search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு- வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்
    X

    கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு- வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்

    • கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டால் கோம்பைதோட்டம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும்.
    • மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு கோம்பை தோட்டம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அங்கு மாநகராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டால் கோம்பைதோட்டம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும். வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும்.

    எனவே கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கக்கூடாது என்றனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ., உள்ளிட்டோரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதனை கண்டித்து இன்று கோம்பைதோட்டம் பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×