என் மலர்
நாமக்கல்
- கரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடை பகுதியில் மதுப்பாட்டில்களை வைத்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
- நல்லூர் போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடை பகுதியில் மதுப்பாட்டில்களை வைத்து மது அருந்துவதற்குஅனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் அங்கு மது அருந்தி கொண்டிருப்பதாகவும் நல்லூர் போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்று பார்த்தபோது அங்கு பலர் மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு மது அருந்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரசு அனுமதி இன்றி கடையில் அமர்ந்து மது அருந்த அனுமதித்ததாக பெட்டிக்கடை உரிமையாளர் சக்திவேல் (51) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 61 -வது மகாசபை கூட்டம் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு சங்க தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 61 -வது மகாசபை கூட்டம் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். தேர்தல் கமிட்டி நிர்வாகிகள் பழனிசாமி, சோமசுந்தரம், லாரி சங்க செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தன்ராஜ், திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் லட்சுமணன், சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள். செயலாளர் மோகன்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வராஜ் வரவு -செலவு கணக்குகளை வாசித்தார். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
தொடர்ந்து திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மூர்த்தி தீர்மானங்களை வாசித்தார். தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனே அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செங்கோட்டில் ஆட்டோ நகர் அமைத்து தர வேண்டும். திருச்செங்கோடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் சார்பில் விரைவில் திருச்செங்கோடு சுற்றுவட்ட பாதையில் புதிய பெட்ரோல் பங்க் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.
கூட்டத்தில் ஆடிட்டர் மாதவன், சட்ட ஆலோசகர் வக்கீல் பரணிதரன், மூத்த உறுப்பினர் அப்பாவு, சக்திவேல் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினார்கள். திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் அனிதா வேலு, பாரி கணேசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன தணிக்கை நடைபெற்றது.
- இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை யில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன தணிக்கை நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்வாகன சோதனை யில் ஈடுபட்டனர். இதில் தகுதி சான்று இல்லாமல் இயக்கிய 2 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து திருச்செங் கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் கூறியதாவது:-
கடந்த ஜூலை மாதத்தில் தொடர் வாகன தணிக்கை மேற்கொண்டதில் 630 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு 129 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.வரி செலுத்தாத மற்றும் இதர குற்றங்களுக்காக 30 வாகனங்களுக்கு வரியாக ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் விதிக்கப்பட்டது. மேலும் 99 வாகனங்களுக்கு ரூ.10 லட்சத்து 33 ஆயிரத்து 300 இணக்க கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதன்படி வரி மற்றும் இணக்க கட்டணமாக மொத்தம் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 400 அரசுக்கு வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியது, சீட் பெல்ட் அணியாதது, சிக்னல்களை மதிக்காமல் முந்தி சென்றது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது போன்ற குற்றங்களுக்காக 67 வாக னங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் வாக னங்கள் பறிமுதல் செய்யப்படும். அந்த வகையில் தற்போது 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளிபாளையம் வட்டார அளவிலான கபடி போட்டி வெப்படை அருகே உள்ள தனியார் பள்ளியில் நடை பெற்றது.
- இதில் பள்ளிபாளையம் வட்டார அளவி லான அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டார அளவிலான கபடி போட்டி வெப்படை அருகே உள்ள தனியார் பள்ளியில் நடை பெற்றது. இதில் பள்ளிபா ளையம் வட்டார அளவி லான அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி கள், தனியார் பள்ளிகள் என பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி முதலிடத்தை யும், பள்ளிபாளையம் அரசு உதவி பெறும் பள்ளி 2-ம் இடத்தையும் பிடித்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடல ரசு மற்றும் உடற்கல்வி இயக்குனர் சிவசுப்பிரமணி யம், ஆசிரியர்கள் மணி கண்டன், கவிராஜ், என்.சி.சி அலுவலர் அந்தோணிசாமி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணை தலைவர் அன்பரசு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், வட்டார விளை யாட்டு ஒருங்கி ணைப்பாளர் அப்துல்சமத் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
- சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது.
- இப்போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நாமக்கல்:
சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஒளிபரப்பு
இப்போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த கோப்பை தமிழகம் முழுவதும் எடுத்து செல்லப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் ஹாக்கி போட்டியை பொது மக்கள் காணும் வகையில் நாமக்கல் மாவட்ட விளை யாட்டுத்துறை சார்பில் நாமக்கல் செலம்ப கவுண்டர் பூங்காவில் எல்.இ.டி. திரை வாயிலாக நேரிலையாக காண்பிக்கப்பட்டது.
இந்தியா-மலேசியா இடையே நேற்று நடைபெற்ற போட்டியை இந்த எல்.இ.டி. திரையில் ராஜேஷ்குமார் எம்.பி. பொதுமக்களுடன் கண்டு ரசித்தார். இதனை பூங்காவிற்கு வந்திருந்த பொதுமக்களும் ஆர்வத்து டன் கண்டு களித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன், டாக்டர் மாயவன், நகராட்சி தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, சிவக்குமார் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா செய்திருந்தார்.
- மர்மநபர்கள் வேகமாக மொபட் அருகில் சென்று ஜோதி அணிந்திருந்த தாலி செயினை பிடித்து இழுத்தனர்.
- செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி-கபிலர்மலை செல்லும் சாலையில் வசித்து வருபவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி ஜோதி (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் காலையில் தனது மொபட்டில் பரமத்தி-திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடைக்கு இறைச்சி வாங்குவதற்காக சென்றார். பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் அர்த்தனாரிபாளையம் அருகே சென்றபோது அவருக்கு பின்னால் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஜோதியை துரத்தினர்.
மர்மநபர்கள் வேகமாக மொபட் அருகில் சென்று ஜோதி அணிந்திருந்த தாலி செயினை பிடித்து இழுத்தனர். உடனே சுதாகரித்துக் கொண்ட ஜோதி தாலி செயினை கையில் இறுக்கமாக பிடித்துக்கொண்டு மர்மநபர்களிடமிருந்து போராடியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இருப்பினும் மர்மநபர்கள் அவரை விடவில்லை. சாலையில் படுகாயங்களுடன் துடித்துக்கொண்டிருந்த அவரை சரமாரியாக தாக்கி ஜோதியிடம் இருந்து பாதி செயினை மர்மநபர்கள் பறித்துக்கொண்டனர். அவரது அலறல் சத்தம் கேட்டு சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அங்கு திரண்டு வருவதை கண்டதும் மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஜோதியை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் வழிப்பறி கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ நடந்த பகுதியிலும் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டிருந்தது.
- இந்த பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சி அலுவ லகம் முன்பு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு வேலூர் பேரூராட்சி அலுவ லகம் முன்பு வைக்கப்பட்டி ருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிழித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியசாமி (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் கோழி லோடு ஏற்றிச் செல்லும் வேலைக்கு செல்கிறார்.
- இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியசாமி சேந்தமங்கலம் சாலை மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகிறார்.
நாமக்கல்:
நாமக்கல்லை அடுத்த முத்துகாப்பட்டி சேரமாதேவி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பெரியசாமி (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் கோழி லோடு ஏற்றிச் செல்லும் வேலைக்கு செல்கிறார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
கத்திக்குத்து
இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியசாமி சேந்தமங்கலம் சாலை மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகிறார். தனது குழந்தைகளை அவ்வப்போது மனைவியின் வீட்டிற்கு சென்று பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பெரியசாமி தங்கி உள்ள வீட்டிற்கு வனிதாவின் சகோதரர் செந்தில்குமரன் (40) சென்று குடும்ப பிரச்சனை குறித்து பேசி உள்ளார். இதில் இருவருக்கும் இடைேய திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது செந்தில்குமர னின் வயிற்று பகுதியில் பெரியசாமி கத்தியால் குத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
கைது
இதையடுத்து செந்தில்குமரன் கொடுத்த புகாரின்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்னர்.
இந்த கத்திகுத்து சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காயத்ரி (33). இவர் ராசிபுரம் டவுன் சேந்த மங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
- இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கரு மாக்கவுண்டம்பாளை யத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 38). பட்டதாரி. இவரது மனைவி காயத்ரி (33). இவர் ராசிபுரம் டவுன் சேந்த மங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஸ்மிதா (8), வைஸ்ணவ் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தனித்தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியை காயத்ரி அவரது குழந்தைகளுடன் சேலம் தாதகாப்பட்டியில் உள்ள அவரது தந்தை ராஜேந்திரன் வீட்டில் வசித்து வருகிறார். இங்கிருந்து அவரும் அவரது குழந்தைகளும் பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் ராஜாவும் அவரது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வந்துள்ளார்.
கத்திக்குத்து
இந்த நிலையில் ராஜா நேற்று மாலை தனது மனைவி காயத்ரி மற்றும் குழந்தைகளை ஞாயிற்றுக்கிழமை விடு முறையையொட்டி கருமாக்கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு போகலாம் என கூறி மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்ரி கணவருடன் சென்றார்.
அவர்கள் சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டகலூர்கேட் சக்தி நகர் அருகில் சென்றபோது மோட்டார்சைக்கிளை ராஜா நிறுத்தி விட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குழந்தைகள் எதிரிலேயே காயத்ரியை சரமாரியாக குத்தினார். அதன்பிறகு மகனை அழைத்துக்கொண்டு ராஜா மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த காயத்ரியை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை
இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆசிரியை காயத்ரியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் காயத்ரிக்கு ெதாடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தலைமறைவாக உள்ள அவரது கணவர் ராஜாவை ராசிபுரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது.
- சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் டாக்டர். உமா பங்கேற்று, அந்தந்த துறை பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது.
ஆலோசனை
இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் டாக்டர். உமா பங்கேற்று, அந்தந்த துறை பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். இதையடுத்து புதிய தாலுகா கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டார். இந்த பணிகளை வருகிற 31-ந் தேதிக்குள் முடித்து, செப். 1-ந் தேதி அலுவலகம் திறப்பு விழா நடத்தும் வகையில் பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் டாக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது:- நாமக்கல் மாவட்ட அளவில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் வழங் கும்முகாமில் இதுவரை 2.42 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு துறை பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பணிகள் துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போல் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் ஆய்வு நடைபெற்று வரு கிறது. புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் ஆக. 31ல் நிறைவடையும் வகையில் பணிகள் துரிதப் படுத்த அறிவுறுத்தப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார். புதிய தாலுகா அலுவலக கட்டிடம் அருகே பயணியர் மாளிகை யாரும் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அதை தலைமை தபால் அலுவலகமாக மாற்ற அனுமதி வழங்க வேண்டி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் காமராஜ், சித்ரா, மல்லிகா உள்ளிட்ட பலர் கோரிக்கை கொடுத்தனர்.
ஆய்வின் போது தாசில்தார் தங்கம், ஆர்.ஐ.க்கள் முருகேசன், கார்த்திகா, வி.ஏ.ஓ. முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன் உள்பட பலர் உடனிருந்தனர்.
- அய்யனார் நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
நாமக்கல்:
மதுரை மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த பேரையூர் பகுதியை சேர்ந்தவர் முக்கராஜ். இவரது மகன் அய்யனார் (வயது 29). கூலி தொழிலாளி.
இவர் நாமக்கல் ராமாவரம்புதூர் பகுதியில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள மது பாரில் வேலை பார்த்து வந்தார்.
வழக்கம்போல் நேற்று இரவு மதுபாரில் வேலையை முடித்துவிட்டு நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அதே பகுதியில் தான் தங்கி உள்ள அறைக்கு சென்றார். அப்போது மது போதையில் 2-வது மாடியில் தடுப்பு சுவரை பிடித்து நின்றவாறு செல்போனில் அய்யனார் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது தடுப்பு சுவர் திடீரென இடிந்தது. இதனால் அய்யனார் நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யனார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
- செந்தில்குமரனின் வயிற்று பகுதியில் பெரியசாமி கத்தியால் குத்தினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்னர்.
நாமக்கல்:
நாமக்கல்லை அடுத்த முத்துகாப்பட்டி சேரமாதேவி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பெரியசாமி (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் கோழி லோடு ஏற்றிச் செல்லும் வேலைக்கு செல்கிறார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியசாமி சேந்தமங்கலம் சாலை மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகிறார். தனது குழந்தைகளை அவ்வப்போது மனைவியின் வீட்டிற்கு சென்று பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பெரியசாமி தங்கி உள்ள வீட்டிற்கு வனிதாவின் சகோதரர் செந்தில்குமரன் (40) சென்று குடும்ப பிரச்சனை குறித்து பேசி உள்ளார். இதில் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது செந்தில்குமரனின் வயிற்று பகுதியில் பெரியசாமி கத்தியால் குத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதையடுத்து செந்தில்குமரன் கொடுத்த புகாரின்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்னர்.
இந்த கத்திகுத்து சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






