search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோகனூர் அருகே ஆடு, கோழிகளை திருடி விற்ற இளைஞர் கைது
    X

    மோகனூர் அருகே ஆடு, கோழிகளை திருடி விற்ற இளைஞர் கைது

    • பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது 3 பேர் ஆடுகளை திருட முயன்றனர்.
    • மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    நாமக்கல்:

    மோகனூர் தாலுகா, அரூர் பஞ்சாயத்து, ஈச்சங்கோவில் பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 44), விவசாயி. இவரது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து விட்டு தூங்க சென்றார்.

    பின்னர் மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு ரங்கசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது 3 பேர் ஆடுகளை திருட முயன்றனர்.

    அதைக்கண்டு ரங்கசாமி சத்தம் போடவே 2 பேர் ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் எஸ்.வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையம் பஞ்சாயத்து, அக்கரையாம்பாளையத்தை சேர்ந்த ரவி மகன் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது.

    இவர், ஆடு மற்றும் கோழிகளைத் திருடி வள்ளிபுரத்தில் உள்ள இறைச்சி கடையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில், மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×