 மணி வரை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற்பகல் 2.30- க்கு பிறகும் தபால் நிலையத்திற்கு மக்கள் வந்து சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தலாம்.இனிமேல் ராசிபுரம் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருமான கணக்கு, அடல் பென்ஷன் திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பரிவர்த்தனைகள், விரைவு தபால் பார்சல் சேவை அயல்நாட்டு தபால் சேவை, மணியாடர் சேவை ஆகிய அனைத்தும் இரவு 8 மணி வரை வழங்கப்படும்.இந்த தகவலை சப் - போஸ்ட்மாஸ்டர் ஹெலன் செல்வராணி, உட்கோட்ட ஆய்வாளர் சரவணன், உதவி சப்-போஸ்ட் மாஸ்டர் நிர்மலா, பி.எல்.ஐ. வளர்ச்சி அதிகாரி சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    • முருகன் இவரது மனைவி மாரிச்செல்வி (34). கடந்த 10 வருடங்களாக அவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில் குடியிருந்து வருகின்றனர்.
    • இதற்கிடையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நாமக்கல்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கிராமம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரிச்செல்வி (34). கடந்த 10 வருடங்களாக அவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில் குடியிருந்து வருகின்றனர். முருகன் குடும்பத்தினர் முறுக்கு வியாபாரம் செய்து வந்தனர். இதற்கிடையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சமையல் அறையில் கயிறு மூலம் மாரிச்செல்வி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாரிச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மோட்டார் வாகனச் சட்டம் 2019 சட்டப்பிரிவு 199-ஏ படி பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
    • மேலும் வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பள்ளி மாணவ மாணவிகள் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் இல்லாமல் மோட்டார் வாகனம் ஓட்டினால் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 2019 சட்டப்பிரிவு 199-ஏ படி பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும். வாகனம் ஓட்டிய சிறுவர்கள் 25 வயது வரை எந்த வாகன ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது. எனவே பெற்றோர்கள், பொதுமக்கள் இதில் கவனம் செலுத்தி தங்களது குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா தெரிவித்து உள்ளார்.

    • கூட்டுறவு சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடந்தது.
    • நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 364 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள அக்கரைப்பட்டி கூட்டுறவு சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் வெண்ணந்தூர், நடுப்பட்டி, சவுதாபுரம், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, மின்னக்கல், அத்தனூர், தேங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளும் பருத்தியை ஏலம் எடுப்பதற்காக வந்திருந்தனர்.நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 364 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். சுரபி ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 301 முதல் அதிகப்பட்சமாக ரூ.8 ஆயிரத்து 147-க்கு ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. 

    • நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.
    • பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் திடீரென ஒரு பெண் ஆற்றில் குதித்து விட்டார்.

    பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பரிசல் மூலம் தேடுதல்

    உடனடியாக இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசா ருக்கு தகவல் அளித்தனர்.

    இதனிடையே சம்பவம் நடந்த இடம் ஈரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பள்ளிபாளையம் போலீசார் ஈரோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் துணையுடன் காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    7-க்கும் மேற்பட்ட பரிசல்களுடன் நேற்று இரவு 7 மணி வரை பெண்ணை தேடும் பணி நடந்தது.

    இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    காவிரி ஆற்றில் குதித்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இங்கு காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் பொழுதை கழித்துச் செல்கின்றனர்.
    • சமூக விரோதிகளின் கூடாரமாக இப்பூங்கா திகழ்கிறது. குறிப்பாக மது குடித்து விட்டு, உட்காருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கையை ஆக்கிரமித்து படுத்து தூங்குகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி பஸ் நிலையம் எதிரே நேரு- எம்.ஜி.ஆர். பூங்கா உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இங்கு காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் பொழுதை கழித்துச் செல்கின்றனர்.

    இந்த பூங்கா அருகே கமலாலய குளம் உள்ளது. குளத்தை யொட்டி வரலாற்று சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை உள்ளது. பொதுமக்கள் பூங்காவில் அமர்ந்து மலைக்கோட்டை, கமலாலய குளத்தை ரசித்து செல்கின்றனர். இப்பூங்காவில் சிறுவர்களை கவரும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி இல்லாத நிலை உள்ளது.

    கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.19.50 லட்சம் செலவில் இப்பூங்காவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. மேலும் புராதன நகர மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.49 லட்சம் செலவில் நாமக்கல் மலைக்கோட்டையை சுற்றியுள்ள தார் சாலையும், ரூ.23.50 லட்சம் செலவில் வாகன நிறுத்துமிடமும், ரூ.9.50 லட்சம் செலவில் தெரு விளக்குகளும் ரூ.18 லட்சம் செலவில் கமலாலய குளம் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்றன.

    இந்த மேம்ப டுத்தப்பட்ட நேரு பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பூங்கா நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்த பூங்கா ஒதுக்குப்புறமாக இருப்பதாலும், வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததாலும் ெபாதுமக்கள் கோட்டை சாலை உழவர் சந்தை அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான செலம்ப கவுண்டர் பூங்காவிற்கு படையெடுக்கின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு செல்கின்றனர்.

    இதனால் நேரு பூங்காவிற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் கட்டணம் வசூலிக்கப்பட்டும் போதிய பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பூங்கா உட்பகுதியில் பேவர் பிளாக் கற்களால் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கற்களும் பெயர்ந்து கிடக்கிறது. முட் புதர்களும், ெசடிகளும் நிறைந்து காணப்படுகிறது. இதை காதல் ஜோடிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்காதல் ேஜாடிகளும் இங்கு உலா வருகின்றனர்.

    சமூக விரோதிகளின் கூடாரமாக இப்பூங்கா திகழ்கிறது. குறிப்பாக மது குடித்து விட்டு, உட்காருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கையை ஆக்கிரமித்து படுத்து தூங்குகின்றனர். இதனால் பூங்காவிற்கு பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    நேரு பூங்காவில் காதல் ஜோடிகளின் வருகையும், அவர்களின் செயல்பாடும் முகம் சுழிக்க வைக்கிறது. அதேபோன்று சமூகவிரோதிகள் இங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மது குடிக்கின்றனர், பீடி, சிகரெட் குடித்தபடி அங்கும், இங்கு மாக சுற்றி திரிகின்றனர். இதனால் பூங்காவில் சிறிது நேரம் உட்கா ருவதற்கே பயமாக உள்ளது. பூங்காவை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது.
    • மாணவர்களுக்கு பாடங்கள், பாடநூல் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆகியவற்றை முடித்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்

    ராசிபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மகளிரணி அமைப்பாளர் பாரதி வரவேற்றார். மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கர், பொருளாளர் பிரபு ஆகியோர் அறிக்கை வாசித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் முருக செல்வராசன் கலந்து கொண்டு பேசினார். முடிவில் துணைச் செயலாளர் ஜெயவேலு நன்றி கூறினார்.

    பாடச்சுமை

    கூட்டத்தில் எண்ணும் எழுத்தும் கல்வித் திட்டத்தில் மாணவர்கள் நன்கு பயிலும் வகையில் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். 3 பருவத் தேர்வுகளை மட்டும் பள்ளியின் சூழ்நிலைக்கு ஏற்ப தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே வினாத்தாள் வடிவமைத்து தேர்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும். இணைய வழி வாராந்திர மற்றும் பருவத் தேர்வுகள் கைவிடப்பட வேண்டும்.

    மாணவர்களுக்கு பாடங்கள், பாடநூல் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆகியவற்றை முடித்து மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு இனைய வழி பணிகளை பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடு வித்துவிட்டு கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டின் சாதாரண நிலை இடையிலே ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவிக்கும் அதே நாளில் அதே சதவிகிதத்தில் அகவிலைப்படி உயர்வுகள் தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தொடக்க விழா மற்றும் 10 வட்டாரங்களில் புதிய சங்க கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது.
    • 20 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களுக்கு, சம்பள விகிதம் நிர்ணயம் செய்த போது தவறுதலாக மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தொடக்க விழா மற்றும் 10 வட்டாரங்களில் புதிய சங்க கிளைகள் தொடக்க விழா நடைபெற்றது.

    பதவி ஏற்பு

    இதில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்ற னர். சங்க மாவட்டச் செய லாளர் சண்முகராஜ் நிகழ்ச் சிக்கு தலைமை வகித்தார்.

    மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார், மாநில பொதுச் செயலாளர் ராபர்ட், பொருளாளர் கண்ணன், துணைத்தலைவர் ஞானசேகரன், துணைச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை, நாமகிரிப் பேட்டை, கபிலர்மலை, புதுச்சத்திரம், திருச்செங் கோடு, எருமப் பட்டி, பள்ளி பாளையம் உள்ளிட்ட 10 வட்டாரங்களை சேர்ந்த கிளைகளின் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்ற னர்.

    சம்பள வித்யாசம்

    தொடர்ந்து சங்க மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது,

    தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட சுமார் 20 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களுக்கு, சம்பள விகிதம் நிர்ணயம் செய்த போது தவறுதலாக மிக குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே பள்ளியில் பணி யாற்றும் ஒரே கல்வித்தகுதி கொண்ட ஆசிரியர்கள் இடையே மாத சம்பளத்தில் பெரும் வித்தி யாசம் உள்ள தால், நாங்கள் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளோம். இதை பல்வேறு போராட்டங்களின் வழியாக அரசுக்கு எடுத்துச் சென்றோம். ஆனால் அரசு அதை சரி செய்யவில்லை.

    போராட்டம்

    எனவே இடைநிலை ஆசிரியர்களின் சம்பள நிர்ணயத்தில் உள்ள குறை பாடுகளை களைய நட டிக்கை எடுக்கவே, நாங்கள் புதிய அமைப்பை தொடங்கி உள்ளோம். விரைவில் சங்க மாநாட்டை சென்னையில் நடத்தி, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். தமிழக அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பர மேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவி யங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பர மேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவி

    யங்களால் அபிஷேகம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி

    வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆல யத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனி யாண்டவர் கோவிலில் எழுந்த

    ருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் பிர

    தோஷ விழாவில் கலந்து கொண்டு

    சாமி தரிசனம் செய்தனர். பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சாமிநாதன் (50). கூலித்தொழிலாளி. இவர் 27 வயது இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
    • அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வாழவந்தி அருகே மேலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (50). கூலித்தொழிலாளி. இவர் 27 வயது இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த இளம் பெண் பரமத்தி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவி, சாமிநாதன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தினார். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சாமிநாதனை ஜெயிலில் அடைத்தார்.

    ×