search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai central - Airport"

    சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ரூ.70 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #MetroTrain #ChennaiMetro #CMRL
    சென்னை:

    சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 28 கி.மீ. தூரத்திற்கு பணிகள் முடிந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் (2.7 கி.மீ.) மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். (4.5.கி.மீ) வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதையடுத்து இந்த 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் சென்ட்ரலில் இருந்து இனி நேரடியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடியும்.

    25 கி.மீ தூரமுள்ள இந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரத்தில் பயணம் செய்யலாம். சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை 2 வழிப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை இனி செயல்படும்.

    மே தின பூங்கா-ஏ.ஜி. டி.எம்.எஸ். இடையே ஒரு வழிபாதை மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளது.

    சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ரூ.70 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழும்பூர், நேரு பூங்கா, ஷெனாய் நகர், அண்ணா நகர், கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்வதற்கு ஆட்டோ, காரை விட மிகு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


    நீண்ட தூரம் செல்லக்கூடிய எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு ரூ.60 கட்டணமும், கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ரூ.40 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து கோயம்பேடு செல்ல ஆட்டோவில் ரூ.100-க்கு குறைவாக யாரும் வாங்குவது இல்லை. ரூ.40 கட்டணத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்குள் மிக எளிதாக மெட்ரோ ரெயில் மூலம் சொகுசாக பயணம் செய்ய முடியும்.

    சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் சேவை தற்போது தொடங்கி இருப்பதால் இனி பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளும் எளிதாக தொடர் பயணம் மேற்கொள்ள வசதியாக மெட்ரோ ரெயில் சேவை இணைக்கப்பட்டுள்ளது. மக்கள் நெரிசலின்றி குறித்த நேரத்தில் செல்லக்கூடிய இடங்களை அடையலாம்.

    இதே போல ஏ.ஜி.டி.எம்.எஸ்.-விமான நிலையம் வரை உள்ள 12 கி.மீ தூரத்திற்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகமாக உள்ள நகரங்களில் சென்னை 2-வது இடமாக உள்ளது. ஆனாலும் சென்னையில் ஆட்டோ, கார் போன்றவற்றை பயன்படுத்தும் கட்டணத்தை விட இது குறைவாகும்.

    பயண நேரம் குறைவாக இருப்பதால் மெட்ரோ ரெயிலை மக்கள் இனி அதிகம் விரும்புவார்கள். அண்ணா சாலையில் பணிகள் முடித்து சேவை தொடங்கும் போது இதை விட விரைவாக விமான நிலையம் செல்ல முடியும்.

    மெட்ரோ ரெயில் சேவை முழுமையாக இயக்கப்படும் போது பொதுமக்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும். ஆனாலும் இன்று தொடங்கியுள்ள இந்த 2 சேவைகள் மூலம் விமான நிலையத்திற்கு செல்லக் கூடிய பயணிகளும் அங்கிருந்து வெளியே வரும் பயணிகளும் அதிகளவு பயணிக்க வாய்ப்பு உள்ளது.

    பொதுவாக விமான நிலையத்திற்கு சொந்த கார் மூலமோ அல்லது வாடகை கார் மூலமோ செல்வார்கள். இனி மெட்ரோ ரெயில் வழியாக குறைந்த கட்டணத்தில் சொகுசாக செல்ல முடியும். #MetroTrain #ChennaiMetro #CMRL
    சென்னையில் இன்று மேலும் இரண்டு முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். #ChennaiMetro #CMOpenMetro
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.20 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இத்திட்டம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக நிறைவேற்றப்படுகிறது.

    வண்ணாரப்பேட்டை- சென்ட்ரல்- கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை ஒரு வழியாகவும், சென்ட்ரலில் இருந்து தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை மார்க்கமாக மற்றொரு வழியாகவும் செயல்படுத்தப்படுகிறது.

    உயர்மட்டப்பாதை மற்றும் சுரங்கப்பாதை என 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரெயில் திட்டம் முதன் முதலாக கோயம்பேடு- அசோக்நகர் இடையே தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சின்னமலை- விமான நிலையம் இடையே இயக்கப்பட்டது.

    3-வது கட்டமாக முழுவதும் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. நேரு பூங்கா-திருமங்கலம் இடையே கடந்த ஆண்டு சேவை தொடங்கப்பட்டது. தற்போது நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை நடைப்பெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேரு பூங்கா-எழும்பூர்-சென்ட்ரல் சுரங்கப்பாதை பணிகள் நிறைவுற்று பயணிகள் சேவை தொடங்குவதற்கு தயாராக்கப்பட்டன. அதே போல சைதாப்பேட்டை- தேனாம்பேட்டை ஏ,ஜி. டி.எம்.எஸ். இடையே பணிகள் நிறைவடைந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இதனைத்தொடர்ந்து இந்த 2 வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்புதல் அளித்தது.

    இதையொட்டி எழும்பூர்- சென்ட்ரல் மற்றும் சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா இன்று நடந்தது.


    எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.

    பின்னர் சுரங்கப்பாதை யில் எழும்பூர்- சென்ட்ரல் மெட்ரோ ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து அதில் பயணம் செய்தார். அவருடன் அமைச்சர்களும் சென்றார்கள்.

    விழாவில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துறை செயலாளர்கள் துர்கா சங்கர் மிஷ்ரா, பங்கஜ் குமார் பன்சல், டி.வி.சோமநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்ட்ரல்-நேரு பூங்கா இடையே புதிய சேவை தொடங்கப்பட்டதால் இனி சென்ட்ரலில் இருந்து நேரடியாக மீனம்பாக்கத்திற்கு செல்ல முடியும். #ChennaiMetro #CMOpenMetro
    ×