என் மலர்
நாமக்கல்
- விதைச்சான்று அலுவலர்கள் மூலம் வயலாய்வு செய்யப்பட்டு வயல் தரங்கள் உறுதி
- விதை சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படுகின்றன.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் சான்றளிப்பு செய்யப்பட்ட நிலக்கடலை மற்றும் உளுந்து ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
வயல் ஆய்வு
தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை மூலமாக விதைச்சான்ற ளிப்பில் பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்கள் மூலம் வயலாய்வு செய்யப்பட்டு வயல் தரங்கள் உறுதி செய்யப்படுகின்றன.
வயல்தரங்களில் தேறிய விதைப்பண்ணைகளில் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள் முறை யாக கடைப்பிடிக்கப்பட்டு அந்த வயல்மட்ட விதைகளை அரசு அங்கீகரிக்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படுகின்றன.
சான்று
பகுப்பாய்வில் விதைத்தரம் தேறிய விதை கள் சான்று செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப் படுகின்றன.
சான்று பெற்ற விதைகளில் ஆதாரநிலை விதைகளுக்கு வெள்ளை நிறச்சான்றட்டையும் சான்று விதைகளுக்கு நீல நிற அட்டையும் பொருத்தப் படுகிறது.
மேலும் சான்று பெற்ற விதைகளில் வெள்ளை நிற அல்லது நீல நிற அட்டையுடன் ஒரு பச்சைநிற உற்பத்தியாளர் அட்டையும் கட்டப்பட்டிருக்கும். இதைக் கொண்டு சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் எளிதாகக் கண்டறியலாம்.
சான்று பெற்ற விதைகள் அதிக புறத்தூய்மை, அதிக இனத்தூய்மை, அதிக முளைப்புத்திறன், அளவான ஈரப்பதம் போன்ற குணநலன்களை கொண்டிருக்கும்.
எனவே, விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை வாங்கி பயிரிட்டு அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம் என விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
- பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூ மார்க்கெட்டிற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.
- பூக்களை ஏலம் எடுத்துச் செல்வதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா
பகுதியில் உள்ள தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், செல்லப்பம்பாளையம், சானார்பாளையம், நகப்பாளையம், பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
பூக்கள் பூக்கும் தருவாயில் வந்த போது கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து லேசான கோணி பைகளில் போட்டு உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூ ரில் செயல்பட்டு வரும் 2 பூ மார்க்கெட்டிற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் . பூக்களை ஏலம் எடுத்துச் செல்வதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.
வாங்கிய உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலை களாகவும் ,தோரணங்களா கவும் கட்டி விற்பனை செய்கின்றனர். சில வியா பாரிகள் உதறிப் பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு சென்று பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகி றது. தற்போது பூக்களின் விளைச்சல் அதிகரித்துள் ளது. அதனால் பரமத்தி வேலூர் பூ ஏல மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகமானது.
நேற்று நடத்த ஏலத்தில், கடந்த வாரம் 600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டுமல்லி 300 ரூபாய்க்கும், கடந்த வாரம் 280 ரூபாய்க்கு விற்பனை யான சம்பங்கி 120 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி 80 ரூபாய்க்கும் விற்பனையானது.
அதேபோல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 100 ரூபாய்க்கும், 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 260 ரூபாய்க்கும் விற்பனை யானது.
இது குறித்து விவசாயிகள் கூறியதா வது:- கடந்த வாரம் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்தது. பண்டிகை முடிந்ததால் பூக்களின் விலை குறைந்தது. மேலும் இப்போது வெயில் சுட்டெ ரிப்பதால், பூக்களின் விளைச்சல் அதி கரித்துள்ளது.
வெயில் அதிகமாக அடிக்கும்போ து, பூக்களின் விளைச்சல் அதிகரிக்கும். அதனால், தற்போது பூக்களின் வர த்து அதிகமாகியுள்ளது. தற்பொழுது ஆடி மாதம் என்பதால் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இல்லாமல் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் ஆவணி மாதம் சுப முகூர்த்த நாட்களில், பூக்களின் விலை அதி கரிக்கும் என எதிர்க்கப் படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விஜயலட்சுமி வீட்டில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கிய நிலையில் பிண மாக கிடந்தார்.
- இதுகுறித்து செல்வம் திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பண்ணக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (57). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (33). இவர்களுக்கு 17 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர்.
பிணமாக கிடந்தார்
கடந்த 7-ந் தேதி மாலை விஜயலட்சுமி வீட்டில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கிய நிலையில் பிண மாக கிடந்தார். இதுகுறித்து செல்வம் திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயலட்சுமி உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜய லட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சாவில் சந்தேகம்
இதனிடையே பிரேத பரிசோ தனைக்கு பிறகு விஜயலட்சுமி உடல் மறு நாள் உறவினர்களி டம் ஒப்ப டைக்கப்பட்டது. அப்போது விஜயலட்சுமி யின் முகத்தில் காயங்கள் இருந்ததாக கூறப்ப டுகிறது. இதனால் அவரது உறவி னர்கள் விஜயலட்சுமி யின் சாவில் சந்தேகம் இருப்ப தாக போலீசாரிடம் தெரி வித்தனர். இதை தொடர்ந்து திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமய வர்மன், டவுன் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீ சார் நேரில் சென்று விஜய லட்சுமியின் குடும்பத்தாரி டம் விசாரணை நடத்தினர்.
கிடுக்கிப்படி விசாரணை
அப்போது விஜயலட்சுமி யின் கணவர் செல்வத்திடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் செல்வத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதன் விவரம் வருமாறு:-கடந்த 18 வருடங்களுக்கு முன்பு செல்வம் தனியார் மினி பஸ்சில் டிரைவராக பணி யாற்றி உள்ளார். அப்போது விஜயலட்சுமி ஒரு கடையில் ஊழியராக வேலை செய்துள்ளார். வேலைக்கு செல்வதற்காக மினிபஸ்சில் தினமும் வந்து சென்றபோது, செல்வத் திற்கும் விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
24 வயது வித்தியாசம்
இதையடுத்து வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்க ளுக்குள் 24 வயது வித்தி யாசம் உள்ளது. முதலில் இரு வரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். பின்னர் வயது வித்தி யாசம் காரண மாக இருவ ருக்குள்ளும் பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் செல்வம் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இத னால் தினமும் குடித்துவிட்டு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று மாலையும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் விஜயலட்சுமியை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை நாடகம்
இதையடுத்து விஜய லட்சுமி உடலை மின்விசிறி யில் தூக்கில் மாட்ட முயற்சி செய்துள்ளார்.ஆனால் முடியா ததால், துப்பட்டா கழுத்தில் சுற்றப்பட்ட நிலையில் விஜய லட்சுமி உடலை வைத்துக் கொண்டு உறவினர்க ளிடம் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி கதறி அழுது நாடகமாடி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதை யடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் மனை வியை கொலை செய்த ஆட்டோ டிரைவர் செல்வத்தை கைது செய்தனர்.
அவரது வாக்கு மூலத்தில் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொ ண்டார். இதை யடுத்து போலீ சார் அவரை திருச்செங்கோ டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- தங்கவேல் (88). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மாலை வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார்.
- இறப்பதற்கு முன்பு தனது முழு உடலை சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி உடற்கூறு பிரிவிற்கு மருத்துவமாணவர்களின் பயிற்சி மற்றும் ஆய்விற்கு அளிப்பதாக உறுதிமொழி பத்திரத்திரத்தை கடந்த 2010-ம் ஆண்டு வழங்கி இருந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் தங்கவேல் (88). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மாலை வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார்.
அவர் இறப்பதற்கு முன்பு
தனது முழு உடலை சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி உடற்கூறு பிரிவிற்கு மருத்துவமாணவர்களின் பயிற்சி மற்றும் ஆய்விற்கு அளிப்பதாக உறுதிமொழி பத்திரத்திரத்தை கடந்த 2010-ம் ஆண்டு வழங்கி இருந்தார்.
உடல் ஒப்படைப்பு
அவரது விருப்பத்தை நிறை வேற்றும் வகையில் அவரது மனைவி அகி லாண்டேஸ்வரி மற்றும் மகன் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரி யராக பணியாற்றி வரும் சித்தார்த்தன் ஆகியோரின் ஒப்புதலுடன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ மாணவர்கள் பயன் பெறும் வகையில் இறந்த ஆசிரியர் தங்கவேலின் உடல் தானமாக வழங்கப்பட்டது.
இது குறித்து நாமக்கல் மருத்துவக் கல்லூரி சார்பில் ஆசிரியர் சித்தார்த்தனுக்கு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கல்விக்காக தங்களது தந்தையின் உடலை தானமாக வழங்க முன் வந்த உயரிய நோக்கத்திற்கு மருத்துவக்கல்லூரி சார்பில்
நன்றியை தெரிவித்துக் கொள்வ தாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இறந்த பிறகும் தனது உடலை
மருத்துவக்கல்லூரி மாண வர்களின் கல்விக்காக வழங்கிய ஆசிரியர் தங்க வேலின் குடும்பத்திற்கு சமூக ஆர்வலர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- சூளையில் வேலை செய்து கொண்டிருந்த கோபால் என்பவர் மீது புகை கூண்டு விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்தார்.
- பாப்பம்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் சுமார் 8-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் பகுதியில் மோகன் என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுவுடன் மழை பெய்தது.
இந்த சூறாவளி காற்றில் செங்கல் சூளையின் புகை கூண்டு திடீரென உடைந்து விழுந்தது. அப்போது சூளையில் வேலை செய்து கொண்டிருந்த கோபால் (55) என்பவர் மீது புகை கூண்டு விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்தார்.
ஆபத்தான நிலையில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
மேலும் பாப்பம்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் சுமார் 8-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது.
- இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்தது. தற்போது கடைகளில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சிறிது நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி சரக்கு ஆட்டோக்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது .இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன்,அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர்,பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயம், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில் , ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில் , மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கூடச்சேரியில் உள்ள குவாரியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கூடச்சேரியில் உள்ள குவாரியில் கலெக்டர் டாக்டர். உமா ஆய்வு மேற்கொண்டார்.
புன்செய் இடையார் மேல்முகம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிட ஏதுவாக வரன்முறைபடுத்தும் பணிகள் மற்றும் பரமத்தி தாசில்தார் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், இணைய வழி பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் தற்போதைய நிலவரம், முன்னேற்றம் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து தாசில்தார் பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மகப்பேறு சிகிச்சை, குழந்தைகள் நலப் பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம், மருத்துவ உபகரணங்கள், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை கர்ப்பிணித் தாய்மார்களின் பரிசோதனைகள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்ட விபரங்களை பார்வையிட்டு, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக நாமக்கல் தாலுகா, கோனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மெய் நிகர் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்கள் வருகை உள்ளிட்ட விபரங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
நிகச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி, துறைச்சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர்.
- பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர். அதன் பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.
பாதிப்பு
இதனால் திண்டமங்கலம் ஊராட்சியில் அப்பிநாயக்கன்பாளையம், நல்லகவுண்டம்நாளையம், திண்டமங்கலம், வடக்குபட்டி மற்றும் திண்டமங்கலம் புதூர் ஆகிய 5 கிராமங்களில் அடிப்படை வசதிகளான தெரு அமைப்பது, திண்டமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி செய்து தராமல் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்க ப்பட்டுள்ளன. இதே போல ஊராட்சியில் உள்ளார். 5 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாதசூழ்நிலை உள்ளது.
மனு
திண்டமங்கலம் ஊராட்சியில் மக்கள் தொகையை குறைத்து காட்டி உள்ளதால் 15- வது நிதிக்குழு மானியத்தில் நிதி ஒதுக்கப்படாததால் ஊராட்சியில் குடிநீர், சாலை, தெரு அமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் உள்ளதாகவும் , இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக திண்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமசாமி தெரிவித்தார்.
- கடந்த 40 வருடங்களாக தொடரும் இருந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பழனியாண்டவர் கோவில் தோட்டத்திலிருந்து கூட்டப்பள்ளி வரை மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வந்தது.
- சட்டையம் புதூர், சூரியம்பாளையம் பகுதி பொதுமக்கள் சுமார் 200 பேர் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியின் பழனி ஆண்டவர் கோவில் தோட்டம், சீதாராம் பாளையம், சக்திவேல் நகர், தொண்டிக்கரடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் சாக்கடைகளில் தேங்கி நிற்கிறது.
மழைநீர் வடிகால்
கடந்த 40 வருடங்களாக தொடரும் இருந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பழனியாண்டவர் கோவில் தோட்டத்திலிருந்து கூட்டப்பள்ளி வரை மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் அந்த தண்ணீர் சூரியம்பாளையம் ஏரியில் கலக்காமலும், 17-வது மற்றும் 18-வது வார்டு பகுதிகளான சூரியம்பாளையம், சட்டையம்புதூர் பகுதிகளில் நிலத்தடி நீரை மாசுபடுத்தாமல் கொண்டு செல்லப்படுகிறதா? என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு இருந்தது.
மனு
இதனால் அந்த கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுவிடம் சட்டையம் புதூர், சூரியம்பாளையம் பகுதி பொதுமக்கள் சுமார் 200 பேர் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
இதேபோல் தங்களது பகுதியில் தண்ணீர் தேங்காமலும் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமலும் மழை நீர் வடிகால் அமைத்துத் தர கோரி 1, 7, 8, 9 மற்றும் 10-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுவை நகர் மன்ற அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆலோசனை கூட்டம்
இதையடுத்து பல ஆண்டுகளாக தீராமல் இருந்துவரும் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் பொதுமக்கள் சார்பிலும் அதிகாரிகள் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எந்த வழியாக தண்ணீரைக் கொண்டு செல்வது, மழைநீர் ஏரியில் தேங்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து விரைவில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தெரிவித்தார்.
இதை ஏற்ற பொதுமக்கள் நகர் மன்ற தலைவரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
முன்னதாக பணிகள் நடக்கும் இடத்தை நகராட்சி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், ரவிக்குமார், ராஜவேல் தினேஷ்குமார், அண்ணாமலை, சிநேகாஹரிகரன், அடுப்பு ரமேஷ் உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்தனர்.
- நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது.
- அரியாக்கவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.
நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் அரியாக்கவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர். அதேபோல் ஒடுவன்குறிச்சி, ஈரோடு, சேலம்,ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மஞ்சளை ஏலம் எடுப்பதற்காக வந்திருந்தனர். இதில் விரலி ரகம் 550 மூட்டைகளும், உருண்டை ரகம் 250 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன. விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 42 முதல் அதிகப்பட்சமாக ரூ.17 ஆயிரத்து 899-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 512-க்கும், அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 602-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 602-க்கும், அதிகப்பட்சமாக ரூ.17 ஆயிரத்து 12-க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 820 மஞ்சள் மூட்டைகள் ரூ. 70 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரத்தை விட நேற்று நடந்த மஞ்சள் ஏலத்தில் அதிக விலைக்கு மஞ்சள் விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் 13 ஏக்கரில் ரூ 20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறியதா வது: நாமக்கல் புதிய பஸ் நிலையம் தரமான முறையில் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பஸ் நிலைய பணிகள் முடிய காலம் உள்ள நிலையில் அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் பணிகள் முடிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், பொறியாளர் சண்முகம் உடனிருந்தனர்.






