search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sewage treatment plant"

    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மொத்தமாக 12 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
    • விவசாயிகள் சுத்திகரிக்கப்பட்டு வரும் நன்னீரை விவசாய நிலத்திற்கு வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சாலைக்கார தெருவில் உள்ள மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று மேயர் சண்.ராமநாதன், ஆணையர் மகேஸ்வரி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் மேயர் சண் ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மொத்தமாக 12 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    இதில் தற்சமயம் ஒரு எந்திரம் பழுதாகி உள்ளதால் 11 எந்திரங்கள் மூலம் இன்று சுத்திகரிப்பு நடந்து கொண்டு உள்ளது.

    இன்னும் இரண்டு நாட்களில் பழுதான எந்திரமும் சரி செய்யப்பட்டு சுத்திகரிப்பு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இந்த சுத்திகரிப்பு நிலையம் 28 எம்.எல்.டி கொள்ளளவு கொண்டதாகும்.

    அதில் 13 எம் .எல். டி கழிவு நீரை நாள்தோறும் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

    இதிலிருந்து சுத்திகரிக்கப்படும் தண்ணீர் அனைத்தும் தற்சமயம் வடவாற்றில் விடப்படுகிறது.

    தண்ணீரை சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 300 ஏக்கர் நிலம் பயிரிடப்படுகிறது.

    அந்த விவசாயிகள் சுத்திகரிக்கப்பட்டு வரும் நன்னீரை விவசாய நிலத்திற்கு வழங்குமாறு ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர்.

    அந்த கோரிக்கை குறித்து விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    அது சம்பந்தமாக அனுமதி கிடைத்த பின்னர் விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    தற்சமயம் செய்யப்படும் ஆய்வு எதற்காக என்றால் மாநகராட்சி கூட்டங்களில் அடிக்கடி இந்த சுத்திகரிப்பு நிலையம் சரிவர வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாநகர நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, நகர அமைப்பு அலுவலர் ராஜசேகரன், தமிழ்நாடு நீர் முதலீட்டு கழகக்குழு தலைவர் எழிலன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • 2 சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள், குளங்கள் மாசடையும்.
    • கிராம சபைக்கூட்டத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாமக்கல்:

    குமாரபாளையம் தாலுகாவை சேர்ந்த கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா எலந்தகுட்டை, பல்லக்காபாளையம், சவுதாபுரம் ஆகிய பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் அரசு பள்ளி உள்ளன. இந்த பகுதியில் 2 சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள், குளங்கள் மாசடையும்.

    எலந்தக்கொட்டை, பல்லக்காபாளையம், சவுதாபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித் துள்ளனர். 

    • கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் இறுதியான நிலைபாடு என்று கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி கம்பிவேலி அமைத்து மாநகராட்சி வசம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட காயிதே மில்லத்நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயத்த பணிகள் தொடங்கியதால் காயிதே மில்லத்நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எதிர்ப்பு கூட்டமைப்பினர் சார்பில் 45-வது வார்டில் ஒருநாள் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் காயிதேமில்லத்நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாநகரில் 3 திட்டங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தும்போது அதை பார்த்து உங்களிடம் கருத்து கேட்டு உங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். தங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டாம். வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பதே எங்களின் இறுதியான நிலைபாடு என்று கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், தற்போதைய நிலையில் அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாது என்றும் அதிகாரிகள் உறுதி அளித்ததாக கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி கம்பிவேலி அமைத்து மாநகராட்சி வசம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு கோம்பை தோட்டம் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நேற்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை கழிவுநீர் சுத்திகரிப்பு மைய எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் கூறியதாவது :- இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு தங்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வரும் நிலையில், மேயர், எம்.எல்.ஏ., அமைச்சர் என 3 பேரும் தனித்தனியாக செயல்படுகின்றனர்.

    நாளை மாநகராட்சி மேயர்., எம்.எல்.ஏ, ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என்றால் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்களை திரட்டி 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

    • கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டால் கோம்பைதோட்டம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும்.
    • மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு கோம்பை தோட்டம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கு மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டால் கோம்பைதோட்டம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும். வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும்.

    எனவே கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கக்கூடாது என்றனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதனை கண்டித்து இன்று கோம்பைதோட்டம் பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • வளாகத்தை சுற்றிலும் தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெறுகிறது.
    • 7.2 கோடி லிட்டர் அளவிலான கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் நகரின் மையப்பகுதிகள் மட்டும் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.கடந்த 2007ல் தொடங்கிய இத்திட்டம் 2009ல் பயன்பாட்டுக்கு வந்தது. புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகத்தின் கட்டுப்பாட்டில் இதற்கான சுத்திகரிப்பு மையம் எஸ்.பெரியபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

    இத்திட்டத்தில் ஏறத்தாழ 16 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்ரூத் திட்டத்தில், மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகள் மற்றும் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.இதற்காக ஆண்டிபாளையம் மற்றும் எஸ்.பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் மேலும் இரு சுத்திகரிப்பு மையம் அமைக்கும் வகையில் பணி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவற்றின் மூலம் 7.2 கோடி லிட்டர் அளவிலான கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படும். இத்திட்டத்தில் ஏறத்தாழ 75 ஆயிரம் பாதாள சாக்கடை குழாய் இணைப்பு வழங்கப்படவுள்ளது.அவ்வகையில் இதற்கான குழாய்கள் பதிப்பு பணி மாநகராட்சி பகுதியில் பெருமளவு நிறைவடைந்துள்ளது.இத்திட்டத்தில் ஆண்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மையம் கட்டுமானம் மற்றும் எந்திரங்கள் பொருத்தப்பட்டு இயக்கத்துக்கு தயார் நிலையில் உள்ளது. தற்போது இந்த வளாகத்தை சுற்றிலும் தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெறுகிறது.

    • கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு

    ஆம்பூர்:

    ஆம்பூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அம்ருத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த ரூ.165 கோடியே 55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆம்பூர் நகராட்சி ஏகஸ்பா பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் ரூ.32 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பணி தற்போது 40 சதவிகிதம் முடிக்கப்பட்டுள் ளது.

    இந்த பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் பார் வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது 31.3.2023-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ராம்சேகர், உதவி நிர்வாக பொறியாளர் சண்முகம், நகராட்சி ஆணையர் ஷகிலா, நக ராட்சி பொறியாளர் ராஜேந்திரன், ஆம்பூர் நகராட்சி கவுன் சிலர் வசந்த்ராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    ×