search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நன்செய்இடையாறு மகாமாரியம்மன் கோவிலில் பால் அபிஷேகம்
    X

    நன்செய்இடையாறு மகாமாரியம்மன் கோவிலில் பால் அபிஷேகம்

    • மகா மாரியம்மன் கோவி லில் பால்குட அபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை மகா மாரியம்மனுக்கு கண பதி ஹோமமும், யாக வேள்ளியும் நடைபெற்றது.
    • மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் 100 திருவிளக்கு நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையா றில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவி லில் பால்குட அபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை மகா மாரியம்மனுக்கு கண பதி ஹோமமும், யாக வேள்ளியும் நடைபெற்றது.மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் 100 திருவிளக்கு நடைபெற்றது. இரவு கோயில் வளாகம் முன்பு 1008 திருவிளக்கு பூஜையும் நடை பெற்றது. இதில் ஆயிரக்க ணக்கான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.

    நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடங்க ளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்த டைந்தனர். பகல் 12- மணிக்கு மகா மாரி யம்மனுக்கு 10,008 பால்குட அபிஷேகம் நடை பெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபி ஷேக ஆராதனை களும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடை பெற்றது. இதில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ஊஞ்சல் உற்சவம்

    இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடு களை நன்செய் இடையாறு மகா மாரி யம்மன் கோவில் பரம்பரை அறங்கா வலர்கள், எட்டுப் பட்டி ஊர் தர்ம கர்த்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் பொத்தனூர் மகாபகவதி அம்மன் கோவிலில் 108பால்குட அபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை பம்பை மேளம் முழங்க பால்குடங்க ளுடன் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பால் குடங்களுக்கு அபி ஷேகம் செய்து பால்குடங்க ளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.

    காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் பகவதி அம்ம னுக்கு பாலா பிஷேகமும், திருமஞ்சன அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், அன்னதானமும் நடை பெற்றது. விழாவிற்கான ஏற்பாடு களை பொத்தனூர் மகா பகவதி அம்மன் கோவில் பால்குட அபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர்.

    Next Story
    ×