என் மலர்
நாமக்கல்
- பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கூடச்சேரியில் உள்ள குவாரியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே கூடச்சேரியில் உள்ள குவாரியில் கலெக்டர் டாக்டர். உமா ஆய்வு மேற்கொண்டார்.
புன்செய் இடையார் மேல்முகம் பகுதியில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு இணைய வழி பட்டா வழங்கிட ஏதுவாக வரன்முறைபடுத்தும் பணிகள் மற்றும் பரமத்தி தாசில்தார் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், இணைய வழி பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் தற்போதைய நிலவரம், முன்னேற்றம் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து தாசில்தார் பரமத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மகப்பேறு சிகிச்சை, குழந்தைகள் நலப் பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம், மருத்துவ உபகரணங்கள், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை கர்ப்பிணித் தாய்மார்களின் பரிசோதனைகள் குறித்த பதிவேடுகள் உள்ளிட்ட விபரங்களை பார்வையிட்டு, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக நாமக்கல் தாலுகா, கோனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மெய் நிகர் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்கள் வருகை உள்ளிட்ட விபரங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
நிகச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச்செல்வி, துறைச்சார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர்.
- பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் திண்டமங்கலம் ஊராட்சியில் 2020 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 1729 பேர் இருந்தனர். அதன் பின் 10 ஆண்டுகளுக்கு பின் 2011-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் போது 300 பேரை குறைத்து 1315 பேர் மக்கள்தொகை உள்ளதாக காட்டி உள்ளனர்.
பாதிப்பு
இதனால் திண்டமங்கலம் ஊராட்சியில் அப்பிநாயக்கன்பாளையம், நல்லகவுண்டம்நாளையம், திண்டமங்கலம், வடக்குபட்டி மற்றும் திண்டமங்கலம் புதூர் ஆகிய 5 கிராமங்களில் அடிப்படை வசதிகளான தெரு அமைப்பது, திண்டமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி செய்து தராமல் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்க ப்பட்டுள்ளன. இதே போல ஊராட்சியில் உள்ளார். 5 அரசு பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாதசூழ்நிலை உள்ளது.
மனு
திண்டமங்கலம் ஊராட்சியில் மக்கள் தொகையை குறைத்து காட்டி உள்ளதால் 15- வது நிதிக்குழு மானியத்தில் நிதி ஒதுக்கப்படாததால் ஊராட்சியில் குடிநீர், சாலை, தெரு அமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் உள்ளதாகவும் , இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக திண்டமங்கலம் ஊராட்சி தலைவர் ராமசாமி தெரிவித்தார்.
- கடந்த 40 வருடங்களாக தொடரும் இருந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பழனியாண்டவர் கோவில் தோட்டத்திலிருந்து கூட்டப்பள்ளி வரை மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வந்தது.
- சட்டையம் புதூர், சூரியம்பாளையம் பகுதி பொதுமக்கள் சுமார் 200 பேர் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியின் பழனி ஆண்டவர் கோவில் தோட்டம், சீதாராம் பாளையம், சக்திவேல் நகர், தொண்டிக்கரடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் சாக்கடைகளில் தேங்கி நிற்கிறது.
மழைநீர் வடிகால்
கடந்த 40 வருடங்களாக தொடரும் இருந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பழனியாண்டவர் கோவில் தோட்டத்திலிருந்து கூட்டப்பள்ளி வரை மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் அந்த தண்ணீர் சூரியம்பாளையம் ஏரியில் கலக்காமலும், 17-வது மற்றும் 18-வது வார்டு பகுதிகளான சூரியம்பாளையம், சட்டையம்புதூர் பகுதிகளில் நிலத்தடி நீரை மாசுபடுத்தாமல் கொண்டு செல்லப்படுகிறதா? என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு இருந்தது.
மனு
இதனால் அந்த கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுவிடம் சட்டையம் புதூர், சூரியம்பாளையம் பகுதி பொதுமக்கள் சுமார் 200 பேர் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
இதேபோல் தங்களது பகுதியில் தண்ணீர் தேங்காமலும் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமலும் மழை நீர் வடிகால் அமைத்துத் தர கோரி 1, 7, 8, 9 மற்றும் 10-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபுவை நகர் மன்ற அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆலோசனை கூட்டம்
இதையடுத்து பல ஆண்டுகளாக தீராமல் இருந்துவரும் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் பொதுமக்கள் சார்பிலும் அதிகாரிகள் தரப்பிலும் குழு அமைக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எந்த வழியாக தண்ணீரைக் கொண்டு செல்வது, மழைநீர் ஏரியில் தேங்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து விரைவில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தெரிவித்தார்.
இதை ஏற்ற பொதுமக்கள் நகர் மன்ற தலைவரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
முன்னதாக பணிகள் நடக்கும் இடத்தை நகராட்சி பொறியாளர் சரவணன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், ரவிக்குமார், ராஜவேல் தினேஷ்குமார், அண்ணாமலை, சிநேகாஹரிகரன், அடுப்பு ரமேஷ் உள்ளிட்ட பலரும் ஆய்வு செய்தனர்.
- நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது.
- அரியாக்கவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.
நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் அரியாக்கவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர். அதேபோல் ஒடுவன்குறிச்சி, ஈரோடு, சேலம்,ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மஞ்சளை ஏலம் எடுப்பதற்காக வந்திருந்தனர். இதில் விரலி ரகம் 550 மூட்டைகளும், உருண்டை ரகம் 250 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன. விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 42 முதல் அதிகப்பட்சமாக ரூ.17 ஆயிரத்து 899-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 512-க்கும், அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 602-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 602-க்கும், அதிகப்பட்சமாக ரூ.17 ஆயிரத்து 12-க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 820 மஞ்சள் மூட்டைகள் ரூ. 70 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரத்தை விட நேற்று நடந்த மஞ்சள் ஏலத்தில் அதிக விலைக்கு மஞ்சள் விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் 13 ஏக்கரில் ரூ 20 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் பூங்கொடி அருமைக்கண் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிறுத்துமிடம், புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை மற்றும் கட்டிட பணிகளை ஆய்வு செய்தவர்தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறியதா வது: நாமக்கல் புதிய பஸ் நிலையம் தரமான முறையில் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பஸ் நிலைய பணிகள் முடிய காலம் உள்ள நிலையில் அடுத்த மாதம் செப்டம்பர் மாதம் பணிகள் முடிய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் சென்னுகிருஷ்ணன், பொறியாளர் சண்முகம் உடனிருந்தனர்.
- 2 சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள், குளங்கள் மாசடையும்.
- கிராம சபைக்கூட்டத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்:
குமாரபாளையம் தாலுகாவை சேர்ந்த கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா எலந்தகுட்டை, பல்லக்காபாளையம், சவுதாபுரம் ஆகிய பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் அரசு பள்ளி உள்ளன. இந்த பகுதியில் 2 சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள், குளங்கள் மாசடையும்.
எலந்தக்கொட்டை, பல்லக்காபாளையம், சவுதாபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித் துள்ளனர்.
- இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
- வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாமக்கல்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா மொரட்டுபாளையம் அடுaத்த தொட்டியவளவு பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் கலைச்செல்வன்(28). ஊத்துக்குளி சிவசக்தி நகரை சேர்ந்த சீனிவாசன் மகள் தனலட்சுமி (24).காதலர்களான இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், பாதுகாப்பு கேட்டு நாமக்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து இருவீட்டாரும் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பா ளையத்தை சேர்ந்தவர் தங்கராசு (55). ரிக் வண்டி டிரைவர். இவர் சில வருடங்களா கவே உடல் நிலை பாதிக்கப் பட்டு பல்வேறு மருத்துவ மனைகளுக்கு சென்று தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி னார். பல்வேறு மருத்துவ மனை யில் சென்று சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியா காததால் விரக்தியில் இருந்த தங்கராசு நேற்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு உயிருக்கு போராடினார்.
அதைப் பார்த்த அவரது மனைவி பிரியா(48), கண வரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள் ளார். அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரியா ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்திவேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகு திகளைச் சேர்ந்த விவசாயி கள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய்
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 50.06 குவிண்டால் எடை கொண்ட 13 ஆயிரத்து 407 தேங்காய் விற்பனைக்கு வந்தது.
இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலை யாக ரூ.23.90-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.17.65-க் கும், சராசரி விலையாக ரூ.22.55-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 263-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 518.04 குவிண்டால் எடை கொண்ட 1069 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.77.60-க்கும், சராசரி விலையாக ரூ.78.55-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.55-க்கும், சராசரி விலையாக ரூ.75. 75-க்கும் என மொத்தம் ரூ.39 லட்சத்து 3 ஆயிரத்து 429-க்கு விற்பனையானது.
இதன்படி சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.40 லட்சத்து 14 ஆயிரத்து 692-க்கு விற்பனையானது.
- 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
- கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் டாக்டர் உமா பேசியதாவது:-
கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையும் நெச வாளர் முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்க ளுக்கு முத்ரா கடன் உதவி களும் வழங்கப்படுகிறது. இதுபோன்று நெசவா ளர்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வரு கிறது. நெசவாளர்கள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து சிறப்பாக நெசவுத் தொழில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவா ளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துண்டுகள், வேட்டி கள், காட்டன் சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள், ஜமுக்காளம் இடம்பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் கைத்தறி உதவி இயக்குனர் பழனி குமார், தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ஜெயலட்சுமி, கைத்தறித்துறை அலுவ லர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ராசிபுரம் நகராட்சி வேலா பூங்கா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தவறிய தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமினையும் கலெக்டர் உமா பார்வையிட்டார்.
- தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
- நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கொலை செய்த அவரது கணவர் கோவிந்தனை கைது செய்தனர்.
ராசிபுரம்:
சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 39). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராதா (33). வீட்டு வேலைக்கு சென்று வந்தார்.
இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா (11) என்ற 1 மகளும், கோகுல் (7) என்ற 1 மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் ராதா குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த 3 மாதங்களாக நாமகிரிபேட்டை அருகே உள்ள ஈச்சப்பாறையில் மாமனார் ரமனா (63) குடும்பத்தினருடன் கோவிந்தன், அவரது மனைவி ராதா, குழந்தைளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கோவிந்தனுக்கு மனைவி ராதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11 மணியளவில் குடிபோதையில் இருந்த கோவிந்தன், குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி ராதாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டு சரமாரியாக தாக்கினார்.
இதை கண்ட குழந்தைகள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராதாவை நாமகிரிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்தனர். அப்போது ராதாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு ராதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது பற்றி நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கொலை செய்த அவரது கணவர் கோவிந்தனை கைது செய்தனர்.
தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- பணம் வைத்து சூதாடுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது. அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மணியனூர் பகுதிகளைச் சேர்ந்த சண்முகம் (33), ரங்கநாதன் (35), சக்திவேல் (42), கோபிநாத் (34), லோகநாதன் (44), சந்திரன்( 45) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ஆயிரத்து 200 ரூபாைய பறிமுதல் செய்தனர்.






