என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல்
    X

    நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல்

    • 50 செயற்குழு உறுப் பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை
    • நாமக்கல் தாலுகா லாரி உரிமையா ளர்கள் சங்கத்தில் மொத்தம் 4,445 உறுப்பி னர்கள் உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை மைய மாக கொண்டு லாரி உரிமை யாளர்கள் சங்கமாக நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.

    தேர்தல்

    இந்த சங்கத்தின், 2023-26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கு, சதர்ன் ரீஜன் எல்பிஜி டேங்கர் லாரி உரி மையாளர்கள் சங்கத்தலை வர் சுந்தர்ராஜன் தலைமை யில் தேர்தல் கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது.

    நிர்வாகிகள் தேர்தல் நடத்துவது சம்மந்த மான, தேர்தல் கமிட்டி உறுப்பினர் கள் ஆலோசனைக் கூட் டம் சங்க அலவலகத்தில் நடைபெற்றது.தேர்தல் குழு தலைவர் சுந்தர்ராஜன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில் நாமக்கல் தாலுகா லாரி உரி மையா ளர்கள் சங்கத்தின் 2023-26ம் ஆண்டுக்கான தலைவர், உதவித்தலைவர், செயலா ளர், பொருளாளர், உதவிச் செயலாளர் மற்றும் 50 செயற்குழு உறுப் பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வருகிற செப்டம் பர் மாதம் 10-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து தேர்தல் குழுத்தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது:- நாமக்கல் தாலுகா லாரி உரிமையா ளர்கள் சங்கத்தில் மொத்தம் 4,445 உறுப்பி னர்கள் உள்ளனர். சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்த 14 பேர் கொண்ட தேர்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள் ளது. தேர்த லுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் ஆக. 28, 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெறுகிறது. 31-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 1-ந் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசிநாளாகும்.

    அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    வாக்குப்பதிவு

    தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை லாரி உரிமையா ளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெறு கிறது. அன்று இரவு நிர்வா கிகள் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    11-ந் தேதி (செப்டம்பர்) காலை செயற்குழு உறுப்பி னர்கள் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்படும். இவ்வாறு சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

    இந்த நிலையில் நாமக்கல் தாலுகா லாரி உரிமை யாளர்கள் சங்க தற்போதைய செயலாளர் அருள் தலைமை யில் ஒரு அணியினரும், தற்போதைய உதவித் தலை வர் சுப்புரத்திணம் தலை மையில் ஒரு அணி யினரும் புதிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, இப்போதே தங்களது ஆதர வாளர்க ளுடன் தீவிர ஓட்டு வேட்டை யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×