என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் பரமத்திவேலூர் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • சோதனையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவர்கள் கைது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் பரமத்திவேலூர் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சட்டவிரோதமாக வேலூர் 4 ரோடு, சந்தை பகுதி, செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் பாலப்பட்டி அருகே உள்ள செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் மது பாட்டில்களை விற்பனை செய்த வேலூர் கிழக்கு தெரு, தேர் வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (39), வேலூர் கந்த நகரை சேர்ந்த மோகன் (65) டிரைவர், பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையம், தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (48) மற்றும் பாலப்பட்டி அருகே உள்ள செங்கப்பள்ளியை சேர்ந்த பாரத் (29) ஆகிய 4 பேர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்களையும் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஸ்கூட்டர், ஒரு மொபட் உள்ளிட்ட 3 வாகனங்களையும் பறிமுதல் செய்து, தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.
    • இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கீழேரிப் பட்டியில் நிதி மோசடி செய்த வர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் முதலீட்டா ளர்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.

    இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். இதையடுத்து கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஏராள மானோர் இந்த நிதி நிறுவ னத்தில் முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகிய இருவரும் இறந்து விட்டனர். இதையடுத்து நிதி நிறுவனத்தை அவர்களது மகள் சவுந்தர்யா, அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகி யோர் நடத்தி வந்ததாக தெரி கிறது.மேலும் முதலீட்டா ளர்களுக்கு முதிர்வு தொகை உள்ளிட்ட வற்றை வழங்காமல் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • உலக தாய்ப்பால்‌ வார விழா "தாய்ப்பால்‌ ஊட்டலை சாத்தியமாக்குவோம்‌ பணிபுரியும்‌ பெற்றோரின்‌ வாழ்வில்‌ மாறுதலை உருவாக்குவோம்‌" என்ற தலைப்பில்‌ நடைபெற்றது.
    • தாய்க்கும்‌ சேய்க்கும்‌ பல நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்கள்‌ நலனில்‌ அதிக கவனம்‌ செலுத்தி வருகிறார்கள்‌.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா "தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம் பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் நடைபெற்றது.

    விழாவில் கலெக்டர் உமா பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, தாய்க்கும் சேய்க்கும் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தை களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டு உலகத் தாய்ப்பால் வாரத்தின் கருத்தாக "தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம் பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது

    பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவை யான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் உள்ளது. தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. குழந்தையின் சிறப்பான ஆரோக்கியமான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உடல் நலத்திற்காக பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் எடைக்குறைபாடு உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாடில்லாத ஆரோக்கியமான குழந்தையாக வளருவார்கள்.

    தாய்ப்பால் உட்கொள்வ தால் குழந்தைகள், கூர்ந்த அறிவுத் திறன் வாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை பிற்காலத்தில் வருவதை தடுக்கிறது. தாய்ப்பால் புகட்டுவதால் தாய்மார்களுக்கு பிரசவத்துக்கு பின் வரும் இரத்த கசிவு போன்ற ஆபத்து குறைகிறது. பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் அமைந்துள்ளன. எனவே அனைத்து தாய்மார்களும் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் தாய்ப்பால் தானம் வழங்கிய தாய்மார்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பிரசவித்த தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகங்களையும் கலெக்டர் டாக்டர். உமா தலைமையில் நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் முன்னிலையில் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தாஅருள்மொழி, இணை பேராசிரியர் டாக்டர் சுரேஷ் கண்ணன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் குணசேகரன், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணப்பன், குழந்தைகள் நல டாக்டர்மஹாலட்சுமி, மற்றும் தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    தர்ணா

    தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுக்கு ரூ.720 என தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் இப்போது ரூ.320 மட்டுமே வழங்கப்படுகிறது. விடுமுறை எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.825 வரை பிடித்தம் செய்கின்றனர். எனவே நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பணிகள் பாதிப்பு

    அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மருத்து வமனையில் தூய்மை பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • மகா மாரியம்மன் கோவி லில் பால்குட அபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை மகா மாரியம்மனுக்கு கண பதி ஹோமமும், யாக வேள்ளியும் நடைபெற்றது.
    • மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் 100 திருவிளக்கு நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையா றில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவி லில் பால்குட அபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை மகா மாரியம்மனுக்கு கண பதி ஹோமமும், யாக வேள்ளியும் நடைபெற்றது.மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் 100 திருவிளக்கு நடைபெற்றது. இரவு கோயில் வளாகம் முன்பு 1008 திருவிளக்கு பூஜையும் நடை பெற்றது. இதில் ஆயிரக்க ணக்கான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.

    நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடங்க ளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்த டைந்தனர். பகல் 12- மணிக்கு மகா மாரி யம்மனுக்கு 10,008 பால்குட அபிஷேகம் நடை பெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபி ஷேக ஆராதனை களும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடை பெற்றது. இதில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ஊஞ்சல் உற்சவம்

    இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடு களை நன்செய் இடையாறு மகா மாரி யம்மன் கோவில் பரம்பரை அறங்கா வலர்கள், எட்டுப் பட்டி ஊர் தர்ம கர்த்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் பொத்தனூர் மகாபகவதி அம்மன் கோவிலில் 108பால்குட அபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை பம்பை மேளம் முழங்க பால்குடங்க ளுடன் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பால் குடங்களுக்கு அபி ஷேகம் செய்து பால்குடங்க ளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.

    காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் பகவதி அம்ம னுக்கு பாலா பிஷேகமும், திருமஞ்சன அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், அன்னதானமும் நடை பெற்றது. விழாவிற்கான ஏற்பாடு களை பொத்தனூர் மகா பகவதி அம்மன் கோவில் பால்குட அபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர்.

    • முன்னாள்‌ முதல்- அமைச்சர்கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும்‌ சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த முகாமில்‌ கால்நடைகளுக்கு சிறு அறுவை சிகிச்சை, மலடு நீக்க சிகிச்சைகள்‌ உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகள்‌ அளிக்கப்படும்‌.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தை அடுத்த கூனவேலம்பட்டி யில் முன்னாள் முதல்- அமைச்சர்கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.விழாவை கலெக்டர் டாக்டர். உமா தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் நாமக்கல் ஆவின் ஆகிய துறைகள் இணைந்து நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 27.06.2023 அன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 1,125 கால்நடைகளும்,

    இரண்டாம் கட்டமாக 21.7.2023 அன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 1,202 கால்நடைகளும் பயனடைந்துள்ளன. தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கூனவேலம்பட்டியில் நடத்தும் மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிறு அறுவை சிகிச்சை, மலடு நீக்க சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகள் அளிக்கப்படும். இலவச செயற்கைமுறை கருவூட்டல் செய்யப்படும். ஸ்கேன் கருவி மூலம் ஆடு, மாடுகளுக்கு சினை பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஆடு, கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்படும். மாடு, கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

    செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படும். ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். ரத்தம், பால், தோல் மற்றும் சாண மாதிரிகள் பரிசோதனை, மடிநோய் கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்படும்.

    மேலும் இலவசமாக தீவனக் கரணைகள் மற்றும் விதைகள் வழங்கப்படும். சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் மற்றும் சிறந்த கறவைப் பசு பராமரிப்போருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து நிபுணர்கள் சிறப்புரை மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கால்நடைகளை முகா மிற்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெகநாதன், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் மருத்துவர் (பொறுப்பு) பாலசுப்பரமணியன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் நடராஜன், துணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு துறை) மருத்துவர்.டி.என்.அருண்பாலாஜி, உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மருத்துவர் என்.மருதுபாண்டி, உதவி பொது மேலாளர் (ஆவின்) லிடியா, ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி, கால்நடை மருத்துவர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் காளியப்பன் மற்றும் அவரது மகளை பரமத்திவேலூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
    • நள்ளிரவு சுமார் 2 மணி வரை அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன். இவர் அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் தொடர்பில் இருந்தாக கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    முதல் நாள் மாலை தொடங்கிய சோதனை மறுநாள் காலை வரை நடைபெற்றது. இந்த சோதனையின் அடிப்படையில் வீரா.சாமிநாதனின் உறவினரான நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்கார நகர் ராஜாஜி தெருவை சேர்ந்த தொழில் அதிபர் டயர் கடை மணி என்கிற காளியப்பன் வீட்டிற்கு நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.

    பின்னர் அவர்கள் காளியப்பனின் வீடு மற்றும் அவரது நிதி நிறுவனத்தில் சோதனை நடத்தினர். சோதனையின்போது வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், வீட்டில் இருந்தவர்களையும் வெளியே செல்ல அமலாக்கத்துறையினர் அனுமதிக்கவில்லை. வீட்டை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    மேலும் காளியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதனுடன் உள்ள தொடர்பு குறித்தும் அவர் ஏதாவது சொத்து, முதலீடு பத்திரங்கள் கொடுத்துள்ளாரா? என்றும் விசாரணை நடத்தினர்.

    நேற்று 2வது நாளாகவும் காளியப்பன் வீடு மற்றும் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் காளியப்பன் மற்றும் அவரது மகளை பரமத்திவேலூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    சுமார் 1 மணி நேரம் வங்கியில் விசாரணை நடத்தி விட்டு மீண்டும் அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் காளியப்பனின் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய 2 ஊழியர்களிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். பின்னர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து வங்கி அலுவலர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் நகை எடை மதிப்பிடும் எந்திரத்துடன் சோதனை நடத்தப்பட்ட நிதி நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    நள்ளிரவு சுமார் 2 மணி வரை சோதனை நடைபெற்றது. பின்னர் அமலாக்கதுறை அதிகாரிகள் தொழிலதிபர் காளியப்பன் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் ரொக்க பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலாள சொத்து ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் 3 சூட்கேஸ்களில் எடுத்து சென்றனர்.

    இந்த சோதனையின் அடிப்படையில் காளியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • அருள் வந்த பூசாரி தேங்காய்களை பக்தர்களின் தலையில் உடைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும், மக்கள் நலம் பெறவும் வேண்டி காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே உள்ள காவேரி ஆற்றில் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    கூடச்சேரி, பில்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் கோவில்களில் இருந்த பழைய ஆயுதங்களை காவிரி ஆற்றுக்கு கொண்டு வந்து அதனை காவிரியில் சுத்தம் செய்தனர். பின்னர் ஆயுதங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

    அதனை தொடர்ந்து பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அருள் வந்த பூசாரி தேங்காய்களை பக்தர்களின் தலையில் உடைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மாலை 5 மணியளவில் வேலூர் சோழன் பாய்ஸ் ஏ. இயக்க மீனவர் சங்கம் சார்பில் பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் 26-ம் ஆண்டு தொடர் பரிசல் போட்டி நடைபெற்றது.

    இதில், பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோவில் காவிரி கரையில் இருந்து மறுகரையில் உள்ள கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி வரை சென்று மீண்டும் காசி விஸ்வநாதர் கோவில் பகுதியை வந்தடைந்தது.

    இதில் முதல் பரிசை பெற்ற பரமத்திவேலூரைச் சேர்ந்த ராஜாவுக்கு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு பெற்ற கணேசனுக்கு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு பெற்ற விஸ்வாவுக்கு ரூ.5 ஆயிரம், 4-ம் பரிசு பெற்ற முட்டி என்கிற கணேசனுக்கு ரூ. 3 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    பரிசு தொகையினை டி.எஸ்.பி ராஜமுரளி வழங்கி பாராட்டினார்.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும், மக்கள் நலம் பெறவும் வேண்டி காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக காசி விஸ்வநாதர் கோவிலில் மோட்ச தீபத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பரிசல் மூலம் காவிரி ஆற்றின் மத்திய பகுதிக்கு சென்று விடப்பட்டது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில், வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம், நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    • 30-க்கும் மேற்பட் டோர் சரக்கு வாகனத்தில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அவர்களது குல தெய்வமான அய்யனார் கோவிலுக்கு ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக சென்றனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள சீராப்பள் ளியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் உள்பட 30-க்கும் மேற்பட் டோர் சரக்கு வாகனத்தில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அவர்களது குல தெய்வமான அய்யனார் கோவிலுக்கு ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு வழிபாடு நடத்துவதற்காக சென்றனர்.

    அங்கு அவர்கள் வழி பாடு நடத்திவிட்டு நேற்று மாலை 6.30 மணியளவில் அதே சரக்கு வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். சீராப்பள்ளி யைச் சேர்ந்த தர்மலிங்கம் (வயது 50) சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தார். ராசிபுரம்-நாம கிரிப்பேட்டை சாலையில் சீராப்பள்ளி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் வந்து கொண்டி ருந்த போது திடீரென்று ஸ்டேரிங் லாக் ஆகிவிட்ட தாக கூறப்ப டுகிறது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் அப்போது கூச்ச லிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து காயம் பட்ட வர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசி புரம் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 14 பெண்கள் உட்பட 22 பேர் காயம் அடைந்தனர். இவர்க ளில் 17 பேர் ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். அவர்கள் விவரம் பின்வருமாறு:-

    வனிதா (26), ராமாயி (65), பாப்பு (48), சரஸ்வதி (22), கல்பனா (46), அத்தாயி (70), லட்சுமி (58), சின்ன பொன்னு (65), ஜெயம்மாள் (44), ருகமணி(40), இளைய நிலா (13), பரிமளா (45), சிவா(13), தங்கமணி (48), இளங்கோ (45), தஸ்வின் (10), கோல் வேந்தன் (3) இவர்கள் அனைவரும் தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    விசாரணை

    மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த நந்தகுமார் (17), கவிதா (36), பவுன் (55), சிவகாமி (55), ஆதித்தன் (8) உள்பட 5 பேர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். இதில் பவுன் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி னார். டிரைவர் தர்ம லிங்கம் காயம் இன்றி தப்பிய தாக கூறப்படுகிறது. விபத்தில் காயம் அடைந்த வர்கள் அனைவரும் சீராப் பள்ளியை சேர்ந்தவர்கள் ஆவர். விபத்து குறித்து நாம கிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
    • கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது.

    கொல்லிமலை:

    ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

    கொண்டை ஊசி வளைவு

    சுமார் 9 மணியளவில் அரியூர்நாடு பஞ்சாயத்து கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.

    சிகிச்சை

    விரைந்து வந்த வாழவந்தி நாடு போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செம்மேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வாழவந்திநாடு போலீ

    சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.   

    • ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்க ளிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்க ளிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு கூழ், துள்ளு மாவு உள்ளிட்ட வற்றை படைத்து வழிபட்டனர்.

    இதேபோல், செல்லாண் டியம்மன், வண்டிக்காரன் தெரு பகவதியம்மன், அன்பு நகர் சுய வேம்பு மாரியம்மன், கொண்டி செட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    அன்ன அலங்காரம்

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்ன அலங்காரம் செய் யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட் டது. இதில் ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராள மானோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர் தாலுகா, கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்ம னுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தீபாராதனை

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு கூழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றங்க ரையில் அமைந்துள்ள காசி விசாலாட்சி, பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டி யம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், பரமத்தி வேலூர் எல்லையம்மன், பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரி யம்மன், குன்னத்தூர் மாரி யம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டி யம்மன், வட கரையாத்தூர் மாரி யம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்க ளில் சிறப்பு அபிஷேக ஆரா தனை களும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

    பால்குட ஊர்வலம்

    சேந்தமங்கலம் அடுத்த முத்துகாப்பட்டி மாரி யம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்று கோவிலை அடைந் தனர். தொடர்ந்து அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    இதேபோல் பச்சுடை யாம்பட்டி காளியம்மன், காந்திபுரம் கருமாரி அம்மன், சேந்தமங்கலம் பெரிய மாரி யம்மனுக்கு ஆடி வெள்ளியை முன் னிட்டு சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டு, பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ளது.
    • விநாய கருக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாய கருக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதே போல் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர், கோப்ப ணம் பாளையம் பரமேஸ்வ ரர் ஆலயத்தில் உள்ள விநாயகர் ,பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர் ,பாண்டமங்கலம் விநாயகர், ஆனங்கூர் விநா யகர், அய்யம்பாளையம் விநா யகர், பிலிக்கல்பா ளையம், கொந்தளம் வேலூர் வட கரையா்தூர், ஜேடர்பாளை யம்,சோழசிரா மணி, கபிலர்மலை, பரமத்தி மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    ×