என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது 3 பேர் ஆடுகளை திருட முயன்றனர்.
    • மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    நாமக்கல்:

    மோகனூர் தாலுகா, அரூர் பஞ்சாயத்து, ஈச்சங்கோவில் பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 44), விவசாயி. இவரது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றார்.

    பின்னர் மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது 3 பேர் ஆடுகளை திருட முயன்றனர்.

    அதைக்கண்டு ரங்கசாமி சத்தம் போடவே 2 பேர் ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையம் பஞ்சாயத்து, அக்கரையாம்பாளையத்தை சேர்ந்த ரவி மகன் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது.

    இவர், ஆடு மற்றும் கோழிகளைத் திருடி வள்ளிபுரத்தில் உள்ள இறைச்சி கடையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில், மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
    • நிலைதடுமாறி விழுந்து அருகில் உள்ள ஒரு மரத்தில் மோதியது.

    பரமத்திவேலூர்:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி அர்பன் பகுதியைச் சேர்ந்தவர் மோடன் வெங்கிட்டு. இவரது மகன் மோடன் கிரண் (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இவரது நண்பர் திருப்பதி, அசோக் நகரை சேர்ந்தவர் விஜயபிரதாப்ரெட்டி (25). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். நாமக்கல் அருகே உள்ள புலவர்பாளையம் சர்வீஸ் ஸ்டேஷன் அருகே கல்லூரி மாணவர் மோடன் கிரண் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையின் இடது புறத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி விழுந்து அருகில் உள்ள ஒரு மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மோடன் கிரணையும், அவரது நண்பர் விஜய பிரதாப்ரெ ட்டியையும் அவ்வழியாக வந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் மோடன் கிரண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் விஜயபிரதாப்ரெட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 பேர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு தென்னந்தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 பேர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சேட்(42), மாயவன் (61),குப்புசாமி(43), ரஞ்சித்குமார் (45),சந்திரன்(52), நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சக்திவேல் (53), ஒழகூர்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (50) மற்றும் குப்புச்சிபாளையம் அருகே உள்ள பொய்யேரியை சேர்ந்த ஜெயக்குமார் (49) ஆகிய 8 பேர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூய்மை பணி முகாம் 6-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
    • இதில் 90-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 6-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.

    முகாமில் பேரூராட்சி மன்றத் தலைவர் கருணாநிதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர்செல்வம், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 90-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

    இதில், பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வாறுதல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.

    • காவேரி ஆர்.எஸ்.பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
    • கடந்த 5 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளியில் இரவு நேர காவலாளியாக இருந்து வந்தார்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ்.பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் அந்த பகுதியை சேர்ந்த நடராஜன் (வயது78) காவலாளியாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக தொடக்கப் பள்ளியில் இரவு நேர காவலாளியாக இருந்து வந்தார்.

    கொலை

    இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தபோது மர்மமான முறையில் நடராஜன் இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரி யர்கள் பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிபாளையம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    4 பேர் பிடிபட்டனர்

    விசாரணையில் இரவு நேரத்தில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர் சிலர் மது குடிக்கவும்,. சீட் ஆடுவ தற்கும், கஞ்சா போடு வதற்கும், பள்ளி வளா கத்திற்கு வருகின்றனர். சம்பவத்தன்று அந்த வாலி பர்களுக்கும் நடராஜருக்கும் இடையே வாக்குவாத ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    அதனால் அந்த அந்த வாலிபர்கள் நடராஜனை கழுத்து நெறித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதி சேர்ந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவிகள் ஆகியன மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.
    • எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்த மங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் பதிவு செய்த வாக்கை உறுதி செய்யும் கருவிகள் ஆகியன மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்த பாதுகாப்பு அறையில் சுமார் 4216 எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு எந்தி ரங்களும், 2622 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 970 வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் என மொத்தம் 7,806 எலக்ட்ரானிக் எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையை, அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு எந்திர பாதுகாப்பு அறை சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக் கப்படு வதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் மற்றும் தேர்தல் அலுவலர்கள், அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

    • கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரின் பன்றி பண்ணையில் இருந்து கடந்த மார்ச் 9-ந் தேதி 2 பன்றிகள் இறந்தன.
    • கடந்த மார்ச் 23-ந தேதி அதன் முடிவு பெறப்பட்டது. அந்த ஆய்வில், இறந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் தாக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஒன்றியம், ஆர்.புதுப்பாளையம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி என்பவரின் பன்றி பண்ணையில் இருந்து கடந்த மார்ச் 9-ந் தேதி 2 பன்றிகள் இறந்தன. அதையடுத்து, இறந்த பன்றிகள், பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி நோய்க் குறியியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பன்றியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், சென்னையில் உள்ள மத்திய கால்நடை மருத்துவ கல்லூரி பல்கலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டடது. கடந்த மார்ச் 23-ந தேதி அதன் முடிவு பெறப்பட்டது. அந்த ஆய்வில், இறந்த பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வைரஸ் தாக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறை மூலம், கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில், 4 குழுக்கள் அமைக்கப்பட்டு, பன்றி பண்ணையைச் சுற்றி, 1 கி.மீ. தூரத்துக்கு தீவிர கண்காணிப்பிலும், 9 கி.மீ. தூரத்துக்கு, நோய் பரவல் மற்றும் நோய்த் தன்மை பரவாமல் தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

    பன்றி பண்ணையில் ஏற்பட்டுள்ள ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல், நோய் கிளர்ச்சி குறித்து சென்னை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குனர் உத்தரவின்படி, அந்த பண்ணையில் இருந்த 18 பன்றி குட்டிகள், மனிதாபிமான முறையில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் அழிக்கப்பட்டது.

    தொடர்ந்து, ஒரு ஆண்டுக்கு, இந்த பன்றி காய்ச்சல் குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினரால் பன்றி பண்ணைகள் கண்காணிக்கப்படும்.

    இந்த பன்றிக் காய்ச்சல், பன்றிகளில் இருந்து, பன்றிகளுக்கு மட்டுமே பரவும் தன்மை கொண்டது. இது மற்ற விலங்குகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ பரவாது. அதனால், பொதுமக்கள் யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • பரமத்திவேலூர், சேந்தமங்கலம், மோகனூர், ராசிபுரம் ஆகிய ஊருக்கு செல்லக்கூடிய டவுன் பஸ் நிறுத்தும் இடத்தில், நிழல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • இந்த நிழல் கூடத்தில் பயணிகள் இருக்கைகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பெண்கள் வளையல் கடைகள் வைத்துக் கொண்டு பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர்டிஸ் .

    நாமக்கல்:

    லாரி தொழில் மற்றும் முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதலிடம் வகிக்கிறது. இதனால் தினமும் நாமக்கல்லுக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    நாமக்கல் பஸ் நிலையத்தி லிருந்து மதுரை, கும்பகோணம், திருச்சி, கோவை, ஓசூர், சேலம் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும். இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்க வசதியாக நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பரமத்திவேலூர், சேந்தமங்கலம், மோகனூர், ராசிபுரம் ஆகிய ஊருக்கு செல்லக்கூடிய டவுன் பஸ் நிறுத்தும் இடத்தில், நிழல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழல் கூடத்தில் பயணிகள் இருக்கைகள் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பெண்கள் வளையல் கடைகள் வைத்துக் கொண்டு பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர். இதனை போலீசாரும், அதிகாரிகளும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.

    இதனால் பயணிகள் தினமும் தற்போது அடிக்கும் வெயிலில் தவித்து வருகி றார்கள். இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பஸ் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கடந்த மாதம் 21-ந் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
    • அன்று முதல் 24-ந் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள வடுகபாளையத்தில் எழுந்தருளியுள்ள கண்ணனூர் மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த மாதம் 21-ந் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. அன்று முதல் 24-ந் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    தொடர்ந்து 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தினந்தோறும் இரவு பூவோடு பற்ற வைத்து ஆடும் நிகழ்ச்சியும், மீண்டும் காலையில் பூவோடு ஆடி கோவில் முன்பு கீழே கொட்டி அம்மன் பாடல்களை வருத்தி பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    30-ந் தேதி மாலை அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்துதலும், இரவு மாவிளக்கு பூஜையும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று கம்பம் பிடுங்கி, கோவில் பூசாரி தோளில் சுமந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் பொதுகிணற்றில் விடும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வடுகபாளையத்தில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா, விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
    • இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

    பரமத்திவேலூர்:

    வாரணாசியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை, நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை கடந்து செல்கிறது. மேலும் இந்த நெடுஞ்சாலை, பரமத்திவேலூர் காவிரியின் இரட்டை பாலத்தை கடந்தும் செல்கிறது.

    ஏராளமான போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், காவிரி பாலம் அருகே பெங்களூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி பெரிய வெங்காயம் பாரம் ஏற்றி லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென நிலை தடுமாறிய லாரி சாலையின் இடதுபுறம் உள்ள சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த, டிரைவர் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் என்பவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

    இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் உதவியுடன் கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். லாரி பள்ளத்தில் விழாதபடி தடுத்து, வெங்காய பாரத்தை வேறு லாரிக்கு மாற்றினர். அதன் பிறகு லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.

    • கட்டண உயர்வால் லாரி, வேன் மற்றும் சரக்கு வாகனங்கள் வாடகை கட்டணமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு விலை உயர்வால் லாரி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. சுங்கசாவடிகளையும் அந்த அமைச்சகமே தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்து கட்டணம் வசூல் செய்ய அனுமதி அளித்து வருகிறது. நாடு முழுவதும் 566 சுங்க சாவடிகள் உள்ளன.

    தமிழகத்தில் மட்டும் 49 சுங்க சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தபடி 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்க சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியது.

    அதன்படி கார், ஜுப், வேன் உள்பட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.95 என்பது ரூ.5 உயர்ந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மினி பஸ் உள்பட வானங்களுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.165 ஆகவும், பஸ் டிரக் உள்பட வாகனங்களுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.345 ஆகவும், எச்.சி.எம். வாகனங்களுக்கு ரூ.30 அதிகாரித்து ரூ.540 ஆகவும், ஓவர் சைஸ் வாகனங்களுக்கு ரூ.625-ல் இருந்த ரூ.30 உயர்ந்து ரூ.655 ஆகவும் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

    அதன்படி நாடு முழுவதும் உள்ள 460 சுங்கசாவடிகளில் இந்த கட்டண உயர்ல் அமுலுகு வந்துள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் சூரப்பட்டு, சென்னை வானகரம், திண்டிவனம், சேலம் ஆத்தூர், போகலூர், புதுக்கோட்டை மாவட்டம் பூதக்குடி, சென்னை சமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலூர்டி, கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி, மாத்தூர, நெல்லூர், நாங்குநேரி, ஸ்ரீ பெரும்புதூர், பள்ளிகொண்டா, பரனூர், பட்டறை பெரும்புதூர், புதுக்கோட்டை வாகைகுளம், எஸ்.வி.புரம். சாலை புதூர், செண்பகம்பேட்டை, திருப்பாச்சேத்தி, வாணயம்படி ஆகிய சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த கட்டண உயர்வால் லாரி, வேன் மற்றும் சரக்கு வாகனங்கள் வாடகை கட்டணமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் சுங்கச்சவாடிகள் முன்பு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை இந்த சுங்கசாவடிகள் முன்பு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்லில் கீரம்பூர்டி சுங்க சாவடியில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமான லாரி உரிமையாளர்கள், மணல் லாரி, டேங்கர் லாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு உள்பட பல்வேறு விலை உயர்வால் லாரி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுங்க கட்டண உயர்வால் தொழில் மேலும் நலிவடையும் உள்ளது. இதனால் காலாவதியான சுங்கசாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும், சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் விரைவில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    • இரவு சுரேஷ் குடிபோதையில் எங்களது வீட்டுக்கு வந்தார். அப்போது நான் வீட்டுக்கு வரக்கூடாது என்று மீண்டும் கண்டித்தேன்.
    • நள்ளிரவு அவரது வீட்டு முன்பு உடலையும், மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு தப்பிச் சென்றேன்‌.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த ராமநாதபுரம் புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி அழகம்மாள் 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். சுரேஷ் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சுரேஷ் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடினர். நேற்று அதிகாலை தலையில் பலத்த காயங்களுடன் சுரேஷ் அவரது வீட்டு முன்பு இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சேந்தமங்கலம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷுக்கும், எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டியை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.

    இதில் ஏற்பட்ட தகராறில், அவரது 19 வயது மகனான என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் சந்துரு என்பவர் சுரேசை அடித்துக் கொன்று வீட்டு வாசலில் வீசி சென்றது தெரிய வந்தது. இதை அடுத்து சந்துருவை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரிடம் சந்துரு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயுடன் சுரேஷ் தகாத உறவில் ஈடுபட்டு வந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை. இது குறித்து பலமுறை எனது தாய் மற்றும் சுரேஷிடம் கண்டித்தேன். ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ் குடிபோதையில் எங்களது வீட்டுக்கு வந்தார். அப்போது நான் வீட்டுக்கு வரக்கூடாது என்று மீண்டும் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் கல்லை எடுத்து போதையில் இருந்த சுரேஷை தாக்கினேன்.

    பின்பக்க தலையில் காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் உடனடியாக அருகில் இருந்த மினி ஆட்டோவை வாடகைக்கு எடுத்து சுரேஷ் குடி போதையில் இருப்பதாக கூறி, அவரையும், அவரது டூவீலரையும் ஆட்டோவில் தூக்கிப் போட்டு, நள்ளிரவு அவரது வீட்டு முன்பு உடலையும், மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு தப்பிச் சென்றேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதை அடுத்து சந்துருவை போலீசார் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×