search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர் கிழிப்பு
    X

    கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர் கிழிப்பு

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டிருந்தது.
    • இந்த பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சி அலுவ லகம் முன்பு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு வேலூர் பேரூராட்சி அலுவ லகம் முன்பு வைக்கப்பட்டி ருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிழித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×