search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூரில் ரூ.32 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
    X

    ஆம்பூரில் ரூ.32 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

    • கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு

    ஆம்பூர்:

    ஆம்பூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அம்ருத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த ரூ.165 கோடியே 55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆம்பூர் நகராட்சி ஏகஸ்பா பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் ரூ.32 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பணி தற்போது 40 சதவிகிதம் முடிக்கப்பட்டுள் ளது.

    இந்த பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் பார் வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது 31.3.2023-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ராம்சேகர், உதவி நிர்வாக பொறியாளர் சண்முகம், நகராட்சி ஆணையர் ஷகிலா, நக ராட்சி பொறியாளர் ராஜேந்திரன், ஆம்பூர் நகராட்சி கவுன் சிலர் வசந்த்ராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×