search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8 பேர்"

    நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள மல்லிக்குட்டை கிராமம் மன்னாதன் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சதிஷ்.  இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில்  அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் மோதிக்கொண்டனர்.

    இதுபற்றிய புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பை சேர்ந்த  சேர்ந்த நடேசன்,  ராமகிருஷ்ணன், சதிஷ், தனபால், பார்த்திபன், சின்னத்தங்கம், கவிதா, சந்தியா ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×