என் மலர்
நாமக்கல்
- அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.
- வெற்றிலைவரத்து குறைந்ததால் விலை உயர்ந்தும், மற்ற வெற்றிலை கள் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:பரமத்தி வேலூரில்
வெள்ளக்கொடி வெற்றிலை விலை உயர்வு
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்த னூர்,பரமத்தி வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.
வெற்றிலை விவசாயம்
வெற்றிலைகள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து நூறு வெற்றிலை கொண்ட ஒரு கவுலியாகவும் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூர்-கரூர் செல்லும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள தினசரி வெற்றிலை ஏல மார்க்கெட்டற்க்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
வெற்றிலை சுமைகளை வாங்கி செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்திருந்து தங்க ளுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்கின்றனர். வாங்கிய வெற்றிலை சுமைகளை கர்நாடகா, கேரளா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
விலை உயர்வு
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்ப யிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ1,700-க்கும் ஏலம் போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.5ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.1,50 0-க்கும் ஏலம் போனது. வெள்ளைக் கொடி இளம்
பயிர் வெற்றிலைவரத்து குறைந்ததால் விலை உயர்ந்தும், மற்ற வெற்றிலை கள் வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பேளூர் கரடிப்பட்டி கிராமங்கள். அரு கருகே அமைந்துள்ள இந்த இரு கிராமங்களிலும் ஏறக்கு றைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏறக்குறைய, 1 கி.மீ தொலைவுள்ள செல்லியம்மன் கோவில் தார்சாலை வழியாக பேளூர் ஏத்தாப்பூர் சாலையை அடைகின்றனர்.
வாழப்பாடி:
பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி கிராமங்கள். அரு கருகே அமைந்துள்ள இந்த இரு கிராமங்களிலும் ஏறக்கு றைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏறக்குறைய, 1 கி.மீ தொலைவுள்ள செல்லியம்மன் கோவில் தார்சாலை வழியாக பேளூர் ஏத்தாப்பூர் சாலையை அடைகின்றனர்.
இதுமட்டுமின்றி, படையாச்சி யூர், கல்யாண கிரி, கல்லே ரிப்பட்டி கிரா மங்களைச் சேர்ந்த மக்கள் இச்சாலை வழியா கவே, வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சி பகுதிகளுக்கு பயணித்து வருகின்றனர்.
சாலை பழுது
5 கிராமங்களையும், வாழப் பாடி, ஏத்தாப்பூர் மற்றும் பேளூர் பேரூராட்சி கள் மட்டுமின்றி, கல்வ ராயன்மலை, அருநுாற்று மலை சாலைகளோடு இணைக்கும் பிரதான சாலையாக இருந்து வரும் கொட்டவாடி செல்லி யம்மன் கோவில் சாலை, பல ஆண்டுகளாக பரா மரிப்பின்றி குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது
இந்த சாலையில் பய ணிக்க முடியாமல் 5 கிராம மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பழுதடைந்து கிடக்கும் கொட்டவாடி செல்லி யம்மன் கோவில் தார்சாலையை புதுப்பிக்க பெத்தநாயக்கன்பா ளையம் ஊராட்சி ஒன்றிய அதி காரிகள் மற்றும் மக்கள் பிரதி நிதிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேளூர் சாணார்பாளையம் பகுதியில் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்றார்.
- அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மல்லிகா தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி.கூலித் தொழிலாளி.இவரது மனைவி மல்லிகா(54). இவர் சேளூர் சாணார்பாளையம் பகுதியில் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மல்லிகா தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். அதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மல்லிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து மல்லிகா மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சேளூர் சாணார்பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் (65) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நடந்து மட்டுமே செல்ல முடியும்
- கோவிலில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமிராக்களும் அடித்து உடைக்கப்பட்டு கிடந்தது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே அரியூர் பஞ்சாயத்தில் மாசி பெரியண்ணன் கோவில் உள்ளது.
மலை உச்சி
மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு நடந்து மட்டுமே செல்ல முடியும். முக்கிய நாட்களில் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் இங்கு ஆடு, கோழி பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்வர். இந்த நிலையில் நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
வழக்கம்போல் கோவி லுக்கு வந்த பூசாரி மற்றும் தர்மகர்த்தா ஆகியோர் பூட்டு உடைக்கப்பட்டு இருப் பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சி.சி.டி.வி கேமரா
உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமிராக்களும் அடித்து உடைக்கப்பட்டு கிடந்தது.
மேலும் கருவறை பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியலும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இந்த கோவில் அருகே அலுவலக அறை உள்ளது. இதன் பூட்டையும் உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சி பதிவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க், டிவி உள்ளிட்டவற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் உண்டியலில் ரூ.20 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
- விண்ணப்ப கட்டணம் ரூ.50. நேரடி சேர்க்கைக்கு வருகைபுரியும் விண்ணப்ப தார்கள் உரிய 8, 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்
- பிரதி மாதம் ரூ.750-க்கான கல்வி உதவித்தொகை
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் டாக்டர். உமா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:-
2023 - 2024 ஆம் ஆண்டிற்கான அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்நே ரடி மாணவர் சேர்க்கை வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்புவோர் கல்விசான்று, ஜாதி சான்று, மாற்று சான்று, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வருகை புரிந்து விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தியடைந்தவருக்கும், அதிகபட்சம் ஆண்களுக்கு 40 வயது வரை விண்ணப்பிக்க லாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.
விண்ணப்ப கட்டணம் ரூ.50. நேரடி சேர்க்கைக்கு வருகைபுரியும் விண்ணப்ப தார்கள் உரிய 8, 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2021 ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் 9-ம் வகுப்பு அசல் சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி காலத்தின் பொழுது பின்வரும் தமிழ்நாடு அரசின் சலுகைகள் பெற தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.
பிரதி மாதம் ரூ.750-க்கான கல்வி உதவித்தொகை.
விலையில்லா சீருடை, விலையில்லா பாடபுத்தகம் மற்றும் வரை படக்கருவிகள், விலையில்லா காலணி – 1 ஜோடி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, கட்டணமில்லா அரசு போக்குவரத்து வசதி
மேலும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் உள்ளூர் தொழிற்நிறுவனங்க ளில் உதவித்தொகையுடன் கூடிய குறுகிய கால பயிற்சி
வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் வெற்றி கரமாக பயிற்சி முடித்த வர்களுக்கு முன்னணி தொழிற்நிறுவ னங்களில் ஓர் ஆண்டிற்கு ஒப்பந்த முறையில் தொழிற்பழகுந ராக பயில வாய்ப்புள்ளது.
மேலும் விவரங்களுக்கு நாமக்கல் / கொல்லி மலையில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலை யத்திற்கு வருகை புரிந்து அல்லது 04286-299597, 04286 - 290297, 7904111101 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- விதைச்சான்று அலுவலர்கள் மூலம் வயலாய்வு செய்யப்பட்டு வயல் தரங்கள் உறுதி
- விதை சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படுகின்றன.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் சான்றளிப்பு செய்யப்பட்ட நிலக்கடலை மற்றும் உளுந்து ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
வயல் ஆய்வு
தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை மூலமாக விதைச்சான்ற ளிப்பில் பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணையில் விதைச்சான்று அலுவலர்கள் மூலம் வயலாய்வு செய்யப்பட்டு வயல் தரங்கள் உறுதி செய்யப்படுகின்றன.
வயல்தரங்களில் தேறிய விதைப்பண்ணைகளில் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள் முறை யாக கடைப்பிடிக்கப்பட்டு அந்த வயல்மட்ட விதைகளை அரசு அங்கீகரிக்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படுகின்றன.
சான்று
பகுப்பாய்வில் விதைத்தரம் தேறிய விதை கள் சான்று செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப் படுகின்றன.
சான்று பெற்ற விதைகளில் ஆதாரநிலை விதைகளுக்கு வெள்ளை நிறச்சான்றட்டையும் சான்று விதைகளுக்கு நீல நிற அட்டையும் பொருத்தப் படுகிறது.
மேலும் சான்று பெற்ற விதைகளில் வெள்ளை நிற அல்லது நீல நிற அட்டையுடன் ஒரு பச்சைநிற உற்பத்தியாளர் அட்டையும் கட்டப்பட்டிருக்கும். இதைக் கொண்டு சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் எளிதாகக் கண்டறியலாம்.
சான்று பெற்ற விதைகள் அதிக புறத்தூய்மை, அதிக இனத்தூய்மை, அதிக முளைப்புத்திறன், அளவான ஈரப்பதம் போன்ற குணநலன்களை கொண்டிருக்கும்.
எனவே, விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை வாங்கி பயிரிட்டு அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம் என விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
- பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூ மார்க்கெட்டிற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.
- பூக்களை ஏலம் எடுத்துச் செல்வதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா
பகுதியில் உள்ள தண்ணீர் பந்தல், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், செல்லப்பம்பாளையம், சானார்பாளையம், நகப்பாளையம், பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
பூக்கள் பூக்கும் தருவாயில் வந்த போது கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து லேசான கோணி பைகளில் போட்டு உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூ ரில் செயல்பட்டு வரும் 2 பூ மார்க்கெட்டிற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர் . பூக்களை ஏலம் எடுத்துச் செல்வதற்காக மாவட்டத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்திருந்து பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர்.
வாங்கிய உதிரிப் பூக்களை பல்வேறு ரகமான மாலை களாகவும் ,தோரணங்களா கவும் கட்டி விற்பனை செய்கின்றனர். சில வியா பாரிகள் உதறிப் பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு சென்று பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகி றது. தற்போது பூக்களின் விளைச்சல் அதிகரித்துள் ளது. அதனால் பரமத்தி வேலூர் பூ ஏல மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகமானது.
நேற்று நடத்த ஏலத்தில், கடந்த வாரம் 600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டுமல்லி 300 ரூபாய்க்கும், கடந்த வாரம் 280 ரூபாய்க்கு விற்பனை யான சம்பங்கி 120 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி 80 ரூபாய்க்கும் விற்பனையானது.
அதேபோல் ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 100 ரூபாய்க்கும், 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 260 ரூபாய்க்கும் விற்பனை யானது.
இது குறித்து விவசாயிகள் கூறியதா வது:- கடந்த வாரம் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்தது. பண்டிகை முடிந்ததால் பூக்களின் விலை குறைந்தது. மேலும் இப்போது வெயில் சுட்டெ ரிப்பதால், பூக்களின் விளைச்சல் அதி கரித்துள்ளது.
வெயில் அதிகமாக அடிக்கும்போ து, பூக்களின் விளைச்சல் அதிகரிக்கும். அதனால், தற்போது பூக்களின் வர த்து அதிகமாகியுள்ளது. தற்பொழுது ஆடி மாதம் என்பதால் திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் இல்லாமல் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வரும் ஆவணி மாதம் சுப முகூர்த்த நாட்களில், பூக்களின் விலை அதி கரிக்கும் என எதிர்க்கப் படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- விஜயலட்சுமி வீட்டில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கிய நிலையில் பிண மாக கிடந்தார்.
- இதுகுறித்து செல்வம் திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பண்ணக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (57). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (33). இவர்களுக்கு 17 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர்.
பிணமாக கிடந்தார்
கடந்த 7-ந் தேதி மாலை விஜயலட்சுமி வீட்டில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கிய நிலையில் பிண மாக கிடந்தார். இதுகுறித்து செல்வம் திருச்செங்கோடு டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயலட்சுமி உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஜய லட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சாவில் சந்தேகம்
இதனிடையே பிரேத பரிசோ தனைக்கு பிறகு விஜயலட்சுமி உடல் மறு நாள் உறவினர்களி டம் ஒப்ப டைக்கப்பட்டது. அப்போது விஜயலட்சுமி யின் முகத்தில் காயங்கள் இருந்ததாக கூறப்ப டுகிறது. இதனால் அவரது உறவி னர்கள் விஜயலட்சுமி யின் சாவில் சந்தேகம் இருப்ப தாக போலீசாரிடம் தெரி வித்தனர். இதை தொடர்ந்து திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு இமய வர்மன், டவுன் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீ சார் நேரில் சென்று விஜய லட்சுமியின் குடும்பத்தாரி டம் விசாரணை நடத்தினர்.
கிடுக்கிப்படி விசாரணை
அப்போது விஜயலட்சுமி யின் கணவர் செல்வத்திடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் செல்வத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதன் விவரம் வருமாறு:-கடந்த 18 வருடங்களுக்கு முன்பு செல்வம் தனியார் மினி பஸ்சில் டிரைவராக பணி யாற்றி உள்ளார். அப்போது விஜயலட்சுமி ஒரு கடையில் ஊழியராக வேலை செய்துள்ளார். வேலைக்கு செல்வதற்காக மினிபஸ்சில் தினமும் வந்து சென்றபோது, செல்வத் திற்கும் விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
24 வயது வித்தியாசம்
இதையடுத்து வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்க ளுக்குள் 24 வயது வித்தி யாசம் உள்ளது. முதலில் இரு வரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர். பின்னர் வயது வித்தி யாசம் காரண மாக இருவ ருக்குள்ளும் பிரச்சனைகள் ஏற்பட்டது. மேலும் செல்வம் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இத னால் தினமும் குடித்துவிட்டு வந்து விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று மாலையும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வம் விஜயலட்சுமியை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை நாடகம்
இதையடுத்து விஜய லட்சுமி உடலை மின்விசிறி யில் தூக்கில் மாட்ட முயற்சி செய்துள்ளார்.ஆனால் முடியா ததால், துப்பட்டா கழுத்தில் சுற்றப்பட்ட நிலையில் விஜய லட்சுமி உடலை வைத்துக் கொண்டு உறவினர்க ளிடம் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி கதறி அழுது நாடகமாடி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதை யடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் மனை வியை கொலை செய்த ஆட்டோ டிரைவர் செல்வத்தை கைது செய்தனர்.
அவரது வாக்கு மூலத்தில் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொ ண்டார். இதை யடுத்து போலீ சார் அவரை திருச்செங்கோ டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- தங்கவேல் (88). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மாலை வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார்.
- இறப்பதற்கு முன்பு தனது முழு உடலை சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி உடற்கூறு பிரிவிற்கு மருத்துவமாணவர்களின் பயிற்சி மற்றும் ஆய்விற்கு அளிப்பதாக உறுதிமொழி பத்திரத்திரத்தை கடந்த 2010-ம் ஆண்டு வழங்கி இருந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் தங்கவேல் (88). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் மாலை வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார்.
அவர் இறப்பதற்கு முன்பு
தனது முழு உடலை சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி உடற்கூறு பிரிவிற்கு மருத்துவமாணவர்களின் பயிற்சி மற்றும் ஆய்விற்கு அளிப்பதாக உறுதிமொழி பத்திரத்திரத்தை கடந்த 2010-ம் ஆண்டு வழங்கி இருந்தார்.
உடல் ஒப்படைப்பு
அவரது விருப்பத்தை நிறை வேற்றும் வகையில் அவரது மனைவி அகி லாண்டேஸ்வரி மற்றும் மகன் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரி யராக பணியாற்றி வரும் சித்தார்த்தன் ஆகியோரின் ஒப்புதலுடன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ மாணவர்கள் பயன் பெறும் வகையில் இறந்த ஆசிரியர் தங்கவேலின் உடல் தானமாக வழங்கப்பட்டது.
இது குறித்து நாமக்கல் மருத்துவக் கல்லூரி சார்பில் ஆசிரியர் சித்தார்த்தனுக்கு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் கல்விக்காக தங்களது தந்தையின் உடலை தானமாக வழங்க முன் வந்த உயரிய நோக்கத்திற்கு மருத்துவக்கல்லூரி சார்பில்
நன்றியை தெரிவித்துக் கொள்வ தாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இறந்த பிறகும் தனது உடலை
மருத்துவக்கல்லூரி மாண வர்களின் கல்விக்காக வழங்கிய ஆசிரியர் தங்க வேலின் குடும்பத்திற்கு சமூக ஆர்வலர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- சூளையில் வேலை செய்து கொண்டிருந்த கோபால் என்பவர் மீது புகை கூண்டு விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்தார்.
- பாப்பம்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் சுமார் 8-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் பகுதியில் மோகன் என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுவுடன் மழை பெய்தது.
இந்த சூறாவளி காற்றில் செங்கல் சூளையின் புகை கூண்டு திடீரென உடைந்து விழுந்தது. அப்போது சூளையில் வேலை செய்து கொண்டிருந்த கோபால் (55) என்பவர் மீது புகை கூண்டு விழுந்ததில், அவர் படுகாயம் அடைந்தார்.
ஆபத்தான நிலையில் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
மேலும் பாப்பம்பாளையம் பகுதியில் சூறாவளி காற்றில் சுமார் 8-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது.
- இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்தது. தற்போது கடைகளில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சிறிது நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி சரக்கு ஆட்டோக்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது .இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், மாசாணி அம்மன்,அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர்,பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயம், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில் , ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில் , மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






