என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூரில் ஆடி பண்டிகையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் வழிபாடு
    X

    கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், பேட்டை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

    பரமத்திவேலூரில் ஆடி பண்டிகையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் வழிபாடு

    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
    • அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் கோவிலில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    மலர் அலங்காரம்

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், பரமத்தி வேலூர் பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதிஅம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    Next Story
    ×