search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மளிகை கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
    X

    விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    மளிகை கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

    • நாமக்கல்லில் மளிகை மற்றும் பலசரக்கு கடை வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் மளிகை மற்றும் பலசரக்கு கடை வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசுகையில், தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் போன்றவற்றை வணிகர்கள் விற்பனை செய்ய கூடாது. இதை மீறி விற்பனை செய்வோர் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது மிக அவசியம். மேலும் வணிகர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என வணிகர்கள் உறுதியேற்க வேண்டும். அவ்வாறு விற்பனை செய்வோர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

    இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் நாமக்கல் நகர மளிகை வர்த்தகர் சங்க தலைவர் பத்ரி நாராயணன், துணை தலைவர் ஜிக்கி ஜெகதீசன், பேரமைப்பு மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான மளிகைக் கடை உரிமை யாளர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×