search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக விேராதிகளின் கூடாரமாக திகழும் நாமக்கல் நேரு பூங்கா
    X

    சமூக விேராதிகளின் கூடாரமாக திகழும் நாமக்கல் நேரு பூங்கா

    • இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இங்கு காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் பொழுதை கழித்துச் செல்கின்றனர்.
    • சமூக விரோதிகளின் கூடாரமாக இப்பூங்கா திகழ்கிறது. குறிப்பாக மது குடித்து விட்டு, உட்காருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கையை ஆக்கிரமித்து படுத்து தூங்குகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி பஸ் நிலையம் எதிரே நேரு- எம்.ஜி.ஆர். பூங்கா உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இங்கு காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் பொழுதை கழித்துச் செல்கின்றனர்.

    இந்த பூங்கா அருகே கமலாலய குளம் உள்ளது. குளத்தை யொட்டி வரலாற்று சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை உள்ளது. பொதுமக்கள் பூங்காவில் அமர்ந்து மலைக்கோட்டை, கமலாலய குளத்தை ரசித்து செல்கின்றனர். இப்பூங்காவில் சிறுவர்களை கவரும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி இல்லாத நிலை உள்ளது.

    கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.19.50 லட்சம் செலவில் இப்பூங்காவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. மேலும் புராதன நகர மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.49 லட்சம் செலவில் நாமக்கல் மலைக்கோட்டையை சுற்றியுள்ள தார் சாலையும், ரூ.23.50 லட்சம் செலவில் வாகன நிறுத்துமிடமும், ரூ.9.50 லட்சம் செலவில் தெரு விளக்குகளும் ரூ.18 லட்சம் செலவில் கமலாலய குளம் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்றன.

    இந்த மேம்ப டுத்தப்பட்ட நேரு பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பூங்கா நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்த பூங்கா ஒதுக்குப்புறமாக இருப்பதாலும், வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததாலும் ெபாதுமக்கள் கோட்டை சாலை உழவர் சந்தை அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான செலம்ப கவுண்டர் பூங்காவிற்கு படையெடுக்கின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு செல்கின்றனர்.

    இதனால் நேரு பூங்காவிற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் கட்டணம் வசூலிக்கப்பட்டும் போதிய பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பூங்கா உட்பகுதியில் பேவர் பிளாக் கற்களால் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கற்களும் பெயர்ந்து கிடக்கிறது. முட் புதர்களும், ெசடிகளும் நிறைந்து காணப்படுகிறது. இதை காதல் ஜோடிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்காதல் ேஜாடிகளும் இங்கு உலா வருகின்றனர்.

    சமூக விரோதிகளின் கூடாரமாக இப்பூங்கா திகழ்கிறது. குறிப்பாக மது குடித்து விட்டு, உட்காருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கையை ஆக்கிரமித்து படுத்து தூங்குகின்றனர். இதனால் பூங்காவிற்கு பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    நேரு பூங்காவில் காதல் ஜோடிகளின் வருகையும், அவர்களின் செயல்பாடும் முகம் சுழிக்க வைக்கிறது. அதேபோன்று சமூகவிரோதிகள் இங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மது குடிக்கின்றனர், பீடி, சிகரெட் குடித்தபடி அங்கும், இங்கு மாக சுற்றி திரிகின்றனர். இதனால் பூங்காவில் சிறிது நேரம் உட்கா ருவதற்கே பயமாக உள்ளது. பூங்காவை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×