search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.10 கோடி நிலம் ஆக்கிரமிப்பை  அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை
    X

    ரூ.10 கோடி நிலம் ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை

    • சில வருடங்களுக்கு முன்பு பிளாட் போட்டு விற்பனை செய்த போது வேலூர் பேரூராட்சி பூங்காவிற்கு என ரூ.10 கோடி மதிப்புடைய 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.
    • பூங்கா அமைக்க பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை மோகனூர் ரோடு சாலையில் சின்னு நகர் அமைந்துள்ளது.

    இந்த நகரில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிளாட் போட்டு விற்பனை செய்த போது வேலூர் பேரூராட்சி பூங்காவிற்கு என ரூ.10 கோடி மதிப்புடைய 50 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.

    கடந்த பல வருடங்களாக பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட பயன்பாடு இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து அங்கு பூங்கா அமைக்க வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்தனர்.

    இதை தொடர்ந்து பூங்கா அமைக்க பேரூராட்சி ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்ோது பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனியார் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்து இருந்தது தெரியவந்தது. இதனால் பேரூராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு கூறுகையில், சின்னு நகரில் பேரூராட்சி பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்ட இடம் தற்போது தனி நபர்கள் ஆக்கிரப்பில் உள்ளது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து பழைய பைல்களை ஆய்வு செய்து வருகிறோம். வேலூர் பேரூராட்சியில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம்.

    பேரூராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தை ஆக்கிரப்பு செய்தவர்கள் தாங்களாக பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    எந்தவொரு ஆக்கிர மிப்புக்கும் பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்காது என்றார்.

    Next Story
    ×