என் மலர்
நாமக்கல்
- கடை 7 வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கின் போது அரசின் சார்பில் விழா நடக்கிறது.
- வில்வித்தை சங்கத்தின் சார்பில் தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டிகள்
கொல்லிமலை:
கொல்லிமலையை ஆண்ட கடை 7 வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கின் போது அரசின் சார்பில் விழா நடக்கிறது. இவ்வாண்டு நேற்றும் இன்றும் வல்வில் ஓரி விழா சிறப்பாக நடந்தது.
வில்வித்தை போட்டி
நேற்று மலர்கண்காட்சி நிகழ்ச்சி தொடங்கியது. இன்று வல்வில் ஓரி மன்னரின் ஆற்றலை போற்றும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் வில்வித்தை சங்கத்தின் சார்பில் தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டிகள் நடந்தது.
இப்போட்டி கொல்லிமலை செம்மேடு பஸ் நிலையத்தில் நடந்தது. போட்டியை கலெக்டர் உமா, பொன்னுசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போட்டிகள் இந்தியன், ரிக்கர்வ், காம்பவுண்ட் என 3 பிரிவுகளில் 8, 10, 12, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் 19 வயதுக்கு மேற்பட்டோர் 7 வயது பிரிவாக ஆண்கள், பெண்கள், மாணவ மாணவிகள் என தனித்தனியாக போட்டி நடந்தது.
போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் மற்றும் வல்வில் ஓரி கோப்பை ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.
விழாவில் அட்மா குழு தலைவர் செந்தில் முருகன், ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் அப்பன் ராஜ், நாமக்கல் மாவட்ட வில்வித்தை சங்கத்தின் தலைவர் கேசவன், அரசு அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், சுற்றுலா பயணிகள், மக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- மரவாபாளையத்தில் பிரபாகரன் (47) என்பவர் வீட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
- சோதனையில் அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்தி வட்டாரத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பரமத்தி அருகே உள்ள மரவாபாளையத்தில் பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் மரவாபாளையத்தில் பிரபாகரன் (47) என்பவர் வீட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
இதனையடுத்து பிரபாகரன், பரமத்தி ஆயில் மில் தெருவை சேர்ந்த சிவா(29), பரமத்தியை சேர்ந்த சதாம் உசேன்(29), சாதிக் பாஷா(22), மரவாபாளையம் குடித்தெருவை சேர்ந்த பவன்குமார்(27), மணிகண்டன் (29) உள்ளிட்ட 6 பேரை பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள தாலுகா அலுவலகம் எதிரே தனியார் ஓட்டல் செயல்படுகிறது.
- அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள தாலுகா அலுவலகம் எதிரே தனியார் ஓட்டல் செயல்படுகிறது. இங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட தாபா கடைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஓட்டல் உரிமையாளர் கந்தசாமி( 50) என்பவரை கைது செய்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விரலி ரகம் 1150 மூட்டைகளும், உருண்டை ரகம் 350 மூட்டைகளும், பனங்காலி ரகம் 50 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன.
- மொத்தம் 1550 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 12 லட்சத்துக்கு ஏலம் போன தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது.இதில் அரியாக்கவுண்டம் பட்டி, நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.
அதேபோல் ஒடுவன்குறிச்சி, ஈரோடு, சேலம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த வியா பாரிகள் மஞ்சளை ஏலம் எடுப்பதற்காக வந்திருந்தனர். இதில் விரலி ரகம் 1150 மூட்டைகளும், உருண்டை ரகம் 350 மூட்டைகளும், பனங்காலி ரகம் 50 மூட்டை களும் கொண்டுவரப்பட்டிருந்தன.
விரலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 109 முதல் அதிகப்பட்சமாக ரூ.15 ஆயிரத்து 802-க்கும், உருண்டை ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 702-க்கும், அதிகபட்சமாக ரூ.13 ஆயி ரத்து 512-க்கும், பனங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 99-க்கும், அதிகப்பட்சமாக ரூ.16 ஆயிரத்து 369-க்கும் ஏலம் விடப்பட்டது.
மொத்தம் 1550 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 12 லட்சத்துக்கு ஏலம் போன தாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரத்தை விட நேற்று நடந்த மஞ்சள் ஏலத்தில் அதிக விலைக்கு மஞ்சள் விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிக ளும் அதிக அளவில் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- 50 செயற்குழு உறுப் பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை
- நாமக்கல் தாலுகா லாரி உரிமையா ளர்கள் சங்கத்தில் மொத்தம் 4,445 உறுப்பி னர்கள் உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல்லை மைய மாக கொண்டு லாரி உரிமை யாளர்கள் சங்கமாக நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
தேர்தல்
இந்த சங்கத்தின், 2023-26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கு, சதர்ன் ரீஜன் எல்பிஜி டேங்கர் லாரி உரி மையாளர்கள் சங்கத்தலை வர் சுந்தர்ராஜன் தலைமை யில் தேர்தல் கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது.
நிர்வாகிகள் தேர்தல் நடத்துவது சம்மந்த மான, தேர்தல் கமிட்டி உறுப்பினர் கள் ஆலோசனைக் கூட் டம் சங்க அலவலகத்தில் நடைபெற்றது.தேர்தல் குழு தலைவர் சுந்தர்ராஜன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில் நாமக்கல் தாலுகா லாரி உரி மையா ளர்கள் சங்கத்தின் 2023-26ம் ஆண்டுக்கான தலைவர், உதவித்தலைவர், செயலா ளர், பொருளாளர், உதவிச் செயலாளர் மற்றும் 50 செயற்குழு உறுப் பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வருகிற செப்டம் பர் மாதம் 10-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து தேர்தல் குழுத்தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது:- நாமக்கல் தாலுகா லாரி உரிமையா ளர்கள் சங்கத்தில் மொத்தம் 4,445 உறுப்பி னர்கள் உள்ளனர். சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்த 14 பேர் கொண்ட தேர்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள் ளது. தேர்த லுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் ஆக. 28, 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெறுகிறது. 31-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 1-ந் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசிநாளாகும்.
அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்குப்பதிவு
தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை லாரி உரிமையா ளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெறு கிறது. அன்று இரவு நிர்வா கிகள் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
11-ந் தேதி (செப்டம்பர்) காலை செயற்குழு உறுப்பி னர்கள் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்படும். இவ்வாறு சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
இந்த நிலையில் நாமக்கல் தாலுகா லாரி உரிமை யாளர்கள் சங்க தற்போதைய செயலாளர் அருள் தலைமை யில் ஒரு அணியினரும், தற்போதைய உதவித் தலை வர் சுப்புரத்திணம் தலை மையில் ஒரு அணி யினரும் புதிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, இப்போதே தங்களது ஆதர வாளர்க ளுடன் தீவிர ஓட்டு வேட்டை யில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
- கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கு ஏலம் போனது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது.
ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கு விற்பனையானது. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பூவன் வாழைத்தார்கள் வரத்து அதிகரித்ததால் விலை சரிவுவடைந்துள்ளது.
- பச்சரி படையலை அங்கிருந்தவர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
- பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் காவிரி ஆற்றிற்கு வந்து குளித்து பிள்ளையார் பிடித்து வழிபட்டனர்
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளான பரமத்திவேலூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதி, ஜேடர்பாளையம் பரிசல் துறை, வடகரையாத்தூர், கண்டிப்பாளையம் பரிசல்துறை, ஆனங்கூர், அய்யம்பாளையம், பொன்மலர்பாளையம், கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவேரி கரையோரம் ஆடி 18 விழா நடைபெற்றது.
படையல்
இன்று காலை பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் முளைப்பாரியை கொண்டு வந்து காவிரி ஆற்றில் குளித்து பின்னர் காவிரி கரையோரத்தில் மஞ்சள் பிள்ளையார், மணல் பிள்ளையார் போன்றவற்றை வைத்து தேங்காய், பழம் உடைத்து, மஞ்சள் கயிறு, பச்சரியில் சர்க்கரை கலந்த படையலை சாமிக்கு வைத்து வழிபட்டனர்.
இந்த பச்சரி படையலை அங்கிருந்தவர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். மஞ்சள் கயிறை பெரியவர்களும், குழந்தைகளும் கையில் கட்டிக் கொண்டனர்.
தொடர்ந்து காவிரி ஆற்றங்கரை அருகில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் காவிரி ஆற்றங்கரை மணல் பகுதியில் குடும்பத்தினருடன் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு பண்டங்களை சாப்பிட்டு அங்கு ஓய்வெடுத்து சென்றனர்.
முளைப்பாரி
அதேபோல் ஆனங்கூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் பகுதிக்கு ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், கழுவங்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் காவிரி ஆற்றிற்கு வந்து குளித்து பிள்ளையார் பிடித்து வழிபட்டனர்.
பின்னர் தங்கள் கொண்டு வந்த முளைப்பாரிகளை காவிரி ஆற்றில் விட்டனர்.
பரமத்திவேலூர் காவிரி
வேலூர் காவிரி ஆற்றில் பரமத்திவேலூர் தாலுகா சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வந்திருந்து புனித நீராடி காவிரி ஆற்றங்கரையில் பிள்ளையார் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.
முளைப்பாரியை ஆற்றில் விட்டும், புதுமணத் தம்பதிகள் தாலிக்கயிறை மாற்றிக் கொண்டனர்.
மதியம் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெற்றது.
இதேபோல் இங்கு மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி மற்றும் பரிசல் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதனை காண சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வருவார்கள்.
அனுமதி
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவும், பூஜைகள் நடத்தவும் மாவட்ட நிர்வாகம், போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இதனால் பக்தர்களும், பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது காவிரியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. இதனால் பூஜை கள் நடத்தவும், பரிசல் போட்டி நடத்தவும் மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.
படகு போட்டி
இதையடுத்து இன்று மாலை 5 மணியளவில் பரமத்திவேலுார் காவிரியாற்றில் படகு போட்டியும், அதனை தொடர்ந்து மாலை 6 ஆறு மணிக்கு மேல் ஈஸ்வரன் கோவிலில் இருந்து மோட்ச தீபம் கொண்டு வந்து படகில் எடுத்துச் சென்று காவிரியின் நடு ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதனிடையே பாதுகாப்பு கருதி காவிரி கரையோரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு மீட்பு குழுவினர் மற்றும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
பள்ளிபாளையம்
பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். அவர்கள் காவிரியில் நீராடிய பின்னர் பூஜைகள் செய்து வழிபட்டனர். இங்கு வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேல் தலைமையில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் பள்ளிபா ளையம் வசந்த நகரில் கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை முன்னிட்டு பொங்கல் வைத்தும், கிடா பலியிட்டும் பக்தர்கள் வழிபட்டனர்.
- மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
- அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் கோவிலில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
மலர் அலங்காரம்
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், பரமத்தி வேலூர் பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதிஅம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
- மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி ஆடி 1-ந் தேதி முதல் தொடங்கியது.
- இளைஞர்கள் வேடமணிந்து கதைக்கு ஏற்றால் போல் நடித்தும், நடனமாடியும் பாரத போரின் இறுதியில் தர்மமே வெல்லும்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி ஆடி 1-ந் தேதி முதல் தொடங்கியது. நிகழ்ச்சியில் மகாபாரத கதையில் வரும் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் போன்று அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வேடமணிந்து கதைக்கு ஏற்றால் போல் நடித்தும், நடனமாடியும் பாரத போரின் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கதை பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாரியம்மன் கோவில் முன்பு மண்ணால் சுமார் 100 அடி நீளத்தில் துரியோதனனின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடி 18 பண்டிகையான இன்று துரியோதனனை பீமன் வதம் செய்து அதில் இருந்து வரும் ரத்தத்தை எடுத்து திரவுபதி தனது கூந்தலில் தடவிய பின்னரே கூந்தலை முடிந்து கொள்ளுவதோடு இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை எடுத்துக்கூறும் வகையில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. போரில் வெற்றி பெற்ற கலைஞர்கள், நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து நிகழ்ச்சிக்காக பயன்படுத்திய ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்று காவிரி ஆற்றில் சுத்தம் செய்து வெற்றியை கொண்டாடும் வகையில் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி் நடைபெற்றது.
- நேற்று பள்ளிக்கு செல்லாமல் தனது தந்தையின் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு சந்தோஷ் தனது நண்பனை பார்ப்பதற்காக வெப்படைக்கு சென்றார்.
- வெப்படை தெற்கு பாளையம் சாலையில் சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் வந்தபோது பின்னால் நந்தகுமார் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை கவனிக்காமல் திரும்பினார்.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அலமேட்டை சேர்ந்தவர் சந்தோஷ். இம்மாணவன் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு செல்லாமல் தனது தந்தையின் மோட்டார்சைக்கிளை எடுத்துக் ெகாண்டு சந்ேதாஷ் தனது நண்பனை பார்ப்பதற்காக வெப்படைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வெப்படை தெற்கு பாளையம் சாலையில் சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் வந்தபோது பின்னால் நந்தகுமார் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை கவனிக்காமல் திரும்பினார். அப்போது மோட்டார்சைக்கிள் மீது நந்தகுமார் என்பவரின் இருசக்கர வாகனம் ேமாதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சந்ேதாஷ் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் தலை மோதி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சந்தோஷை பள்ளிப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இந்த விபத்து சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவன் சந்தோஷ், மோட்டார்சைக்கிள் ஓட்டி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி பதை பதைக்க வைக்கும் வகையில் உள்ளது.
- கடந்த 2010-ம் ஆண்டு முதல் திருசெங்கோடு தெற்கு ரதவீதியில் உள்ள வடிவேலன் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர்.
- இந்த நிதி நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் 97 முதலீட்டாளர்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கவர்ச்சி திட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இந்த தம்பதி கடந்த 2010-ம் ஆண்டு முதல் திருசெங்கோடு தெற்கு ரதவீதியில் உள்ள வடிவேலன் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர். இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மோகன்ராஜ் -செந்தமிழ்செல்வி இறந்த நிலையில் அவரது மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகியோர் இந்த நிதி நிறுவனத்தை கவனித்து வந்தனர்.
இந்த நிதி நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் 97 முதலீட்டாளர்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி சவுந்தர்யா - தமிழ்கண்ணன் தம்பதி மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவம்
இதேபோல் திருச்செங்கோடு கச்சேரி சாலை அருளகம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 79). இவரது மனைவி செல்லம்மை (75).
இந்த தம்பதியின் மகன் அருணாச்சலம்(45), மருமகள் சொர்ணமாலா (38) மற்றும் சோமசுந்தரத்தின் மகள்கள் காந்திமதி (54) , வள்ளியம்மை (50) ஆகிய 6 பேர் வீட்டில் சோமசுந்தரம் செட்டியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை கூறி பணம் பெற்றுள்ளனர்.
இது குறித்து அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடைய மனைவி துர்காதேவி (43) நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதே போல் மேலும் 11 முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்தி நிதி நிறுவனத்தை கவனித்து வந்த அவர்கள் 6 பேர் மீதும் ேமாசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தெரிவிக்கலாம்
இந்த 2 நிதி நிறுவனங்களிலும் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரிடையாக வந்து காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புகார் அளிக்கலாம்.
இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், அதில் கூறியுள்ளார்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 27.78 குவிண்டால் எடை கொண்ட 85-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.35-க்கும், சராசரி விலையாக ரூ.78.30-க்கும் என ரூ 2 லட்சத்து 16ஆயிரத்து 348-க்கு விற்பனையானது.






