search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkaldistrict: foreign lottery"

    • மரவாபாளையத்தில் பிரபாகரன் (47) என்பவர் வீட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
    • சோதனையில் அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டாரத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பரமத்தி அருகே உள்ள மரவாபாளையத்தில் பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் மரவாபாளையத்தில் பிரபாகரன் (47) என்பவர் வீட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.

    இதனையடுத்து பிரபாகரன், பரமத்தி ஆயில் மில் தெருவை சேர்ந்த சிவா(29), பரமத்தியை சேர்ந்த சதாம் உசேன்(29), சாதிக் பாஷா(22), மரவாபாளையம் குடித்தெருவை சேர்ந்த பவன்குமார்(27), மணிகண்டன் (29) உள்ளிட்ட 6 பேரை பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×