search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nehru park"

    • இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இங்கு காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் பொழுதை கழித்துச் செல்கின்றனர்.
    • சமூக விரோதிகளின் கூடாரமாக இப்பூங்கா திகழ்கிறது. குறிப்பாக மது குடித்து விட்டு, உட்காருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கையை ஆக்கிரமித்து படுத்து தூங்குகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி பஸ் நிலையம் எதிரே நேரு- எம்.ஜி.ஆர். பூங்கா உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்கா காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இங்கு காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் பொழுதை கழித்துச் செல்கின்றனர்.

    இந்த பூங்கா அருகே கமலாலய குளம் உள்ளது. குளத்தை யொட்டி வரலாற்று சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை உள்ளது. பொதுமக்கள் பூங்காவில் அமர்ந்து மலைக்கோட்டை, கமலாலய குளத்தை ரசித்து செல்கின்றனர். இப்பூங்காவில் சிறுவர்களை கவரும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி இல்லாத நிலை உள்ளது.

    கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.19.50 லட்சம் செலவில் இப்பூங்காவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. மேலும் புராதன நகர மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.49 லட்சம் செலவில் நாமக்கல் மலைக்கோட்டையை சுற்றியுள்ள தார் சாலையும், ரூ.23.50 லட்சம் செலவில் வாகன நிறுத்துமிடமும், ரூ.9.50 லட்சம் செலவில் தெரு விளக்குகளும் ரூ.18 லட்சம் செலவில் கமலாலய குளம் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்றன.

    இந்த மேம்ப டுத்தப்பட்ட நேரு பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பூங்கா நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்த பூங்கா ஒதுக்குப்புறமாக இருப்பதாலும், வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததாலும் ெபாதுமக்கள் கோட்டை சாலை உழவர் சந்தை அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான செலம்ப கவுண்டர் பூங்காவிற்கு படையெடுக்கின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு செல்கின்றனர்.

    இதனால் நேரு பூங்காவிற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே வந்து செல்கின்றனர். இப்பூங்காவில் கட்டணம் வசூலிக்கப்பட்டும் போதிய பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பூங்கா உட்பகுதியில் பேவர் பிளாக் கற்களால் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கற்களும் பெயர்ந்து கிடக்கிறது. முட் புதர்களும், ெசடிகளும் நிறைந்து காணப்படுகிறது. இதை காதல் ஜோடிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கள்ளக்காதல் ேஜாடிகளும் இங்கு உலா வருகின்றனர்.

    சமூக விரோதிகளின் கூடாரமாக இப்பூங்கா திகழ்கிறது. குறிப்பாக மது குடித்து விட்டு, உட்காருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கையை ஆக்கிரமித்து படுத்து தூங்குகின்றனர். இதனால் பூங்காவிற்கு பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    நேரு பூங்காவில் காதல் ஜோடிகளின் வருகையும், அவர்களின் செயல்பாடும் முகம் சுழிக்க வைக்கிறது. அதேபோன்று சமூகவிரோதிகள் இங்கு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மது குடிக்கின்றனர், பீடி, சிகரெட் குடித்தபடி அங்கும், இங்கு மாக சுற்றி திரிகின்றனர். இதனால் பூங்காவில் சிறிது நேரம் உட்கா ருவதற்கே பயமாக உள்ளது. பூங்காவை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
    • சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளை கொண்டு சிற்பங்களை அமைக்க உள்ளனர்.

    ஊட்டி,

    கோத்தகிரி நேரு பூங்காவில் கோடை சீசனையொட்டி 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தொடங்கி வைத்தார்

    இந்த பூங்காவில் மலர்த்தோட்டம், அழகிய புல்தரை, ரோஜா பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவைகளுடன் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த பூங்கா பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    நேரு பூங்காவையொட்டி புகழ்பெற்ற காந்தி மைதானமும், பூங்கா வளாகத்திலேயே ஆதிவாசி இன மக்களான கோத்தர் இன மக்களின் குல தெய்வமான பழமையான அய்யனார், அம்மனோர் கோவில் அமைந்துள்ளது

    இந்த பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்கள் பங்கேற்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளை கொண்டு சிற்பங்களை அமைக்க உள்ளனர்.

    நேரு பூங்கா மற்றும் காய்கறி கண்காட்சியை கண்டு களிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதை முன்னிட்டு பூங்காவை கோடை சீசனுக்குள் மேம்படுத்தி, தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

    இதன் ஒரு பகுதியாக பூங்காவை மேம்படுத்த கோத்தகிரி பேரூராட்சி மூலம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பூங்காவை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்டும் பணி, கழிப்பிடங்களை புதுப்பிக்கும் பணி, சிறுவர் பூங்காவில் கூடுதல் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணி, வண்ண விளக்குகளுடன் செயற்கை நீரூற்று அமைக்கும் பணி, நடைபாதைகளை சீரமைத்து வர்ணம் பூசும் பணி உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றன.

    இதனால் பூங்கா புதுப்பொலிவுடன் திகழ்கிறது. மேலும் பூங்கா நுழைவு வாயிலில் டிக்கெட் கவுண்டர் கட்டும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பூங்காவில் தரையில் வளர்ந்துள்ள புல்களை எந்திரங்கள் மூலம் வெட்டி சமன் செய்து, பசுமையாக மாற்ற ஸ்ப்ரிங்ளர் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

    ரோஜா பூங்காவில் உள்ள ரோஜா மலர் செடிகளுக்கு கவாத்து செய்யப்பட்டு உள்ளது. 30 ஆயிரம் மலர் நாற்றுகள் மேலும் கோடை சீசனுக்காக பல்வேறு ரகங்களை சேர்ந்த 30 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    மலர் நாற்றுகளை நடவு செய்வதற்காக மண்ணை பதப்படுத்தி, மண்ணுடன் இயற்கை உரத்தை கலந்து மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.

    இதில் நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராகிம் ஷா கலந்துகொண்டு நாற்றுக்களை நடவு செய்து பணியைத் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, துணைத் தலைவர் உமா நாத், செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உள்பட பேரூராட்சி அலுவலர்கள், மன்ற உறுப்பினர்கள், பூங்கா ஊழியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு மலர் நாற்றுக்களை நடவு செய்தனர்.

    இந்த பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முடிவடைந்து வரும் மார்ச் மாத தொடக்கத்தில் மலர்கள் பூத்து குலுங்குவதுடன், காய்கறி கண்காட்சிக்கு பூங்கா தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ரூ.70 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #MetroTrain #ChennaiMetro #CMRL
    சென்னை:

    சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 28 கி.மீ. தூரத்திற்கு பணிகள் முடிந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் (2.7 கி.மீ.) மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். (4.5.கி.மீ) வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதையடுத்து இந்த 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து இனி நேரடியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியும்.

    25 கி.மீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரத்தில் பயணம் செய்யலாம். சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை 2 வழிப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை இனி செயல்படும்.

    மே தின பூங்கா-ஏ.ஜி. டி.எம்.எஸ். இடையே ஒரு வழிபாதை மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளது.

    சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ரூ.70 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழும்பூர், நேரு பூங்கா, ஷெனாய் நகர், அண்ணா நகர், கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்வதற்கு ஆட்டோ, காரை விட மிகு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


    நீண்ட தூரம் செல்லக்கூடிய எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு ரூ.60 கட்டணமும், கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ரூ.40 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து கோயம்பேடு செல்ல ஆட்டோவில் ரூ.100-க்கு குறைவாக யாரும் வாங்குவது இல்லை. ரூ.40 கட்டணத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்குள் மிக எளிதாக மெட்ரோ ரெயில் மூலம் சொகுசாக பயணம் செய்ய முடியும்.

    சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் சேவை தற்போது தொடங்கி இருப்பதால் இனி பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளும் எளிதாக தொடர் பயணம் மேற்கொள்ள வசதியாக மெட்ரோ ரெயில் சேவை இணைக்கப்பட்டுள்ளது. மக்கள் நெரிசலின்றி குறித்த நேரத்தில் செல்லக்கூடிய இடங்களை அடையலாம்.

    இதே போல ஏ.ஜி.டி.எம்.எஸ்.-விமான நிலையம் வரை உள்ள 12 கி.மீ தூரத்திற்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக உள்ள நகரங்களில் சென்னை 2-வது இடமாக உள்ளது. ஆனாலும் சென்னையில் ஆட்டோ, கார் போன்றவற்றை பயன்படுத்தும் கட்டணத்தை விட இது குறைவாகும்.

    பயண நேரம் குறைவாக இருப்பதால் மெட்ரோ ரெயிலை மக்கள் இனி அதிகம் விரும்புவார்கள். அண்ணா சாலையில் பணிகள் முடித்து சேவை தொடங்கும் போது இதை விட விரைவாக விமான நிலையம் செல்ல முடியும்.

    மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக இயக்கப்படும் போது பொதுமக்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும். ஆனாலும் இன்று தொடங்கியுள்ள இந்த 2 சேவைகள் மூலம் விமான நிலையத்திற்கு செல்லக் கூடிய பயணிகளும் அங்கிருந்து வெளியே வரும் பயணிகளும் அதிகளவு பயணிக்க வாய்ப்பு உள்ளது.

    பொதுவாக விமான நிலையத்திற்கு சொந்த கார் மூலமோ அல்லது வாடகை கார் மூலமோ செல்வார்கள். இனி மெட்ரோ ரெயில் வழியாக குறைந்த கட்டணத்தில் சொகுசாக செல்ல முடியும். #MetroTrain #ChennaiMetro #CMRL
    சென்னையில் இன்று மேலும் இரண்டு முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #ChennaiMetro #CMOpenMetro
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.20 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இத்திட்டம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக நிறைவேற்றப்படுகிறது.

    வண்ணாரப்பேட்டை- சென்ட்ரல்- கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை ஒரு வழியாகவும், சென்ட்ரலில் இருந்து தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை மார்க்கமாக மற்றொரு வழியாகவும் செயல்படுத்தப்படுகிறது.

    உயர்மட்டப்பாதை மற்றும் சுரங்கப்பாதை என 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரெயில் திட்டம் முதன் முதலாக கோயம்பேடு- அசோக்நகர் இடையே தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சின்னமலை- விமான நிலையம் இடையே இயக்கப்பட்டது.

    3-வது கட்டமாக முழுவதும் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. நேரு பூங்கா-திருமங்கலம் இடையே கடந்த ஆண்டு சேவை தொடங்கப்பட்டது. தற்போது நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை நடைப்பெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேரு பூங்கா-எழும்பூர்-சென்ட்ரல் சுரங்கப்பாதை பணிகள் நிறைவுற்று பயணிகள் சேவை தொடங்குவதற்கு தயாராக்கப்பட்டன. அதே போல சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை ஏ,ஜி. டி.எம்.எஸ். இடையே பணிகள் நிறைவடைந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து இந்த 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்புதல் அளித்தது.

    இதையொட்டி எழும்பூர்- சென்ட்ரல் மற்றும் சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா இன்று நடந்தது.


    எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.

    பின்னர் சுரங்கப்பாதை யில் எழும்பூர்- சென்ட்ரல் மெட்ரோ ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தார். அவருடன் அமைச்சர்களும் சென்றார்கள்.

    விழாவில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துறை செயலாளர்கள் துர்கா சங்கர் மிஷ்ரா, பங்கஜ் குமார் பன்சல், டி.வி.சோமநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்ட்ரல்-நேரு பூங்கா இடையே புதிய சேவை தொடங்கப்பட்டதால் இனி சென்ட்ரலில் இருந்து நேரடியாக மீனம்பாக்கத்திற்கு செல்ல முடியும். #ChennaiMetro #CMOpenMetro
    நேருபூங்கா-சென்ட்ரல் மெட்ரோ ரெயில் பணிகளை பாதுகாப்பு கமி‌ஷனர் இன்று 2-வது நாளாக ஆய்வு செய்தார். #Metrotrain

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர் மட்டபாதையிலும், திருமங்கலம்-நேருபூங்கா வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை தற்போது நடந்து வருகிறது.

    மெட்ரோ ரெயிலுக்கு சென்னை மக்களிடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதில் நேரு பூங்கா-சென்ட்ரல், சைதாப்பேட்டை-தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான பணிகள் முடிவடைந்துள்ளன.

    ஷெனாய்நகர்- நேரு பூங்கா வரையிலான 2-வது லைன் பாதை பணிகளும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு பணிகளை தொடங்கினர். டிராலியில் சென்று ஆய்வு பணிகளை பார்வையிட்டனர்.

    இந்த வழித்தட பாதையில் இன்று மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தினர். இதில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. அதைதொடர்ந்து தீவிபத்து நடந்தால் பயணிகளை பாதுகாப்பது குறித்தும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி ஆய்வு செய்தனர்.

    நேருபூங்கா-சென்ட்ரல் இடையேயான வழித்தடத்தில் இன்று டிராலியில் சென்று ஆய்வு பணிகளை மேற் கொண்டனர். அதை தொடர்ந்து மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தினர்.

    பாதுகாப்பு கமி‌ஷனர் ஆய்வு பணிகள் குறித்து சான்றிதழ் அளித்ததும் இம்மாதம் இறுதியில் மெட்ரோ ரெயில் இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதைதொடர்ந்து நேரு பூங்கா-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வழித்தட பாதையில் பயணிகளுக்கான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் என தெரிகிறது. #Metrotrain

    ×