கொல்லிமலை மாசிலா அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் உள்ளது. அரியூர்நாடு பஞ்சாயத்தில் உள்ள மாசிலா அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.
கொல்லிமலை மாசிலா அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
Published on

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 அடி உயரத்தில் உள்ளது. இங்கு அரப்பளீஸ்வரர் கோவில், எட்டிகை அம்மன் கோவில், மாசி பெரியண்ணன் சாமி கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, வாசலூர்பட்டி படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் உள்ளது. விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இந்த நிலையில் அரியூர்நாடு பஞ்சாயத்தில் உள்ள மாசிலா அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். அருவிக்கு செல்லும் பாதை மற்றும் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com