என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • காலை நேரங்களில் போன் செய்தால் மது பாட்டில்களை டோர் டெலிவரி செய்வதாக புகார் எழுந்தது.
    • இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் பரமத்தி வேலூர் அக்ரஹாரம் அருகே செட்டியார் தெருவில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்ய வந்த 2 பேரை கைது செய்தனர்.

     பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பகுதிகளில் காலை நேரங்களில் போன் செய்தால் மது பாட்டில்களை டோர் டெலிவரி செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் பரமத்தி வேலூர் அக்ரஹாரம் அருகே செட்டியார் தெருவில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்ய வந்த 2 பேரை கைது செய்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பரமத்திவேலூரை சேர்ந்த ராஜலிங்கம் ( 55), இவரது மகன் மணிகண்டன் (24 ) ஆகியோர் என்பது தெரிய வந்தது. போலீசார், 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 45 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • இந்நிலையில் தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர் பாண்டமங்கலம் வெங்கரை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பெருங்குறிச்சி, குப்பிக்கா பாளையம், சுள்ளிப்பா ளையம், சோளசிராமணி, சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், கபிலக்குறிச்சி, பெரிய சோளி பாளையம், ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், சின்ன சோளி பாளையம், குமாரசாமி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2.30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து விடிய விடிய சாரல் மழை பெய்தது.

    இந்நிலையில் தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொது மக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள், பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் வியா பாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.100-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது.

    இந்தநிலையில் கார்த்திகை தீபத்திருவிழா, கிருத்திகை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.2,000-க்கும், சம்பங்கி கிலோ ரூ.120-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.260-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1,200-க்கும், செவ்வந்திப்பூ கிலோ ரூ.150-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அனைத்தும் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.
    • பேனர் வைத்திருந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். மன்றம், ெஜயலிலதா பேரவை, மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்ப பிரிவு, மீனவரணி, நெசவாளர், இலக்கியம், அண்ணா தொழிற்சங்கம், வக்கீல் அணி உள்ளிட்ட அணிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணிகளுக்கு மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் நியமித்து கட்சியை பலப்படுத்தி வருகின்றனர். இவை அனைத்தும் கட்சி தலைமையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.

    சமீபத்தில் மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் மற்றும் எலச்சிப்பாளையம் ஒன்றிய செயலாளர் சக்திவேல் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அவரை வரவேற்று பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மோகனூர் ஒன்றியம் கீழ்பாலப்பட்டியை சேர்ந்த கோபிநாத் என்பவர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று புரட்சித் தமிழர் பேரவை சார்பில் என குறிப்பிட்டு பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.

    இதை கட்சி நிர்வாகிகள் பலர் பார்த்து விட்டு சென்றனர். கட்சி தலைமை இப்படி ஒரு பேரவையை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்குள் புரட்சித் தமிழர் பேரவை என பேனர் வைத்திருந்தது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எம்.ஜி.ஆர்-க்கு எம்.ஜி.ஆர் மன்றம், ஜெயலலிதாவுக்கு ஜெயலலிதா பேரவை என்பது போல் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பேரவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதா? என அக்கட்சியினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    • புதிய சாலையில் மீண்டும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என அதிகாரியிடம் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • கடந்த ஓராண்டுக்கு மேலாக பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் சென்று வருகிறது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் வழித்தடத்தில் விரிவுபடுத்தப்பட்ட புதிய சாலையில் மீண்டும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என அதிகாரியிடம் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து பள்ளிபாளையத்தை சேர்ந்த பஸ் உரிமையாளர் பி.எஸ்.கே. என்கிற கந்தசாமி கூறியதாவது:- பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியில் இருந்து பள்ளிபாளையம் பஸ் நிலையம் வரை மேம்பாலம், சாலை விரிவாக்கம் பணி நடந்து வந்ததால் கடந்த ஓராண்டுக்கு மேலாக பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் சென்று வருகிறது. தற்போது ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனி முதல் ஆர்.எஸ். பிரிவு வரை சாலை விரிவாக்கம் பணி முடிந்து விட்டது. பணிகள் முடிக்கப்பட்ட இந்த புதிய சாலையில் வாகனங்கள் சீராக சென்று வர முடியும். இதுபற்றி நகராட்சி தலைவர், அதிகாரியிடம் விரிவுபடுத்தப்பட்ட புதிய சாலையில் மீண்டும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அப்போது விரைவில் அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத கடைசி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென்று ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின் போது மாணவ, மாணவிகளிடம் வழங்கப்படும் மதிய உணவு, ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை பற்றி கேட்டறிந்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீரென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாணவ, மாணவிகளிடம் வழங்கப்படும் மதிய உணவு, ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை பற்றி கேட்டறிந்தார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்குத் தேவையான குறைகளையும் நிறைகளையும் கேட்டறிந்தார். அப்போது பள்ளியில் கழிப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்துள்ளதாகவும் அதற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரூராட்சி மூலமாக கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 அல்லது 3-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தகுதி வாய்ந்த பெண்களுக்கு நவீன லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • குடும்ப நலத்துறை மூலம் 12 பெண்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 அல்லது 3-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்ட தகுதி வாய்ந்த பெண்களுக்கு நவீன லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.

    குடும்ப நலத்துறை மூலம் 12 பெண்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த முகாமில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் ஜெயந்தி, செல்வாம்பிகை, மயக்கவியல் நிபுணர் செந்தில் ராஜா, செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.600 வீதம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அனைத்து பெண்களுக்கும் ஊக்கப் பரிசாக புடவை வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, குடும்ப நலம் துணை இயக்குனர் டாக்டர் வளர்மதி, ராசிபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி, மாவட்ட விரிவாக்க பணிகள் சனாஸ் ராஜன் மற்றும் வட்டார சுகாதார புள்ளியியலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் கோட்டையில் நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித் தாயார் கோவில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
    • இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டையில் நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித் தாயார் கோவில் எதிரில் ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    தினசரி ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலை அலங்காரம் நடைபெறும். நல்லெண்ணெய், சீயக்காய், மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.

    வெண்ணை காப்பு

    இந்த கோவிலில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் கட்டளைதாரர்கள் மூலம் சுவாமிக்கு வெண்ணைக் காப்பு அலங்காரம் நடைபெறும்.

    மொத்தம் 120 கிலோ வெண்ணை மூலம் சுவாமிக்கு அலங்காரம் செய்து வெண்ணை காப்பு உற்சவம் நடைபெறும். இவ்வாறு வழிபட்டால் சுவாமி உள்ளம் குளிர்ந்து பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம்.

    முன்பதிவு

    தற்போது கார்த்திகை மாதம் தொடங்கி உள்ளதால் ஆஞ்சநேயர் கோவிலில் வெண்ணைக் காப்பு அலங்காரத்திற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி வெண்ணைய் காப்பு அலங்காரத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    என கோவில் உதவி ஆணையர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

    • தாசில்தார் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியர்களுக்கு ஊர்தி ஓட்டுனர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயகுமார், துணை தலைவர் அய்யாவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தலைவர் பரமசிவம் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் கிராம ஊழியர்களுக்கு ஊர்தி ஓட்டுனர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    காலியாக உள்ள கிராம ஊழியர்கள் பணியிடத்தை தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும். குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல்லுக்கு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில் நாமக்கல் - திருச்செங்கோடு வழித்தடத்தில் பஸ்கள் திடீர் என ஆய்வு செய்யப்பட்டன.

    அப்போது திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல்லுக்கு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதும், பஸ் படியில் பயணிகளை பயணம் செய்ய அனுமதித்து இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக தனியார் பஸ்சின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பஸ் கண்டக்டரின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக பயணிகளை ஏற்றி சென்றாலும், படியில் நின்று பயணம் செய்வதற்கு பயணிகளை அனும தித்தாலும் கண்டக்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதுடன் பஸ்சின் பர்மிட் மீதும் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
    • கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரையில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.

    இந்த கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோவிலுக்கு சாதகமாக வரப்பெற்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்து சமய அறநிலைய துறையினர் மூலம் நீலகண்டேஸ்வரர் சாமி கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத் துறை தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) சுந்தர வள்ளி தலைமையில் ஒய்வு பெற்ற தாசில்தார் வரதராஜன், ஆய்வாளர் ஜனனி, வழக்கு ஆய்வாளர் கனகராஜ், செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அளவீடு செய்தனர். இதில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 8 1/2 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.

    ×