என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பரமத்திவேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். வேலூர் பேரூராட்சி செயல்அ லுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். வேலூர் பேரூராட்சி செயல்அ லுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

    வேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பரமத்திவேலூர் அரசு டாக்டர் கோகுல் தலைமையிலான செவிலியர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் மன ரீதியாக ஏற்படும் மன அழுத்தத்துக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அனைத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு ரத்த அழுத்த அளவு பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல்லில் மளிகை மற்றும் பலசரக்கு கடை வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் மளிகை மற்றும் பலசரக்கு கடை வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசுகையில், தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் போன்றவற்றை வணிகர்கள் விற்பனை செய்ய கூடாது. இதை மீறி விற்பனை செய்வோர் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது மிக அவசியம். மேலும் வணிகர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என வணிகர்கள் உறுதியேற்க வேண்டும். அவ்வாறு விற்பனை செய்வோர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

    இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் நாமக்கல் நகர மளிகை வர்த்தகர் சங்க தலைவர் பத்ரி நாராயணன், துணை தலைவர் ஜிக்கி ஜெகதீசன், பேரமைப்பு மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான மளிகைக் கடை உரிமை யாளர்கள் கலந்துகொண்டனர்.

    • தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தனர்.
    • கடையின் உரிமையாளர் சண்முகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் பரமத்திவேலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பரமத்திவேலூரில் உள்ள டீக்கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இதில் பரமத்திவேலூர் 4 ரோட்டில் உள்ள ஒரு கடையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடையின் உரிமையாளர் சண்முகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜா சாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், அருணகிரிநாதர் மலையில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    விழாவில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் விளக்கேற்றி தீப திருநாளை கொண்டாடினர்.

    • புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் இன்று முதல் தொடங்கியது.
    • இதையடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா மருத்துவமனையில் இன்று காலை ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் இன்று முதல் தொடங்கியது.

    ஆய்வு

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா மருத்துவமனையில் இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது புறநோநாளிகள் வரும் வாகனங்களை மருத்துவமனை மேற்பகுதிக்கு கொண்டு சென்று விடவும், புறநோயாளி பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி நுழைவுச்சீட்டு வழங்கவும் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து நோயாளிகள் வசதிற்கு ஏற்றவாறு இருக்கை வசதிகள், குடிநீர் வசதி மேற்கொள்ள உத்தரவிட்டார். மருத்து வமனைக்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் மருத்துவ வசதி குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகள் தேவைகளுக்கு ஏற்ப விரைந்து செயல்படவும் அறிவுறுத்தினார்.

    ஷேர் ஆட்டோ வசதி

    நாமக்கல் மாவட்ட புதிய தலைமை அரசு மருத்துவமனை திறந்ததை தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனை முழுவதுமாக அங்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதனால் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் ஆகியோர் இங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் புதிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷேர் ஆட்டோவில் புறநோயாளிகள் செல்ல பயண கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமமின்றி செல்ல நாமக்கல் தாசில்தார் சக்திவேல் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார். மேலும் பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற சிலுவம்பட்டியில் உள்ள புதிய மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    • கொழுந்தப்பட்டு அருகே உள்ள குப்பந்தாங்கல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முரளி (28). ‌லாரி டிரைவர்.
    • லாரி குமாரபாளையத்தை கடந்து பல்லக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரியின் முன்பக்க டயர் வெடித்து பஞ்சராகி நிலை தடுமாறியது.

    குமாரபாளையம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கொழுந்தப்பட்டு அருகே உள்ள குப்பந்தாங்கல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முரளி (28). லாரி டிரைவர்.

    டயர் வெடித்தது

    சம்பவத்தன்று இவரும் கிளீனர் பிரபாகரன் என்பவரும் கோவையிலிருந்து லாரியில் அலுமினிய பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டி ருந்தனர். இந்த லாரி குமாரபாளையத்தை கடந்து பல்லக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரியின் முன்பக்க டயர் வெடித்து பஞ்சராகி நிலை தடுமாறியது. இருப்பினும் டிரைவர் முரளி பிரேக் போட்டு லாரியை சமர்த்தியமாக நிறுத்தினார்.

    கண்டெய்னர் லாரி மோதல்

    அப்போது கோவை யிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி, பழுதடைந்து நின்ற லாரியின் பின்பகுதியில் பலமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் முன் பகுதி நொறுங்கி டிரைவரும், கிளீனரும் லாரிக்குள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    டிரைவர் பலி

    உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் போராடி டிரைவர் மற்றும் கிளீனரை வெளியே எடுத்தனர். படுகாயம் அடைந்த இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் கண்டெய்னர் லாரியின் டிரைவர் இறந்துவிட்டார். கிளீனர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சங்கரன் குடியிருப்பு வடக்குத் தெருவை சேர்ந்த முத்துராஜ் (50), கிளீனர் முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனிசாமி (வயது 43). இவர் லாரி புரோக்கர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி காயத்ரி உடல்நிலை பாதித்து இறந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
    • இந்த நிலையில் அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறப்படுறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், வி.நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 43). இவர் லாரி புரோக்கர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி காயத்ரி உடல்நிலை பாதித்து இறந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.

    இந்த நிலையில் பழனிசாமி மல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணை 2- வது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறப்படுறது. இதனால் மனமுடைந்த பழனிசாமி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் இருந்து திருட்டுதனமாக மணல் அள்ளுவதாக புகார் எழுந்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு காவிரி ஆற்றுக்கு செல்லும் அக்ரஹாரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் அனிச்சம்பாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் இருந்து திருட்டுதனமாக மணல் அள்ளுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு காவிரி ஆற்றுக்கு செல்லும் அக்ரஹாரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் மாட்டு வண்டியில் ஒன்றரை யூனிட் மணல் அள்ளிச்சென்ற பரமத்திவேலூரை சேர்ந்த சிங்காரம் (30) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பார்த்திபன் நாமக்கல்லில் உள்ள இ-சேவை மையத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • கடந்த 24-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பார்த்திபன் கரூரில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற சத்யா(37). இவரது மனைவி மாதேஸ்வரி(35). இவர்களுக்கு 2 பெண் குழந்தை மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. பார்த்திபன் நாமக்கல்லில் உள்ள இ-சேவை மையத்தில் வேலை பார்த்து வந்தார்.

    காணவில்லை

    இந்நிலையில் கடந்த 24-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பார்த்திபன் கரூரில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரது மனைவி மாதேஸ்வரி பார்த்திபனுக்கு இரவு முழுவதும் போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரி பல்வேறு இடங்களில் கணவரை தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    கிணற்றில் பிணமாக மீட்பு

    இந்நிலையில் நேற்று பார்த்திபன் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கிணற்றுக்குள் பிணமாக கிடப்பதாக அவரது உறவினர் மாதேஸ்வரிடம் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற மாதேஸ்வரி கணவன் உடலை பார்த்து கதறி அழுதார்.

    மேலும் இது குறித்து மோகனூர் போலீசில் மாதேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பார்த்திபன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அவர் எப்படி கிணற்றுக்குள் விழுந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயகுமார் (41) குமாரபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார்.
    • ரியல் எஸ்டேட் தொழில் எதுவும் செய்யாத நிலையில் விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய 3 பேரும் தொடர்ந்து பணம் கேட்டு ஈஸ்வரனிடம் வற்புறுத்தியுள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (41) தேங்காய் மண்டி வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது நண்பரான திருச்செங்கோடு அருகே மொளசியை சேர்ந்தவர் விஜயகுமார் (41) குமாரபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார்.

    ரியஸ் எஸ்டேட் தொழில்

    விஜயகுமார் மற்றும் அவரது மனைவி கவிதா (37) மற்றும் உறவினரான ஆண்டலூர்கேட்டை சேர்ந்த சுரேஷ் (45) ஆகிய 3 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், ஈஸ்வரனையும் கூட்டாக தொழில் செய்ய அழைத்துள்ளனர்.

    இதையடுத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்காக கடந்த 2021-ம் ஆண்டு முதல் பல தவணைகளாக ஈஸ்வரன் ரூ.17 லட்சம் பணத்தை விஜயகுமார் உள்ளிட்டவர்களிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    கொலை மிரட்டல்

    இதனிடையே ரியல் எஸ்டேட் தொழில் எதுவும் செய்யாத நிலையில் விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய 3 பேரும் தொடர்ந்து பணம் கேட்டு ஈஸ்வரனிடம் வற்புறுத்தியுள்ளனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரன் மேற்கொண்டு பணம் தராமல் இதுவரை கொடுத்த ரூ.17 லட்சத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு 3 பேரும் பணத்தை திருப்பி தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஈஸ்வரன் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் சோழிய வேளாளர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35). இவர் பொத்தனூரில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா (26). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் -மனைவியிடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிந்தராஜ் விரக்தியில் இருந்து வந்துள்ளார் .இந்நிலையில் நேற்று இரவு கோவிந்தராஜ் தனியாக வீட்டில் இருந்த போது மனைவியின் துப்பட்டாவை எடுத்து விட்டத்தில் மாட்டி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

      இன்று காலை அவரது உறவினர்கள் பார்த்த போது கோவிந்தராஜ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோவிந்தராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
      • இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbnamakkal.net என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டும் அடுத்தமாதம் (டிசம்பர்) 1-ந் தேதி மாலை 5.45 மணி வரை பெறப்பட உள்ளது.

      நாமக்கல்:

      நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

      இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbnamakkal.net என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டும் அடுத்தமாதம் (டிசம்பர்) 1-ந் தேதி மாலை 5.45 மணி வரை பெறப்பட உள்ளது. இதற்கான எழுத்துதேர்வு டிசம்பர் மாதம் 24-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பட்டய பயிற்சி தேர்ச்சி ஆகும். மேலும் தமிழ்நாடு கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24-ம் ஆண்டு அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி இணைய முகவரியில் விண்ணப்பித்து, பயிற்சியில் சேர்ந்து உள்ளவர்களும், இப்பணிக்கு உரிய சான்று மற்றும் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதினை கொண்டும், நாமக்கல் மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

      இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

      ×