என் மலர்
நாமக்கல்
- பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2023-2024-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் ரபி பருவத்திற்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்
- அனைத்து பயிர்களையும் மிகக்குறைந்த பிரிமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம்.
பரமத்திவேலூர்:
கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2023-2024-ன் கீழ் குத்தகைதாரர் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் ரபி பருவத்திற்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். நெல்-(சம்பா), சோளம், நிலக்கடலை, கரும்பு, சிறிய வெங்காயம், வாழை, மரவள்ளி, தக்காளி உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் மிகக்குறைந்த பிரிமியத்தில் காப்பீடு செய்து அதிகபட்ச காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெறலாம். விவசாயிகள் முன்மொழிவு படிவம், விண்ணப்ப படிவம், பயிர் சாகுபடி அடங்கல் அறிக்கை, ஆதார் அட்டை நகல் மற்றும் குறைந்தபட்ச இருப்பு வைத்துள்ள வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 5 சதவிகிதம் பிரிமியமும், இதர குறுகிய காலப்பயிர்களுக்கு 1.5 சதவிகித பிரிமியமும் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் அருகிலுள்ள கபிலர்மலை வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறை விரிவாக்க அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.
அரசால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்கள், அந்த கிராமத்தில் எந்தெந்த பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது, காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி, விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிருக்கு எவ்வளவு பிரிமியம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்களை விவசாயிகள் தமிழக அரசின் விவசாயிகளுக்கான சிறப்பு செயலியான உழவன் செயலியில் தங்களது கைப்பேசியிலியே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
- இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப்-4 தேர்விற்கு இலவச பயிற்சி மற்றும் தேர்வு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டத்தின்படி நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
2023-ம் ஆண்டிற்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவச நேரடி விரைவுப் பயிற்சி மற்றும் திருப்புதல் தேர்வு, திங்கட்கிழமை தோறும் காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பாடத் திட்டத்திற்கான முழுதேர்வு வியாழக்கிழமை தோறும் காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது.
பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுய விவரத்தினை பதிவு செய்து பயன்பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- சில வருடங்களுக்கு முன்பு பிளாட் போட்டு விற்பனை செய்த போது வேலூர் பேரூராட்சி பூங்காவிற்கு என ரூ.10 கோடி மதிப்புடைய 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.
- பூங்கா அமைக்க பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை மோகனூர் ரோடு சாலையில் சின்னு நகர் அமைந்துள்ளது.
இந்த நகரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிளாட் போட்டு விற்பனை செய்த போது வேலூர் பேரூராட்சி பூங்காவிற்கு என ரூ.10 கோடி மதிப்புடைய 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.
கடந்த பல வருடங்களாக பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட பயன்பாடு இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அங்கு பூங்கா அமைக்க வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்தனர்.
இதை தொடர்ந்து பூங்கா அமைக்க பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்ோது பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனியார் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது. இதனால் பேரூராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு கூறுகையில், சின்னு நகரில் பேரூராட்சி பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் தற்போது தனி நபர்கள் ஆக்கிரப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பழைய பைல்களை ஆய்வு செய்து வருகிறோம். வேலூர் பேரூராட்சியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம்.
பேரூராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை ஆக்கிரப்பு செய்தவர்கள் தாங்களாக பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவொரு ஆக்கிர மிப்புக்கும் பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்காது என்றார்.
- டிசம்பர் மாதம் 9-ந் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
- மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்கு களுக்கு மேல்முறையீடு கிடையாது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரு மான குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி நாமக்கல் - திருச்செங்கோடு ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சேந்தமங்கலம் நீதிமன்றம் மற்றும் குமார பாளையம் நீதிமன்றத்திலும் வருகிற டிசம்பர் மாதம் 9-ந் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவகாரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் இந்த கோர்ட்டில் விசாரிக்கப்படும்.
மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்கு களுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள், நீதிமன்றத்தில் மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால் மக்கள் நீதிமன்றம் மூலம் சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
- அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ சின்னசாமி மீது மோதியது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் ராஜம் தியேட்டர் அருகே உள்ள ஓட்டலில் டிபன் வாங்கிக் கொண்டு ரோட்டை கடந்து செல்ல வேண்டி ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோ சின்னசாமி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரில் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஷேர் ஆட்டோ டிரைவர் பாபு என்பவரை கைது செய்தனர்.
- பரமத்திவேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
- பேரூராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். வேலூர் பேரூராட்சி செயல்அ லுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். வேலூர் பேரூராட்சி செயல்அ லுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.
வேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பரமத்திவேலூர் அரசு டாக்டர் கோகுல் தலைமையிலான செவிலியர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் மன ரீதியாக ஏற்படும் மன அழுத்தத்துக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து அனைத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு ரத்த அழுத்த அளவு பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- நாமக்கல்லில் மளிகை மற்றும் பலசரக்கு கடை வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல்லில் மளிகை மற்றும் பலசரக்கு கடை வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசுகையில், தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் போன்றவற்றை வணிகர்கள் விற்பனை செய்ய கூடாது. இதை மீறி விற்பனை செய்வோர் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது மிக அவசியம். மேலும் வணிகர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என வணிகர்கள் உறுதியேற்க வேண்டும். அவ்வாறு விற்பனை செய்வோர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் நாமக்கல் நகர மளிகை வர்த்தகர் சங்க தலைவர் பத்ரி நாராயணன், துணை தலைவர் ஜிக்கி ஜெகதீசன், பேரமைப்பு மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான மளிகைக் கடை உரிமை யாளர்கள் கலந்துகொண்டனர்.
- தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தனர்.
- கடையின் உரிமையாளர் சண்முகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என பரமத்திவேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் பரமத்திவேலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பரமத்திவேலூரில் உள்ள டீக்கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் பரமத்திவேலூர் 4 ரோட்டில் உள்ள ஒரு கடையில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடையின் உரிமையாளர் சண்முகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜா சாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், அருணகிரிநாதர் மலையில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் விளக்கேற்றி தீப திருநாளை கொண்டாடினர்.
+2
- புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் இன்று முதல் தொடங்கியது.
- இதையடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா மருத்துவமனையில் இன்று காலை ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் இன்று முதல் தொடங்கியது.
ஆய்வு
இதையடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா மருத்துவமனையில் இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது புறநோநாளிகள் வரும் வாகனங்களை மருத்துவமனை மேற்பகுதிக்கு கொண்டு சென்று விடவும், புறநோயாளி பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி நுழைவுச்சீட்டு வழங்கவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நோயாளிகள் வசதிற்கு ஏற்றவாறு இருக்கை வசதிகள், குடிநீர் வசதி மேற்கொள்ள உத்தரவிட்டார். மருத்து வமனைக்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் மருத்துவ வசதி குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகள் தேவைகளுக்கு ஏற்ப விரைந்து செயல்படவும் அறிவுறுத்தினார்.
ஷேர் ஆட்டோ வசதி
நாமக்கல் மாவட்ட புதிய தலைமை அரசு மருத்துவமனை திறந்ததை தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனை முழுவதுமாக அங்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் ஆகியோர் இங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் புதிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷேர் ஆட்டோவில் புறநோயாளிகள் செல்ல பயண கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமமின்றி செல்ல நாமக்கல் தாசில்தார் சக்திவேல் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார். மேலும் பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற சிலுவம்பட்டியில் உள்ள புதிய மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
- கொழுந்தப்பட்டு அருகே உள்ள குப்பந்தாங்கல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முரளி (28). லாரி டிரைவர்.
- லாரி குமாரபாளையத்தை கடந்து பல்லக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரியின் முன்பக்க டயர் வெடித்து பஞ்சராகி நிலை தடுமாறியது.
குமாரபாளையம்:
திருவண்ணாமலை மாவட்டம் கொழுந்தப்பட்டு அருகே உள்ள குப்பந்தாங்கல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முரளி (28). லாரி டிரைவர்.
டயர் வெடித்தது
சம்பவத்தன்று இவரும் கிளீனர் பிரபாகரன் என்பவரும் கோவையிலிருந்து லாரியில் அலுமினிய பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டி ருந்தனர். இந்த லாரி குமாரபாளையத்தை கடந்து பல்லக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரியின் முன்பக்க டயர் வெடித்து பஞ்சராகி நிலை தடுமாறியது. இருப்பினும் டிரைவர் முரளி பிரேக் போட்டு லாரியை சமர்த்தியமாக நிறுத்தினார்.
கண்டெய்னர் லாரி மோதல்
அப்போது கோவை யிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி, பழுதடைந்து நின்ற லாரியின் பின்பகுதியில் பலமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் முன் பகுதி நொறுங்கி டிரைவரும், கிளீனரும் லாரிக்குள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
டிரைவர் பலி
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் போராடி டிரைவர் மற்றும் கிளீனரை வெளியே எடுத்தனர். படுகாயம் அடைந்த இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் கண்டெய்னர் லாரியின் டிரைவர் இறந்துவிட்டார். கிளீனர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சங்கரன் குடியிருப்பு வடக்குத் தெருவை சேர்ந்த முத்துராஜ் (50), கிளீனர் முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பழனிசாமி (வயது 43). இவர் லாரி புரோக்கர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி காயத்ரி உடல்நிலை பாதித்து இறந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
- இந்த நிலையில் அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறப்படுறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், வி.நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 43). இவர் லாரி புரோக்கர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி காயத்ரி உடல்நிலை பாதித்து இறந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் பழனிசாமி மல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணை 2- வது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறப்படுறது. இதனால் மனமுடைந்த பழனிசாமி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு ராசிபுரம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






