என் மலர்
நீங்கள் தேடியது "சூதாடியவர்கள் கைது"
- அங்கு சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
- இதையடுத்து அவர்கள் 6 பேரையும் மத்தூர் போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ், சுப்பிரமணி, மாரியப்பன், விநாயகமூர்த்தி, ராஜ்குமார், கேசவன் ஆகியோர் என தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் மத்தூர் போலீசார் கைது செய்தனர்.
- ஒரு புளியந்தோப்பில் 25 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது.
- கைதான அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனம் மற்றும் 18,500 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக டி.எஸ்.பி. பார்த்திபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வடுகனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு புளியந்தோப்பில் 25 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. இதில் பலரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அதில் திருப்பத்தூர் மாவட்டம், குழிச்சி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது31), செவ்வாரப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம், மத்தூர் அருகேயுள்ள கவுண்டனூரை சேர்ந்த பரமசிவம், சாமல்பட்டி அருகேயுள்ள பரசனூரை சேர்ந்த வீரசோர், மத்தூர் அடுத்துள்ள கமலாபுரத்தை சேர்ந்த மணிகண்டன், திருப்பத்தூர் மாவட்டம், இளவம்பட்டியை சேர்ந்த திருஞானம், மத்தூர் அருகேயுள்ள மணிகண்டன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனம் மற்றும் 18,500 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணம் வைத்து சூதாடுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது. அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மணியனூர் பகுதிகளைச் சேர்ந்த சண்முகம் (33), ரங்கநாதன் (35), சக்திவேல் (42), கோபிநாத் (34), லோகநாதன் (44), சந்திரன்( 45) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ஆயிரத்து 200 ரூபாைய பறிமுதல் செய்தனர்.
- சீட்டுகளை காண்பித்து பணம் வசூலித்தனர்.
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் பழனி பேட்டை பகுதிகளில் காட் டன் சூதாட்டம் நடைபெறுவ தாக அரக்கோணம் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டவுன் சப்- இன்ஸ்பெக்டர் முத்து ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் பழனிபேட்டை டி.என்.நகர், சோமசுந்தரம் நகர், உப்பரபாளையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பழனிபேட்டை பகுதியில் பெட்டிக்கடை ஒன்றில் காட்டன் சூதாட்ட சீட்டுகளை காண்பித்து சிலரிடம் பணம் வசூலித்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதே போன்று பழனி பேட்டை பிரதான சாலை, புதுபேட்டை ஆகிய பகுதிகளில் சப்- இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது பழனிபேட்டை அங் காளம்மன் கோவில் அருகே காட்டன் சூதாட்ட சீட்டு களை வைத்து பணம் வசூலித்த பழனிபேட்டை பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்தனர். 2 பேரிடமும் அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






